Tuesday, December 31, 2013

வட்டியில் சுழலும் வாழ்வு ..!

நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் வட்டியுடன் தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது . கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குபவராகவோ அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுபவராகவோ இருக்க வேண்டும் . வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை  தான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .ஏன் ?எல்லா நாடுகளுமே உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன ;வட்டியும் கட்டுகின்றன.கடன், பல வேளைகளில் ஆக்கசக்தியாக இருந்தாலும் சில வேளைகளில் வாழ்வையே அழிக்கும் அழிவுசக்தியாகவும் இருக்கிறது .சாதரணமாகவே வாழ்வைப் பாதிக்கும்  கடனும் ,வட்டியும்,  உலக வணிகமயமாக்கத்தின் காரணமாக சமூக அமைப்பில் இருக்கும் அனைவரையும் வெகுவாக பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன . மருத்துவத்திற்காகவும் ,கல்விக்காகவும் தான் நாம் அதிகம் கடன் வாங்குகிறோம் . "தகவல் பெறும் உரிமை போல , மருத்துவ...

Thursday, November 14, 2013

K.A.தங்கவேலு நடித்த பாடல்கள் !

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தங்கவேலு நிறைய பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிப்புக்குச் சொந்தக்காரர் தான் நம் தங்கவேலு . அவர் நடித்த பாடல் காட்சிகளைக் காண்பது இன்னும் சுவாரசியம் நிரம்பியதாகவே இருக்கிறது .பாட்டாளி மக்களின் சாமானிய குரலை பிரதிபளிப்பது போலவே நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவர் நடித்த பெரும்பாலான பாடல் காட்சிகள் எளிமையான முறையிலேயே படமாக்கப்பட்டுள்ளன . பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவே உள்ளன . இந்த மாபெரும் கலைஞனின் சில பாடல்கள் . பார்த்தீரா ஐயா  பார்த்தீரா ... உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ... புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ... கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே... சாலா மிஸ்திரி...

Wednesday, October 23, 2013

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

  இந்தியாவில் ,உங்களின் பொழுதுபோக்கு என்ன ? என்ற கேள்வியைக் கேட்டால் பெருவாரியான இளைஞர்களின் பதில் ஒன்று கிரிக்கெட் அல்லது சினிமாவாகத்தான் இருக்கும் .கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இவை மாறிவிட்டன .அதிலும் சினிமாவின் தாக்கம் மிகவும் அதிகம் .டேப் ரெக்கார்டர் ,தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் பரவாத சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சினிமாவின் தாக்கம் நம் வாழ்வியல் சூழலுடன் கலந்துள்ளது .டேப் ரெக்கார்டர் , தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை  மற்ற நாடுகளில் எதற்காக அதிகம் பயன்படுகிறதோ தெரியாது ,இந்தியாவில் இவை சினிமா சார்ந்தே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . டேப் ரெக்கார்டர் மூலம் மற்ற நாட்டுக்காரர்கள் , ஆல்பமாக வெளியிடப்படும் பாப் பாடல்களைக் கேட்டார்கள் . நாம் சினிமாப் பாடல்களைக் கேட்டோம் .அதோடு...

Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!

மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார். அந்தப்பாடல் : பாடல் வரிகள் : சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா! குளிரடிக்கிற குழந்தைமேலே துணியப்போடடுப் போத்துனா குவாக்குவான்னு கத்தினதாலே முதுகிலரெண்டு சாத்துனா கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…) பன்னப்பட்டிக் கிராமத்திலே பழையசோறு தின்னுக்கிட்டா பங்காளிவீட்டுச்...

Friday, August 30, 2013

மதுவும் மனிதனும் !

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் . ' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம்....

Saturday, August 3, 2013

நல்லவன் கையில் நாணயம் !

தமிழ்  இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.  அந்தப் பாடல் :  http://www.inbaminge.com/t/hits/Hits%20of%20C%20S%20Jayaraman/Nallavar%20Kaiyil%20Nanayam.eng.html பாடல் வரிகள் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம்    நல்லவன் கையில் நாணயம் இருந்தால்  நாலு பேருக்கு சாதகம் அது பொல்லாதவன் பையில் இருந்தால் எல்லா உயிர்க்கும் பாதகம் எல்லா...

Tuesday, July 30, 2013

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது .ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் என்றும் அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்திற்கும் தனி பலத்தைத் தந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் . தங்கவேலுவின் நலினமான பேச்சுத் திறமை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை . அவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே...

Saturday, July 13, 2013

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.  உலகெங்கிலும் மனிதர்கள் மீதான அடக்குமுறை மனிதர்களாலேயே வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது .இனம் ,மதம்,மொழி மற்றும் சாதி சார்ந்து உலகம் முழுக்கவே அடக்குமுறைகள் நிகழ்கின்றன .இன்னொரு மனிதனை அடக்க நினைக்கும் அனைத்தையும்...

Thursday, July 4, 2013

உதிரிப்பூக்கள் !

வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் . 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதை தான் .புதுமைப்பித்தன் எழுதிய " சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே மகேந்திரனின்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms