Saturday, March 16, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் -8 !

பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு மண பந்தத்தை உருவாக்கி வாழும் உரிமை பெண்ணுக்கு அப்போது கிடைக்கவில்லை. இன்றும் கூட அது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆணுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. 

கடந்த தலைமுறையிலிருந்து இருதார அல்லது பலதார மணம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் படிப்பறிவு பெற்றது தான் முதல் காரணம். இன்றைய சூழலில் ஆணால் அவ்வளவு எளிதாக முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்வதும் மரியாதைக் குறைவான விசயமாக பாரக்கப்படுகிறது. இன்று இருதார மணம் என்பது இயல்பான ஒன்றாக பாரக்கப்படுவதில்லை. ஆனால் முன்பு அது இயல்பாக பார்க்கப்பட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான முதல் தேவையாக பாலியல் விருப்பம் அல்லது காமமே இருந்திருக்கிறது. பெரும்பாலும் மனிதர்களால் ஒரே ஆணுடன் அல்லது ஒரே பெண்ணுடன் திருப்தி அடையவே முடியாது. நிர்பந்தங்களால் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எப்படியான மனிதராக இருந்தாலும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பு நிச்சயம் உருவாகவே செய்யும். பெரும்பாலும் அந்த ஈர்ப்பை நிராகரிப்பது அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பது தான் தற்போதைய வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் என்பதால் கடந்து போய்விடுகிறார்கள். அந்த ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

திருமணம் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானது என்றாலும் காலம் காலமாக பெண் மீது நிகழ்த்தபடும் ஒரு ஒடுக்குமுறையாகவே இருந்து வருகிறது. இன்றும் கூட பெரிய அளவில் மாற்றம் உருவாகிவிடவில்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த போது நிலையற்ற அரசியல் தன்மை நிலவியதால் அடிக்கடி நிகழ்ந்த போர்களால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 'பெண் கொள்ளை' என்ற ஒன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த கொள்ளையிலிருந்து பெண்களைக் காப்பாற்றவே பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க பழக்கப்படுத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனாலேயே அதிகளவில் குழந்தைத் திருமணங்களும் நிகழ ஆரம்பித்தன என்கிறார்கள். தமிழக சூழலில் வரதட்சணை தான் பெண் குழந்தை, சுமையாக கருதப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்திருக்கிறது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பரிமாணமடைந்து வரதட்சணை இன்றும் அப்படியே தான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது மாறி வரதட்சணை கொடுப்பது கௌரவம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இப்போதும் நேரடியாக வரதட்சணை கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வட இந்தியாவின் சில மாநிலங்களில் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது. அப்படி மணமுடிக்கப்படும் பெண்கள் அதீத கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.ஒரு சில இடங்களில் மணமுடிக்கப்படும் பெண் அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் உடைமையாக்கப்படுவது இன்றும் நின்ற பாடில்லை. இன்னும் பல மோசமான பழக்கவழக்கங்களால் வட இந்திய பெண்கள் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியறிவு ஒன்று தான் அவர்களை இக்கொடுமைகளிலிருந்து வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலைமை அந்த அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது என்பது தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. வரதட்சணையால் நின்று போன திருமணங்கள் நிறைய இருக்கின்றன. வரதட்சணை கம்மியாக கேட்கிறார்கள் என்பதற்காகவும், வசதியாக இருக்கிறார்கள் என்பதற்காகவும் பெண்ணை விட வயதில் பெரிய வித்தியாசம் உள்ளவர்களுக்கு அல்லது தெரிந்தே பொருத்தமில்லாதவர்களுக்கு மணமுடிப்பது என்பது முன்பிருந்தே நடந்து வருகிறது. இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படியான திருமணங்கள் நடைபெறவே செய்கின்றன. ஏற்கனவே குடும்பம் என்ற அமைப்பு மோசமான முறையில் தான் மணப்பெண்ணையோ, மணமகனையோ தேர்ந்தெடுக்கிறது. அந்த தேர்வை மேலும் பலவீனப்படுத்துவதாக வரதட்சணை இருக்கிறது.

நினைத்து பார்க்கவே முடியாத விதத்தில் எல்லாம் திருமணங்கள் ஒரு சில சமூகங்களில் இன்றும் நடைபெறவே செய்கின்றன. மனைவி இறந்ததால் சொந்த பேத்தியையே திருமணம் செய்து கொண்டதாக ஒருவர் கூறியது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வதும் சில சமூகங்களில் வழக்கத்தில் இருக்கிறது. இதன் பின்னணியில் சொத்து மட்டுமே பிரதான காரணமாக இருக்கலாம். சம்மதமில்லாமல் நடக்கும் இப்படியான திருமணங்களால் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மிகவும் பாதிப்படைகிறது. அதிக வயது ஆண் , வயதிற்கு வந்த குறைந்த வயது பெண்ணை சம்மதத்துடன் மணமுடிக்க அனுமதிக்கும் சமூகம், அதிக வயது பெண், வயதிற்கு வந்த குறைந்த வயது ஆணை மணமுடிக்க அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அவர்களைப் பார்வையாலேயே கொல்கிறது. ஆண் - பெண் பாலியல் ஈர்ப்பு யாருக்கு , எப்படி, எங்கே தோன்றும் என்று உறுதியாக கூற முடியாது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் , யாருடனும் ஈர்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

மனித வரலாற்றின் தொடக்க காலத்தில், இன்று இன்செஸ்ட் (incest) என்று சொல்லப்படும் உறவு முறைகள் இயல்பானவையாக இருந்திருக்கின்றன. தாய் - மகன், தந்தை -மகள், சகோதரர் - சகோதரி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு இடையில் பாலுறவுடன் கூடிய உறவு உருவாவதே இன்செஸ்ட் உறவு முறை எனப்படுகிறது. நாகரிக சமூகம் உருவாகாத வரை இந்த உறவு முறை பெரிய அளவில் இருந்திருக்கிறது. இந்த உறவு முறைகளால் உருவாகும் குழந்தைகள் வீரியமில்லாததாக இருந்ததாலும் இந்த உறவு முறை கைவிடபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பொருந்தாததை நீக்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றுதான். அது தான் நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலகெங்குமே இந்த உறவு முறைகள் இன்று வரை தொடரத்தான் செய்கின்றன. இதிலுமே பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் உறவுகளால் எந்தச் சிக்கலும் இல்லை. சம்மதமில்லாமல் நடப்பவை பாலியல் துன்புறுத்தலாகவும், பாலியல் வன்கொடுமையாகவுமே பார்க்க வேண்டியிருக்கிறது . சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு முறைகளில் உருவாகும் பாலியல் சிக்கல்களே பேசப்படாத போது , ஏற்கொள்ளப்படாத இன்செஸ்ட் உறவு முறைகளில் உருவாகும் சிக்கல்கள் மட்டுமல்ல உறவு முறையே வெளியே சொல்லப்படாததாகவே இருக்கிறது.

காலங்காலமாக கற்பித்து வந்த புனித பிம்பங்களைக் கடந்தே இன்செஸ்ட் உறவு முறைகள் நிகழ்கின்றன. அதிலும் அம்மா என்ற உறவு இங்கே மிகவும் அதிகமாக புனிதப்பட்ட ஒன்று. இப்படியான நிலையிலும் அம்மா-மகன் உறவென்பது இங்கு நிகழ்ந்து தான் வருகிறது. இயற்கையின் நியதிபடி பாலுறவிற்கு வயது வந்த இருவர் தான் தேவை , அந்த இருவர் யாராகவும் இருக்கலாம் என்பது இன்செஸ்ட் உறவுகளில் நிஜமாகிறது. காமம் குறித்து நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசாத சூழல் தான் இந்திய அளவிலேயே இருக்கிறது. ஆனாலும் ஒரு சில பெற்றோர்கள் பேசத்தான் செய்கிறார்கள். இயல்பாக நிகழும் இந்த உறவை அனுமதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான சூழலில் பரஸ்பர விருப்பத்துடன் நிகழும் அம்மா - மகன் உறவென்பது அல்லது இன்செஸ்ட் உறவென்பது ஆரோக்கியமானதா ? இல்லையா ? என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இன்செஸ்ட் உறவில் இருப்பவர்கள் இந்த உறவு சரியென்றே வாதிடுகிறார்கள். " எனது பார்வையில் என்றால், போதுமான அளவு பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. செக்ஸில் நிறைய விசயங்களை பரிசோதனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது திறம்பட செயல்பட முடியும். அம்மாவின் பார்வையில் என்றால், அவருக்கும் பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. கணவனிடமிருந்து போதிய செக்ஸ் கிடைக்கப் பெறாதவர்கள் வெளியே வேறு ஆண்களை தேடிப் போய் சிக்கலில் மாட்டுவதை விட வீட்டிலேயே கிடைப்பது எவ்வளவோ பாதுகாப்பு. அதுவும் இல்லாமல் குறைந்த வயது ஆண் அந்த பெண்ணை வயதில் இன்னும் குறைந்தவராகவே நடத்துவார். இதுவும் அப்பெண்ணுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது " அம்மா - மகன் உறவில் இருக்கும் ஒரு மகனின் வாதமிது. இப்படி சகோதரன் - சகோதரி , அப்பா - மகள் உறவில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்த உறவு பிடித்திருப்பதாகவும் , இதை தொடர விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் அல்லது பெண்களுடன் ஒரே நேரத்தில் கலவி கொள்ளும் விருப்பம் நிறைய மனங்களில் இருக்கவே செய்யும். அது இயல்பானதும் கூட. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் இது சாத்தியமே இல்லை என்று தான் கூற முடியும். ஒரே ஆண் வெவ்வேறு காலகட்டங்களில் பல பெண்களுடன் கலவி கொள்வதும், ஒரே பெண் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல ஆண்களுடன் கலவி கொள்வதும் பலருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் என்பது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். காமத்தில் இது தான் சரி, இது தவறு என்று பிரிக்க முடியாத அளவிற்கு மனிதர்களை காமம் ஆட்டிவைக்கிறது. ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் கூட்டாக சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை இனி தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இந்த இடத்தில் பழைய கற்பிதங்கள் அனைத்தும் உடைபட்டுபோய்விடும். இப்படியான மனநிலையில் தான் நாம் ( LGBT ) எனப்படும் பால் சிறுபான்மையினர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவே LGBT வகையினர் இருக்கின்றனர். இந்தியாவில் இப்போது தான் சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண்ணும் பெண்ணும் (L ), ஆணும் ஆணும் (G) விருப்பம் கொள்வதும், சேர்ந்து வாழ நினைப்பதும் இயல்பான இயற்கையான ஒன்று என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு ஆணையும் பிடிக்கும் , பெண்ணையும் பிடிக்கும் (B) இருவருடனும் உறவைத் தொடர விரும்புவார்கள்.திருநங்கை , திருநம்பியை (T) விரும்புபவர்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட அங்கீகாரத்துடன், சமூக அங்கீகாரமும் கிடைத்தால் மட்டுமே பால் சிறுபான்மையினர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும். எப்போதும் போல இதற்கும் தடையாக இருப்பது குடும்பம் என்ற அமைப்பு தான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு பிடிப்பதில்லை. ஒரே மாதிரியான உணவை உண்ண எல்லோருக்கும் உடலும் இடம் தராது, ஆனாலும் ஏதேனும் ஒரு உணவை உண்டு தான் ஆக வேண்டும், அதே தான் காமத்திலும். உணவும் காமமும் ஒன்றுதான்.

பசியுணர்வும், பாலுணர்வுமே நம்மை வழிநடத்துகின்றன. வாழ்கின்ற வாழ்க்கையே இவற்றை நிறைவு செய்யவே எனவும் கூறலாம். இவை இரண்டுமே இயற்கையான உணர்வுகள். இவற்றை தவிர்க்கவே முடியாது. இந்த உணர்வுகளின் மூலம் இயற்கையாக உருவான சிக்கல்கள் முன்பு தாமாகவே சரிசெய்யப்பட்டன. குடும்பம், அரசு போன்ற அதிகார அமைப்புகள் உருவான பின்பு இந்த இரண்டு உணர்வுகளும் மேலும் சிக்கலாகிவிட்டன. அதிலும் பாலுணர்வுதான் அதிக சிக்கல்களைச் சந்திக்கிறது. இந்த அமைப்புகள் சொல்வது தான் சட்டம், நீதி என்றாகிப் போனது. குடும்பம் என்ற அமைப்பு சிறிய அமைப்பு போல தோன்றினாலும் உண்மையில் அதிக அதிகாரமுள்ள அமைப்பு அது. அதிகாரம் கால் பதித்த எந்த இடத்திலும் இயற்கைக்கும் இடமில்லை, இயற்கையான உணர்வுகளுக்கும் இடமில்லை என்ற நிலை உருவாகி பல ஆண்டுகளாகிவிட்டன. பசியைப் போலவே பாலுணர்வும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். பட்டினி போடப்படும் மனிதர்கள் எதை தின்பார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை என்று சொல்வார்கள். அதே தான் பாலியல் பட்டினிக்கும். திருமணம் தாண்டிய உறவுகள் உருவாக இந்த பட்டினியும் ஒரு காரணமாகிறது.

திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு தற்போதைய திருமண முறையும் ஒரு காரணம். " காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா எல்லாம் சரியாக போய்விடும் " என நினைக்கும் குடும்ப அமைப்பு அந்த கல்யாணத்தை சரியான புரிதலுடன் செய்து வைப்பதில்லை. இந்திய சமூகத்தில் திருமணம் தாண்டிய உறவுகள் என்பவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த உறவுகள் பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கினாலும் எல்லா இடங்களிலும் தொடரவே செய்கின்றன. திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவன், மனைவி தங்களுக்குள் மனம்விட்டு பேசாதிருப்பதும் ஒரு காரணம். மற்ற விசயங்கள் குறித்து விவாதிக்கவும், சண்டை போடவும் தயாராக இருப்பவர்கள் தங்களுக்கான பாலுணர்வுத் தேவைகள் குறித்து பேச முன்வருவதில்லை. அப்படி பேசுவதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை. அதிலும் பெண்கள் தானாக முன்வந்து பேசுவதற்கான சுதந்திரமும் இங்கில்லை.

மொத்தம் 245 பாலுறவு நிலைகள் (Sex Positions) இருப்பதாக காமசூத்ரா சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் எத்தனை நிலைகள் பின்பற்றப்படும் என்று தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் எத்தனை கணவன்- மனைவிகள் இந்த பாலுறவு நிலைகள் பற்றி பேசவும் அதில் சிலவற்றையாவது நிகழ்த்திப் பார்க்கவும் விரும்புவார்கள் என்று தெரியவில்லை. இப்படியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் மாறுபட்ட பாலுறவு ஆசைகள், விருப்பங்கள் திருமணம் தாண்டிய உறவின் மூலமே பூர்த்தியடைவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இதை போய் எப்படி கணவரிடம் அல்லது மனைவியிடம் கேட்பது என்ற தயக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதாம். ஆனால் இதையே திருமணம் தாண்டிய உறவுகளிடம் கேட்பதிலும் , நிகழ்த்துவதிலும் தயக்கம் ஏற்படுவதில்லையாம்.

ஒரு ஆண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவுத் தேவை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவு தேவை மட்டும் முக்கிய காரணமாக இருப்பதில்லை. பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் புறக்கணிப்பிற்கான வடிகாலாகவே பெண்கள் இந்த உறவைப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் இந்த உறவைத் தொடர்வதற்காகவே பாலுறவிற்கும் சம்மதிக்கிறார்கள்.ஆண்களைப் போல பாலுறவிற்காக உறவைத் தேடும் பெண்களும் இருக்கிறார்கள்தான். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள், பெண்கள் எங்கெல்லாம் சேர்ந்து வேலை செய்யும் அல்லது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் இருந்திருக்கிறதோ அங்கெல்லாம் திருமணம் தாண்டிய உறவுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பல இடங்களில் இது குற்றமாக பார்க்கப்படுவதில்லை, எதுவரை என்றால் குடும்பத்தை பாதிக்காத வரை. கணவன், மனைவிக்கு தெரிந்தே அனுமதிக்கப்படும் உறவுகளும் இருக்கின்றன.'மண்ணு திங்கற உடம்பு தான இது . யாரு தின்னா என்ன ? 'என்ற மனநிலையும் பரவலாக முன்பு இருந்தது. ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்ற "கூடை மேல கூடை வச்சு.." பாடலில் வந்த வரியைப் போல " எங்கே வேணா போயிக்க, என்னை விட்டு மட்டும் போயிடாம இருந்தாலே அது போதுமே" என்ற மனநிலை காரணமாக இருக்குமா ? தெரியவில்லை. இன்னொரு மனிதரைப் பாதிக்காத எந்த உறவும் தவறில்லை என்று தான் சொல்ல வேண்டி வருகிறது.

திருமணம் தாண்டி உறவு என்பது இருவரின் சம்மதத்துடன் தான் நிகழ்கிறது. 20 வயதுகளிலேயே திருமணம் செய்து கொள்பவர்கள், காதல் திருமணமாக இருந்தாலும் 30களில் திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வயதிற்குரிய வாழ்க்கையை அப்போது வாழ முடியாததை இப்போது சேர்த்து வாழ நினைக்கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு 30 வயதிற்கு பிறகுதான் பாலியல் உணர்வுகள் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், அப்போது தான் குழந்தைகள் ஓரளவு வளர்ந்து இருப்பார்கள், வேலைப்பளுவும் சற்று குறைந்திருக்கும். தன்னைப் பற்றி சிந்திக்கவும் சற்று இளைப்பாறவும் அப்போது தான் நேரமும் கிடைக்கிறது. அடுத்ததாக நிர்பந்தங்களால் ,குடும்ப அழுத்தத்தால் பொருத்தமில்லாதவர்களை மணமுடிக்க நேர்பவர்கள் , தங்களுக்கு பொருத்தமானவர்களைச் சந்திக்கும் போது அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள். பின்பு அதுவுவே உறவாக மாறிவிடுகிறது. தனது குடும்பம் தரும் அழுத்தங்களிலிருந்து மற்றவர்களுடன் பேச ஆரம்பிப்பவர்கள் அந்த பந்தம் தரும் இளைபாறலில் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் பிறந்த பிறகு உருவாகும் இடைவெளி, உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், குழந்தை இல்லாமை, கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாதது, பொருளாதார நெருக்கடி போன்ற பலவும் திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் விட்டு பேசிக்கொள்வதில் தான் எல்லாமும் இருக்கிறது. வெளியே புதிய உறவு உருவானாலும் கூட அதைப் பற்றியும் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் சூழல் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். பெண்களை உடைமையாகவும், புனிதப்பொருளாகவும், குடும்பத்தின் மானத்தைக் காப்பவர்களாகவும் பார்க்கும் ஆணாதிக்க பார்வை மாறாதவரை பெண் மனது புரிந்துகொள்ளவேபடாது.

திருமணம் தாண்டிய உறவைத் தொடர்வதிலும், பழைய உறவை விட்டு வெளியேறவும் தடையாக இருப்பவர்கள் குழந்தைகள் தான். அதனால் திருமணம் தாண்டிய உறவுகளால் குழந்தைகள் தான் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் இந்த உறவுகளைத் தொடர்பவர்களால் அது மேலும் பாதிப்படைகிறது. திருமணம் தாண்டிய உறவைத் தொடரும் போது குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. திருமணம் தாண்டிய உறவுகளால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 'கள்ளக்காதல் கொலைகள்' என செய்தியாக்கப்பட்டாலும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகள் நேரடியாக பாதிப்படைவதுடன் ஒரு சில இடங்களில் உறவைத் தொடர தடையாக இருப்பதால் சொந்தப் பெற்றோராலோ அல்லது புதிய துணையாலோ குழந்தைகள் கொல்லப்படுவது இன்னும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. " காதலுக்கு நான்கு கண்கள்... கள்வனுக்கு இரண்டு கண்கள்... காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை ..." என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது .கணவன் மனைவி என்றில்லை மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான வன்மங்கள், கோபங்கள், வெறுப்புகள் சரியாகியிருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் குற்றங்களாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. நடந்து முடிந்த குற்றங்களில் பலவும் சரியாக பேசப்பட்டிருந்தால் நிகழாமலே போயிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். குற்றத்தை நிகழ்த்தும் எண்ணம் வரும்போது குற்றம் புரிந்த பிறகான வாழ்க்கை எவ்வளவு கொடூரமாகவும், எவ்வளவு குற்றவுணர்ச்சியுடனும் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் யாரும் எந்தக் குற்றத்தையும் நிகழ்த்த முன்வரமாட்டார்கள்.

பாதுகாப்பான செக்ஸ் குறித்த புரிதல் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலுமே கூட நல்ல நிலையில் இல்லை. ஆனாலும் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில் போதிய தெளிவு இல்லாமையே தேவையற்ற கர்ப்பங்களுக்கு காரணமாகிவிடுகிறது. தேவையற்ற கர்ப்பங்களுக்கும், அதனால் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளுக்கும் ஆண்களின் பொறுப்பற்றதன்மை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனமாக ஆணுறையே இருக்கிறது. ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வெற்றிபெறவில்லை. இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பக்கவிளைவுகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஆராய்ச்சி அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை சந்தைக்கு வர இன்னும் காலம் தேவைப்படும். பெண்களுக்கான கருத்தடை சாதனமாக மாத்திரைகளே இருக்கின்றன. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் என்றாலும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் ஒரே வழியாக இருக்கிறது. பரவலாக இம்மாத்திரைகள் கிடைப்பதும் இல்லை. விரைவில் இம்மாத்திரைகள் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியே மாத்திரைகள் கிடைத்தாலும் சரியான நேரத்தில் உண்டால் மட்டுமே பலனளிக்கும். பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுறைகள் வெற்றிபெறவில்லை.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் எளிய , வசதியான, பக்கவிளைவு இல்லாத, எங்கும் கிடைக்கக்கூடிய சாதனமாக ஆணுறையே இருக்கிறது. பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது, ஆணுறை இல்லாமல் உறவில் ஈடுபடும்போது தான் சுகம் அதிகம் கிடைக்கும் என்பது தான் அது. இதில் மிகவும் குறைந்த அளவிலேயே உண்மை இருக்கிறது. மிகச்சிறிய அளவிலான சுக வேறுபாடு மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதற்கும், பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இடையில் உள்ளது. அந்த சின்ன சுகத்திற்காக பெண்களை கர்ப்பமாக்குவதையும், தேவையற்ற கருக்கலைப்பிற்கு கொண்டு செல்வதும் ஏற்க முடியாது ஒன்று. அப்படியே ஆணுறை பயன்படுத்த விருப்பமில்லை என்றாலும் கூட ஆண்கள் தங்களின் உச்சநிலையின் போது வெளியே எடுத்து விந்துவை வெளியேற்றுவது ஓரளவிற்கு வெற்றி தரும் என்றாலும் இதையும் ஆண்கள் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே பெண்கள் மீது ஏவப்படும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளில் ஒன்றாக இந்த தேவையற்ற கர்ப்பமும் சேர்ந்து விடுகிறது. பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை இந்த தேவையற்ற கர்ப்பம் உருவாக்கிவிடுகிறது. ஆண்களே , எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்திற்கு காரணமாகி விடாதீர்கள். ஒரு ஆணும் , பெண்ணும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். அந்த உறவு சுகத்திற்காக மட்டுமென்றால் கண்டிப்பாக கருத்தடை சாதனம் பயன்படுத்த முன்வர வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என்றால் கருத்தடை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

இன்று, குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது விருப்பம் என்பதை விட குடும்ப, சமூக அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப கௌரவமே வாரிசு உருவாவதில் தான் இருப்பதாக இன்றும் நம்பவைக்கப்படுகிறது. எல்லாதவிதமான குடும்பங்களும் இதனுள் அடங்கும். கல்யாணம் பண்ணி வைத்தே உடனேயே வாரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கெங்கோ பிறந்து வளர்ந்த கணவனும், மனைவியும் தங்களுக்குள் போதிய புரிதல் உருவாகும் முன்பே பெற்றோராகி விடுகின்றனர். குழந்தையின்மைக்கு கணவன், மனைவி இருவருமே காரணமாக இருக்க முடியும் என்றாலும் இன்றும் பெண் மீது தான் பழி விழுகிறது. ஆண் வாரிசு மீதான போதையும், கற்பிதங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆண் வாரிசுக்காக பெண்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பமடைவது இன்று வரை தொடரவே செய்கிறது. என்னென்ன குழந்தைகள் வேண்டும் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே கணவனும் மனைவியும் தீர்மானிக்கும் நிலை வர வேண்டும். பாலின சமத்துவம் என்பதை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதுவுமில்லாமல் உங்களின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தாலும் உங்களால் உங்களின் வாழ்க்கையின் 14 வருடங்களை ஒதுக்க முடியும் என்றால் மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எல்லோருக்குமான காமம் குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மணம் முடிக்காதவர்களின் காமம், மணம் முடித்தவர்களின் காமம், பல்வேறு சூழ்நிலைகளால் தனிமைக்கு தள்ளப்பட்டவர்களின் காமம், மாற்றுத் திறனாளிகளின் காமம், வயதானவர்களின் காமம் இப்படி பேசப்பட வேண்டிய காமம் நிறையவே இருக்கிறது.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms