Thursday, December 31, 2015

நானும் நானாக !

நதியும் நதியாக கடலும் கடலாக காடும் காடாக ஊரும் ஊராக அதுவும் அதுவாக அவளும் அவளாக இல்லாத  தேசத்தில் நானும் நானாக இல்லை  ... ! மேலும் படிக்க : பிரியாத பிரியங்கள் ...! நிலவே நீ ஒரு ...! ................................................................................................................................................................... ...

Tuesday, November 10, 2015

குறி - சிற்றிதழ் !

தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது. சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே...

Tuesday, October 27, 2015

49ஓ - பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகை !

எளிய மனிதர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து நாட்டு நடப்புகளையும் , மூட நம்பிக்கைகளையும் பகடி செய்யும் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. நகைச்சுவைப் பாத்திரங்களில் தனி முத்திரையைப் பதித்திருந்தாலும் , குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை மிஞ்சும் வகையில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். வில்லன் வேடங்களிலும் அசத்தியிருப்பார். சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ,  எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய...

Tuesday, September 22, 2015

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !

" நவீன மருத்துவத்தின் தந்தை வில்லியம் ஆஃப்லர். இவர்தான் அலோபதி மருத்துவத்துக்கான முதல் புத்தகத்தை உருவாக்கியவர்.  ' ஒரு மருத்துவர் , நோயாளியின் உடல் மூலமாகத்தான் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவான அறிவைப் பெறுகிறார்.அதே சமயம் , நோய் பற்றியும் மருந்துகள் பற்றியும் விளக்கிக் கூறுவது அந்த நோயாளிக்கு மருத்துவர் தரும் சன்மானமோ , பிச்சையோ அல்ல. அது ஒவ்வொரு மருத்துவரின் கடமை!' என்கிறார் ஆஃப்லர்.  ஆனால் இன்று , 'ஏன் , எதற்கு ' என்று கேள்வி கேட்காமல் , நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள் ! " -நோயாளிகளின் மீது அன்பும் , மனிதத்திற்கு எதிரானவர்கள் மீது வெறுப்புமாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி. ஆயிரங்கள் , லட்சங்களில் மருத்துவக் கட்டணங்கள் கொள்ளையடிக்கப்படும் இந்தக் காலத்தில்...

Monday, August 31, 2015

மரணத்திற்கும் விலை உண்டு !

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை . மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக...

Friday, July 31, 2015

தென்றல் வந்து வீசாதோ !

1959 ஆம் ஆண்டு வெளிவந்த ' சிவகங்கை சீமை ' திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.கண்ணதாசன் இப்பாடலை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்ததும் கண்ணதாசனே. எஸ்.வரலட்சுமியும் , டி.எஸ்.பகவதியும் 'தென்றல் வந்து வீசாதோ... ' என்ற இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடலில் மட்டுமல்ல எஸ்.வரலட்சுமி பாடியுள்ள எப்பாடலிலும் அவரது குரல் தனித்து ஒலிக்கும். அப்பாடல் : மேலும் படிக்க : நல்லவன் கையில் நாணயம் !   எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ? சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! .....................................................................................................................................................................

Thursday, June 11, 2015

காக்கா முட்டை - ஒரு வாழ்வனுபவம் !

 " உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது , ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் " - கன்பூசியஸ். இணையத்தின் உதவியால் உலக சினிமா ஓரளவிற்கு பரிச்சயமான சூழலிலும் தமிழ் சினிமா, இன்னமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான காதல்களைச் சொல்வதிலும் , டூயட் பாடுவதிலும் ,ஓப்பனிங் சாங் வைப்பதிலும் , பஞ்ச் டயலாக் பேசுவதிலும் ,ஒரே அடியில் ஒன்பது பேரை காற்றில் பறக்க விடுவதிலும் , காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுப்பதிலும் , திரைக்கதையில் கவனம் செலுத்தாமலும் , முக்கியமாக கதையே இல்லாமல் படமெடுப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ' காக்கா முட்டை' திரைப்படம் பலவிதமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.  தமிழ் சினிமா மீது பல வருடங்களாகவே இரு விசயங்கள் மீது கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சிறுவர்களை சிறுவர்களாக திரையில்...

Friday, May 29, 2015

கதாநாயகத் துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !

சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என  ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம்  இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் .  சினிமாக்காரர்கள் ரசிகர் மன்றங்கள் முலமாகவும் , அரசியல்வாதிகள் கட்சிக் கிளைகள் மூலமாகவும் , ஆன்மீகவாதிகள் மடக் கிளைகள் மூலமாகவும் தொடர்ந்து துதிபாடப்படுகிறார்கள்....

Thursday, April 16, 2015

எக்காலத்திற்குமான கலைஞன் !

இந்த கலைஞனைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகெங்கும்  இன்றும் எழுதப்படுகின்றன. தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன ,புத்தகங்கள் எழுதப்படுகின்றன .திரைப்படம் எடுக்க கற்றுத்தரும் அனைத்து இடங்களிலும் இந்த கலைஞனின் படைப்புகள் விவாதிக்கப்படுகின்றன .எங்கெல்லாம் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கலைஞனைக் கொண்டாடுகிறார்கள்.பெரியாரையும் ,பாரதியையும் பெற்றதற்கு தமிழ்நாடு பெருமைப்படலாம், காந்தியையும் , அம்பேத்கரையும் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படலாம். ஆனால், இந்த சார்லி சாப்ளினைப் பெற்றதற்காக உலகமே பெருமைப்படுகிறது . நிறைய கலைஞர்கள் மொழி,இனம்,மதம்,நாடு இந்த மாதிரியான பிரிவினைகளுக்குள் அடங்குபவர்களாக இருக்கிறார்கள்.அதனால் இந்தப் பேதங்களைக் கடந்து அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சார்லி சாப்ளின்...

Saturday, April 11, 2015

சூரியன் எரியும் கதை !

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார்,  " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?"  "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை " "எங்கடா மகனே எனக்கு உணவு ?" சூரியன் மேலும் கீழும் விழித்தான். அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான். சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் . "வாடா, சின்னவனே விருந்தெல்லாம் முடிந்ததா?" "ஆமாம், அம்மா !" "எங்கடா மகனே ,எனக்கு உணவு?" "இலையை விரியுங்கள், அம்மா!" "எதுக்குடா ?" "முதலில் இலையை விரியுங்கள் ,பிறகு சொல்கிறேன் " என்றான் சந்திரன். வீட்டின் முன்புறத்தில் இருந்த வாழை மரத்தில்...

Saturday, March 14, 2015

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும் போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு  கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை  எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் . இந்தப் பாடலைப் பார்க்க :-  http://www.pattukkottaiyar.com/site/?p=452 தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான்  ஆண் -பெண் சமத்துவம் நிகழும் . தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் தனிமனித சுதந்திரம் . நிறைய திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது...

Friday, February 27, 2015

எது தூய்மை ? - எனில் இணைய இலக்கிய இதழ் !

எனில் ஒரு இணைய இலக்கிய இதழாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை அதிகம் பேசப்படாத விசயங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. செறிவான கட்டுரைகள் ,புதுமையான சிறுகதைகள் ,ரசனையான கவிதைகள் ,சிறப்பான அதிகம் கவனம் பெறாத மொழிபெயர்ப்புகள் என்று தரமான இதழாகவே வந்து கொண்டிருக்கிறது. இதழ் முகவரி - http://www.eanil.com/ பெப்ரவரி - மார்ச் 2015 இதழில் 'எது தூய்மை ' என்ற தலைப்பில் 'தூய்மை இந்தியா ' திட்டம் பற்றி எழுதப்பட்ட எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரை முகவரி - http://www.eanil.com/?p=657   எனில் ஆசிரியர் குழுவிற்கு நன்றி...  மேலும் படிக்க : போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! ரிமோட் கன்ரோல் வாழ்க்கை ! இருக்கும் பொழுதை ரசிக்கணும் ! ......................................................................................................

Saturday, January 10, 2015

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?

தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது  எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே கிடக்கிறது என்ற புலம்பல் தான் மிச்சம்.  பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms