Thursday, May 31, 2012

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

K.V.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் , T.R.ராஜகோபால் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கண் திறந்தது " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பட்டுக்கோட்டையாரின் எழுத்து வண்ணத்தில் உருவான இன்னுமொரு சிறந்த பாடலிது . அந்தப் பாடல் : பாடல் வரிகள் : ஒருகுறையும் செய்யாமே ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம் ஒதைக்காம விட்டதில்லை… இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட இன்பமாகக் கழிக்கணும் எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…) நாளை நாளை என்று பொன்னான நாளைக் கெடுப்பவன் குருடன் நடந்து போனதை நெனச்சு ஒடம்பு நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன் நம்மைப்போல கெடச்சதைத் தின்னு நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…) ஆடி ஓடிப் பொருளைத் தேடி… அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்… அதிலே இதிலே...

Saturday, May 26, 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன் செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன் செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது... மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு......

Friday, May 18, 2012

விகடன் வரவேற்பறையில் !

கடந்த 4 வருடங்களாக ஆனந்த விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன் . நிறைய விசயங்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்கிறது . விகடன் மூலம் நான் பெற்றவை அதிகம் . ஏன் ப்ளாக் (வலைப்பூ ) எழுதுவது கூட விகடனிடம் இருந்து பெற்றது தான் . 2009 ஆண்டே வலைப்பூ எழுத தொடங்கி பிறகு  நிறுத்திவிட்டேன் . மீண்டும் வலைப்பூ எழுத காரணம் விகடன் . விகடனின் எனர்ஜி பக்கங்களில் வலைப்பூ பற்றிய தெளிவான கட்டுரை படித்த பிறகு தான் மீண்டும் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் . Blog aggregator பற்றி விகடன் கட்டுரை மூலம் தான் தெரியும் .ஓவ்வொரு முறையும் விகடன் வரவேற்பறை பார்க்கும் போது நமது வலைப்பூ  இதில் இடம் பெறாதா என்று ஏங்கியதுண்டு .இப்பொழுது விகடன் (16-05-12) வரவேற்பறையில் எனது வலைப்பூ வந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . "  மரம் வெட்டுங்கள் " கட்டுரை ...

Friday, May 11, 2012

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !

ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச் செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் . அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால்  அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms