Friday, May 11, 2012

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !

ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச் செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் .

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால்  அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர் புகழ் அடைந்தனர் . அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள்  பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?

இங்கு நாம் கவனிக்க வேண்டியது , ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது ஒரு உயர் அரசு அதிகாரி கடத்தப்பட்டுள்ளார் .அலெக்ஸ் பால் மேனன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் கடத்தப்பட்டு தான் இருப்பார்கள் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் அலெக்ஸ் பால் மேனன் அவர்களைக் கடத்துவது அல்ல . அவர்களின் நோக்கம் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்துவது .ஏன் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்த வேண்டும் ? தொடர்ந்து அரசு அதிகாரிகளும் , சுற்றுலாப் பயணிகளும் கடத்தப்படுவதற்கு என்ன காரணம் ? மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடாமல் ஒட்டு மொத்த ஊடகங்களும் மையம் கொண்ட ஒரு புள்ளி " அலெக்ஸ் பால் மேனன் " . அலெக்ஸ் பால் மேனன் பற்றிய தகவல்களைப் பரப்பவே நேரம் எடுத்துக்கொண்டனர் . அவரை வைத்து 12  நாட்களுக்கு தொழில் செய்தனர் அவ்வளவுதான் .

அரசியல் தொழில் செய்பவர்களின் அத்துமீறல்கள் தான் அனைத்திற்கும் காரணம் . இயற்கையைப் பற்றியோ , பல நூற்றாண்டுகளாக இயற்கையை நம்பி வாழும் மக்களைப் பற்றியோ எந்த புரிதலும் , கவலையும் இல்லாமல் நாடெங்கும் பரவியிருக்கும் கனிம வளங்களை பணம் பண்ணுபவர்களுக்கு பிடுங்கி கொடுக்கும் வேலையை மிகத் தெளிவாக செய்து வருகின்றனர் , அரசியல் தொழில் செய்பவர்கள் . அதனால் , இரு வகையான இனங்கள் பாதிக்கப்படுகின்றன . ஒன்று கேள்வி கேட்கத் தெரியாத விலங்கினம் ( வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ) , மற்றொன்று கேள்வி கேட்கத் தெரிந்த விலங்கினம் ( மனிதர்கள் ).

புலி ,சிறுத்தை , யானை ,காட்டெருமை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு காரணம் , நாம் மட்டுமே . காடுகளின் பரப்பளவு குறைவதால் தான் அவை ஊருக்குள் வருகின்றன . தமிழ்நாட்டில், வால்பாறைப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தையோ ,யானையோ வருவதற்கு காரணம் , மலையின் உச்சிப் பகுதியில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றப்படுவது தான் .நாம் சிறுத்தைகளின் இடத்தைப் பிடிக்கும் போது சிறுத்தை நம் இடத்தை நோக்கி வர உந்தப்படுகிறது .சிறுத்தைகளைக்   குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை . இந்த பூமியில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிறுத்தைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு . பூமி எல்லோருக்கும் சொந்தம் .

கேள்வி கேட்கும் விலங்குகளாக பழங்குடியின மக்கள் , மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் . அவர்களுக்கான நீதி மறுக்கப்படும் போது ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் . ஆயுதம் என்றவுடன் 5000 மையில் தூரம்  அணுகுண்டுகளைக் தூக்கி சென்று தாக்கும் அக்னி-5 என்று நினைத்துக்கொள்ளக் கூடாது . வருகிற வருவாயில் அதிக பணத்தை ராணுவத்திற்காக செலவழித்த பிறகும் ஆயுதம் போதவில்லை என்று சொல்லும் இந்திய அரசையும் நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மக்களின் உதவியுடன் மக்களுக்காகவே போராடுகின்றனர் , அவர்களின் போராடும் முறை தான் தவறு .

நாட்டில் வாழும் உரிமை உள்ளவர்கள் ( பொதுமக்கள் ) தங்கள் கோரிக்கைகள்  நிறைவேற சாலை மறியலோ ,உண்ணாவிரதமோ செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் . உரிமை மறுக்கப்பட்டவர்கள் ( மாவோயிஸ்ட்டுகள் ) அரசு அதிகாரிகளைக் கடத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இயந்திரத்தைத் தூண்டுகின்றனர் . கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசு அதிகாரிகள் நாடெங்கிலும் கடத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் , யாரும் கொல்லப்படவில்லை , கடத்தலை தடுத்தவர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் . யாரையும் கொல்வது குற்றம் தான் . ஆனால் ,மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசின் முதல் அடியே கொலை தான் .அந்த கொலைக்கு பெயர்  " என்கவுன்டர் " ," பசுமை வேட்டை " . அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் எண்ணிக்கை ஏராளம் . சொந்த மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று தான் போல . தங்களை யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று தான் உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கம் நினைக்கிறது .இதில் சீனா , இலங்கை , அமெரிக்கா ,இந்தியா என்ற பேதமெல்லாம் இல்லை . இந்த விசயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று தான் .

அரசிடம் நேர்மை என்பதே இல்லை . ஏனெனில் அதன் அங்கத்தினருக்கு நேர்மை என்பது அவசியமில்லை . வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சுகபோகமாக வாழலாம் என்பது மட்டுமே முக்கியம் . மற்றதெல்லாம் அவசியமில்லை . மாவோயிஸ்ட்டுகளிடம் நேர்மை இருக்கிறது ,வீரப்பனிடமும் நேர்மை இருந்தது . வீரப்பன் இருக்கும் வரை , அவர் இருப்பதாக சொல்லப்படும் அனைத்து வனப்பகுதிகளும் வன அதிகாரிகள் இல்லாமலேயே மிகவும் பாதுகாப்பாக இருந்தன .அவர் இறந்த பிறகு நிலைமை தலைகீழ் . அவர் இருந்த பகுதிகளில் தற்போது வனம் பாதிக்கப்பட்டுள்ளது . இதே போல் தான் உலகெங்கிலும் , எங்கெல்லாம் போராட்டக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வனம் காக்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது .

வனம் காக்கப்படுவது தான் அரசுகளுக்கு பிடிக்கவில்லை . ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு  மாநிலமாக விலை பேசி வருகிறார்கள் . அதற்குத்  தடையாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் . நியாயமான முறையில் உண்ணாவிரதம் இருந்தாலும் ( கூடங்குளம் ) கண்டுகொள்வதில்லை . ஆயுதம் எடுத்தாலும் கண்டுகொள்வதில்லை . எங்கள் உரிமைகளுக்காக வேறு எப்படித் தான் நாங்கள் போராடுவது ? 

பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே நிறைய ஊடகங்கள் இயங்குகின்றன . அவை , மக்கள் மத்தியில் ஒரு மாய உலகை காட்சிக்கு வைக்கின்றன . உண்மைகள் அனைத்தும் லாவகமாக மறைக்கப்படுகின்றன . தொடர்ந்து மக்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றுகின்றன . எந்த விசயத்திலும் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தும் ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன .

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்கள் வெளியே வர வேண்டும் . கடவுளே ( இருக்காரா? இல்லையா ?)  உண்மையான  நேர்மையான ஊடகம் எது என்று எனக்கு அடையாளம் காட்டு .... ஐயோ கரன்ட் போச்சே !!!  


மேலும் படிக்க :

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
....................................................................................................................................................................

4 comments:

nivetha said...

good to read this uncle!

நெல்லி. மூர்த்தி said...

“அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள் பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?” - இது வேதனையான உண்மை!

ஒவ்வொரு வரிகளுடன் உங்களுடன் உடன்படிகின்றேன் நண்பரே... இன்றைய ஊடகங்களும் ஒரு முதலாளியாக இலாபம் கொழிக்கும் நிறுவனமாகத் தான் இயங்குகின்றன. பிரபலமான பல ஊடகவியலாளர்களும் தரகர்களாக பல்வேறு ஊழல்களுக்கு ஊற்றுக்கண்களாக திகழ்ந்துள்ளனர் எனும் ஐயத்தினை நாம் சமீபகால செய்திகளிலிருந்து அறிந்துக் கொள்கின்றோம்.

Anonymous said...

It is a good blog. My appreciations. First what all State Govts. do is...for instance I want to tell in the backward hill regions of Chattisgar, the living conditions of people must be improved to a great extent and that will automatically solve all the Maoists wish to focus; rather I can say that all Maoists will turn as good citizens. While cities are getting lot of funds for improvement such a kind of step is not given for developing rural, backward hilly areas in Chattisgar.

"Manyan"

Unknown said...

அரசியல் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. நான் சமீபத்தில் அரசியல் கட்டுரைகளை http://www.valaitamil.com/politics என்ற இணையதளத்தில் பார்த்தேன். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.நீங்களும் சென்று பாருங்களேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms