Saturday, March 24, 2012

கேணி வீடு !


ஆழமாக
அழகாக
அதிசயமாக 

வற்றாத சுவை நீர்
வழங்கிய
நீச்சல் பழகிய
புறாக்கள் கூடு
கட்டிய 
பயிர்களை
விளைவித்து
பசி போக்கிய
கேணி மீது
மண்  மூடி  
கட்டப்படும் வீட்டுக்கு
என்ன பேர் வைப்பார்கள் ?
என்ன பேர் வைத்தாலும்
இனி எங்களுக்கு
அது  கேணி வீடு  தான் !
கோடை காலத்தின்
வறண்ட தழுவலால்
துவளும்  அந்த வீட்டின்
தரையை இனி கேணியின் 
வற்றாத ஊற்றுகளின்
ஜீவிதம் நனைக்கக்கூடும் !
இப்படிதான் முடிகிறது
எங்கள் ஊர் கேணிகளின்
ஆயுட்காலமும் 
விளைநிலத்தின் 
ஆயுட்காலமும் !    

மேலும் படிக்க :

ஒற்றையடிப் பாதை !
....................................................................................................................................................................

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms