ஒரு பாடல் வெற்றி பெற்றால் அதிகபட்ச புகழைப் பெறுவது பாடகர்களாகவே இருப்பார்கள். அதனால்தானோ என்னவோ பாடல் தொடங்குவதற்கு முன்னரான தொடக்க இசையிலேயே தனது ராஜாங்கத்தை நடத்தி முடித்து விடுகிறார், நம் இளையராஜா. இந்தப் பாடலின் தொடக்க இசையும் அவ்வளவு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் முழுவதும் இசை தொடர்ந்தாலும் சரணங்களின் இடையில் ஒலிக்கும் மெல்லிய புல்லாங்குழல் இசை இப்பாடலை மேலும் மெருகேற்றுகிறது.
மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பற்றி சொல்ல வேண்டியதில்லை. எப்போதும் போல தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். இவர்களின் குரல்கள் நம்மை எப்போதும் வசீகரிக்க இவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஒரு காரணம். கேட்க கேட்க திகட்டாத குரல்கள். காலமெல்லாம் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். " மலேசியா வாசுதேவனால் மட்டுமே எஸ்.ஜானகியின் குரலுக்கு ஈடு கொடுத்து பாட முடிந்திருக்கிறது " என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார், இசை விமர்சகர் ஷாஜி. அது என்னவோ உண்மைதான்.
இந்தப் பாடலை ரசிக்கும்படி எழுதியிருப்பவர், பிறைசூடன். சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை மூன்று முறை பெற்றிருந்தாலும் அதிகம் கவனம் பெறாத பாடலாசியர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார். நிறைய வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
'மீனம்மா மீனம்மா...'(ராஜாதிராஜா),
'நூறு வருசம் இந்த மாப்பிளையும் பொண்ணும்தான்...'( பணக்காரன்),
'சோளப் பசுங்கிளியே...'( என் ராசாவின் மனசிலே),
' ஆட்டமா தேரோட்டமா...'( கேப்டன் பிரபாகரன் ),
'இதயமே இதயமே...(இதயம்),
‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...'( உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்),
' புன்னைவனப் பூங்குயிலே...' ( செவ்வந்தி) இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
All time favourite combo :
இளையராஜா + மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி = ❤️❤️❤️
மேலும் படிக்க :


2:58:00 PM
மானிடன்


