Sunday, October 21, 2012

பட்டுவண்ண ரோசாவாம் ...!

தமிழ் திரையிசையின் மாபெரும் ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில் இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள் இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை . எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது . புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன் மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை வடிவுக்கரசி வெளிப்படுத்தும்  முகபாவங்கள் அவ்வளவு அருமை . தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது .

எஸ் .ஜானகியின் குரலில் :





மலேசியா வாசுதேவன் குரலில் :



அழிவற்ற குரல்கள் ....

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

ஆக்காட்டி ஆக்காட்டி !

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

....................................................................................................................................................

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டுமே மிக நல்ல பாடல்கள்... நன்றி...

கொடுக்கின்ற பாத்திரத்தை (முக்கியமாக அளவிற்கு மீறாமல்...) சிறப்பாக செய்பவர்...

/// தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது... ///

நீங்கள் சொல்வது உண்மை... இவரைப் போல பல பேர்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms