Tuesday, June 26, 2012

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

தமிழின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான A.M.ராஜாவின் இசையமைப்பில்  1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . கல்யாண பரிசு , இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் .இந்தப்படத்தில் இடம்பெற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிக்கப்படுகின்றன .காதல் ரசம் சொட்ட சொட்ட இந்தப்பாடலை எழுதியுள்ளார்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இவரே இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் . A.M.ராஜாவும் சுசீலாவும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடும் திறமையுள்ள இசையமைப்பாளர்களில் A.M.ராஜாவே முதன்மையானவர் .சிறப்பான முறையில் பாடப்பட்ட பாடலிது .  ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை வாட்டிட ஆசை தானோ? _ பல கோடி மலரழகை மூடிவைத்து மனதைக் கொள்ளை யடிப்பதும் ஏனோ?...

Monday, June 18, 2012

பிரியாத பிரியங்கள் ...!

நீ என்னைவிட்டு பிரிந்த பின்பும் பிரியாத பிரியங்களை என்ன செய்ய கடலில் கரைத்தேன் மழையாக பொழிந்து என்னை வந்து சேர்ந்தன காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது மீண்டும் என்னுள் வந்துவிட்டன மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன் சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன நீயே சொல்லிவிடு உன் பிரியங்களை என்ன செய்ய ! மேலும் படிக்க : முதல் காதல் ! ....................................................................................................................................................................

Sunday, June 17, 2012

அக்னியையும் தாண்டி ...!

தலைப்பைப் பார்த்ததும் இந்தியா நம் வரிப்பணத்தில் பாயவிட்ட அக்னி 5 பற்றியோ அல்லது வராத ,வரக்கூடாத போருக்காக அடுத்து பாயவிட தயாராகும் அக்னி 6 ,அக்னி 7 பற்றியோ எதுவும் சொல்லவரவில்லை . மற்ற அனைத்து ஆராச்சிகளையும் குறைத்துவிட்டு இயற்கைக்குப்  பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் உடனே  செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . விசயத்துக்கு வருவோம் .அக்னி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து தான் எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர் . அக்னி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? எளிய காரணங்கள் தான் தென்படுகின்றன . நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் " ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ; ஆனால் , ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக முடியும் " என்று...

Wednesday, June 6, 2012

முதல் காதல் !

மழையின்                முதல் துளி சிட்டுக்குருவியின் முதல் சிணுங்கல் மலரை தீண்டும்    முதல் தென்றல் சூரியனின்                முதல் வெளிச்சம் துளிர் விடும்           முதல் இலை வானவில்லின்      முதல் தரிசனம் பவுர்ணமி இரவின் முதல் குளுமை கடல் அலைகளின் முதல் நனைத்தல் நம்  முதல் காதல் ! மேலும் படிக்க : ஒற்றையடிப் பாதை !  கேணியின் ஆயுட்காலம் ! ......................................................................................................................................................

Saturday, June 2, 2012

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

பதில் எதுவும் சொல்ல வேண்டாம் பதிலுக்கு என்னைப் பார்க்கவும் வேண்டாம் உன்னைத் தீண்டும் போது பதிலுக்குப் பதில் என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை பார்வையில் பட்டோ படாமலோ அருகிருந்தால் போதும் என்னை நனைக்கும் நீரின் ஈரம் எதற்கும் பதிலாக இல்லை                                          - தேவதச்சன் நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms