Saturday, September 1, 2012

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

தினமும் எவ்வளவோ பாடல்களைப் பார்க்கிறோம் அல்லது கேட்கிறோம் . எந்தப் பாடலும்  பார்க்காமலோ அல்லது கேட்காமலோக் கூட இருக்கலாம் . ஆனால் ,பிடித்த பாடல் என்பது எல்லோருக்கும் இருக்கும் . இதுவரை எத்தனையோ பாடல்கள் கேட்டாலும் ,பிடித்த ஜோடிப் பாடல் என்றவுடன் என் காதுக்குள் கேட்கும் பாடலாக இருப்பது "வசந்த மாளிகை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மயக்கமென்ன இந்த மெளனம் என்ன ..." என்ற பாடல் .1973 ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் K .V .மகாதேவன் . இந்தப் பாடலில் இடம்பெற்ற கவிரசம் ததும்பும் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார் .

அந்தப் பாடல் :



தேர்  போலே  ஒரு  பொன்  ஊஞ்சல்
அதில்  தேவதை  போலே  நீ  ஆட

பூவாடை  வரும்  மேனியிலே
உன்  புன்னகை  இதழ்கள்  விளையாட

கார்காலம்  என  விரிந்த  கூந்தல்
கன்னத்தின்  மீதே  கோலமிட

கை  வளையும்  மை  விழியும்
கட்டியணைத்து  கவி  பாட

அன்னத்தைத்  தொட்ட  கைகளினால்
மதுக்  கிண்ணத்தை  இனி  நான்  தொட  மாட்டேன்

கன்னத்தில்  இருக்கும்  கிண்ணத்தை  எடுத்து
மதுவருந்தாமல்  விட  மாட்டேன்

உன்னையல்லால்  ஒரு  பெண்ணை  இனி  நான்
உள்ளத்தினாலும்  தொட  மாட்டேன்  -

உன்  உள்ளம்  இருப்பது  என்னிடமே
அதை   உயிர்  போனாலும்  தர  மாட்டேன்

என்னே அற்புதமான வரிகள் ! கண்ணதாசன் கண்ணதாசன் தான் !

காதலில் ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்கி கொள்ளமுடியாதுனு சொல்றாங்க  . அந்தப் பிரிவின் வழியை அழுத்தமாக பதிவு செய்த பாடலாக இருப்பது "படகோட்டி " படத்தில் இடம்பெற்ற " பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ ..." என்ற பாடல் . கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட சிறந்த பாடலிது . 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் . 

அந்தப் பாடல் :


பாட்டுக்குப்  பாட்டெடுத்து  - நான் 
பாடுவதைக்  கேட்டாயோ 
துள்ளி  வரும்  வெள்ளலையே  - நீ  போய்த் 
தூது  சொல்ல  மாட்டாயோ 

கொத்தும்  கிளி  இங்கிருக்க  கோவைப்பழம்  அங்கிருக்க 
தத்தி  வரும்  வெள்ளலையே  நீபோய்  தூது  சொல்ல  மாட்டாயோ

ஆசைக்கு  ஆசை  வச்சேன்  நான்  அப்புறந்தான்  காதலிச்சேன் 
ஓசையிடும்  பூங்காற்றே  நீதான்  ஓடிப்போய்  சொல்லிவிடு 

நெஞ்சு  மட்டும்  அங்கிருக்க  நான்  மட்டும்  இங்கிருக்க 
நான்  மட்டும்  இங்கிருக்க ...நான்  மட்டும்  இங்கிருக்க 

தாமரை  அவளிருக்க   இங்கே  சூரியன்  நானிருக்க 
சாட்சி  சொன்ன சந்திரனே  நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ 


வாலியின் சிறந்த வரிகள் . இந்தப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் வாலியே எழுதினார் . வாலிக்கு நல்ல பேரைப் பெற்றுத்தந்த படமிது . அதிலும் தரைமேல் பிறக்கவைத்தான் பாடல் , மீனவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்தது .

ஜோடிப்பாடல்,பிரிவுப் பாடல் இரண்டையும் பாடியவர்கள் T.M.செளந்தர்ராஜன் மற்றும் P .சுசீலா .T.M.செளந்தர்ராஜன் அவர்களின் மாறுபட்ட பாடும் திறமைக்கு இந்தப் பாடல்களும் சிறு உதாரணங்கள் .இந்தப் பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் , எனக்குப் பிடிக்கும் .

மேலும் பார்க்க :

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?  

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !  

...................................................................................................................................................

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னைப் போல் நீங்களும் பாடல் பிரியர் போல...
வரிகள் பதிவிட ஒரு நண்பர் கிடைத்து விட்டார்...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms