Thursday, December 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

" உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . சக மனிதர்களைச் சாராமல் யாராலும் வாழ முடியாது . நாம் சாப்பிடும் ஒரு வேளை உணவில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது . 

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)

இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)

பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை

ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)

இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)

பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்

ஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?

இருவர் : காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

...................................................................................................................................................................... 

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms