
நாம் வாழும் பூமி மண்ணின் மூலமே சுவாசிக்கிறது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நாளுக்கு நாள் பூமி மூச்சு விடவே சிரமப்படுகிறது. மண்ணே தெரியாதவாறு கான்கிரீட்களை கொட்டுகிறோம் அல்லது செரிக்க முடியாத அளவிற்கு கழிவுகளைக் கொட்டுகிறோம்.மிச்சமிருக்கும் விவசாய நிலங்களில் மட்டுமே மண் வெளியே தெரிகிறது.
கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் பூமியின் உயிர்ச்சூழலில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. அவை ,மண்ணில் தாவரங்கள் , மரங்கள் வளர்வதற்கு துணை புரிவதோடு நாம் அனாயசமாக தூக்கியெறியும் பொருட்களை மட்கச் செய்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன. பூமியின் கதாநாயகர்கள், மட்குண்ணிகள் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரிகள் தான். நாம் தூக்கியெறிபவை மட்காமல் போனால் என்ன ஆவது ?
மண்ணிலிருந்து தொடங்கி மண்ணிலேயே முடிகிறது...