Saturday, June 25, 2016

தனித்து நிற்கும் கவிதைகள் !

 வளமையான தமிழ் மொழியில் கவிதை இலக்கியம் சங்க காலத்திலிருந்தே செழித்து வளர்ந்து வருகிறது. சங்க கவிதைகளில் மொழியின் அடர்த்தி சற்று அதிகமாகவே இருக்கும். மொழியின் அடர்த்தி தான் கவிதையை எப்போதும் முழுமைப்படுத்துகிறது. புதுக்கவிதையின் வரவிற்கு பிறகு கவிதைகளில் மொழியின் அடர்த்தி தேய்ந்து கொண்டே போகிறது.தற்போது வழக்கத்தில் சாதாரணமாக பேசுகிற எழுதுகிற வார்த்தைகளை அழகாக அடுக்கி அதைக் கவிதை என்று சொல்கிறோம்.  கவிதையின் கருப்பொருளாக அதிகம் இடம்பிடிப்பது காதலும் இயற்கையும் தான்.அதிலும் வானத்தில் நிலாவைப் பார்த்தவுடன் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் கவிஞன் வெளியே வந்து விடுவான் போல. ஒரு சில கவிஞர்கள் நிலவை ஆணாகவும் மற்றும் சிலர் பெண்ணாகவும் உருவகப்படுத்துகின்றனர். அதனால் ,நிலவை மாற்றுப்பாலினத்தவர் என அறிவித்துவிடலாம். மக்கள் கவிஞராகவும் பொதுவுடமை...

Saturday, June 11, 2016

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து  நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை முழுதாக வாசிக்க வைத்துவிட்டால் போதும் ,வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்வார்கள். அடுத்தடுத்த புத்தகங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள். புத்தக வாசிப்பை நாமெல்லோரும் இணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் நாலைந்து பேர் இணைந்து...

Saturday, June 4, 2016

பெண் எனும் உருமாறும் சக்தி !

இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms