Pages

Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!


மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.

அந்தப்பாடல் :

பாடல் வரிகள் :



சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே
முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து
அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…)


பன்னப்பட்டிக் கிராமத்திலே
பழையசோறு தின்னுக்கிட்டா
பங்காளிவீட்டுச் சிங்காரத்தோட
பழையகதையும் பேசிக்கிட்டா (சின்ன…)

கண்ணுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தப்போட்டுப் பிடிச்சுக்கிட்டா
மண்ணுக்கட்டியால் மாங்காஅடிச்சு
வாயில போட்டுக் கடிச்சுக்கிட்டா! (சின்ன…)

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .


மேலும் படிக்க :

 உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...! 

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

..................................................................................................................................................................

1 comment: