Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !

முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் ..... இருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் ! நம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்‪#‎நவீனமயமாதலோ ! ? நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை வயோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ‪#‎மனிதன்ஒருகாரணப்பயல் ஒரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்....

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !

வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில.... 'மனுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '  - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி. 'தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும்  தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனுமாமே !' - திருமூலர் , 'கடலுக்கு...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms