Sunday, October 21, 2012

பட்டுவண்ண ரோசாவாம் ...!

தமிழ் திரையிசையின் மாபெரும் ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில் இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள் இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை . எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது . புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன் மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை...

Saturday, October 20, 2012

இந்தியா - மேட் இன் சீனா !

என்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க ? வாழ்க்கை எப்படி போவுது ? எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வாழ்க்கை ஒரு முறை தான் ;அதை நம் விருப்பப்படி வாழ வேண்டும் ,அவ்வளவு தான் .ஒரு முறை உங்களைச் சுற்றிப் பாருங்கள் . விதவிதமான பொருட்கள் நம் அறையை நிறைத்திருக்கும் .ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம் .ஒரு சிலவற்றை எப்பவாவது பயன்படுத்துவோம் . ஒரு சிலவற்றை சுவருக்கு வர்ணம் பூசும் மட்டும் எடுப்போம் .பிறகு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவோம் .நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .     பொருள் சார்ந்த வாழ்வை வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் . நாம் சம்பாதிக்கும் பணத்தில் அதிகளவு பணத்தை விதவிதமான பொருட்கள் வாங்கவே பயன்படுத்துகிறோம் . இவ்வளவு பொருட்கள்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms