
கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது.
கதாநாயக துதிபாடல்களின்...