Saturday, June 25, 2011

செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !

பலவிதமான கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . ஒருவேளை 2012 ல் உலகம் அழிந்து விடுமோ ?  தெரியாது . அரசியல் கொ.கா. , ஆன்மீக கொ.கா.,இயற்கை கொ.கா., உலகமயமாக்கல் கொ.கா., பதுக்கல் கொ.கா. என்று பல கொ.கா. நம்மிடையே உலவுகிறார்கள் . இதில் செல்போன் சேவை நிறுவனங்களும் அடக்கம் . இவர்களுக்காகவே  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே  இந்தப் பாடலை ( "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்திருந்த மருந்து சொல்லடா ( http://jselvaraj.blogspot.com/2011/04/blog-post_27.html) " )  எழுதியுள்ளார் . பெட்ரோலோ , டீசலோ , பஸ் டிக்கெட்டோ ஒரு ரூபாய்...

Monday, June 20, 2011

M.R.ராதா அவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்பு ( ஒலி வடிவில் ) !

M.R.ராதா,  "பெரியாரின் போர்வாள்" என்று அழைக்கப்பட்டவர் . தனது கூர்மையான வசனங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பியவர் . உண்மையான அஞ்சா நெஞ்சனாக இருந்தவர் . "திரையுலகில் எனது வழிகாட்டி , M.R.ராதா அண்ணன் " என்று ( MGR ,  M.R.ராதாவால் சுடப்பட்ட பிறகும் )  MGR ஆல் புகழப்பட்டவர் . மொத்தத்தில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட ஒரு உன்னதமான கலைஞர் . அவரது சிறு வாழ்க்கைக் குறிப்பு . பாகம் 1 : பாகம் 2 : பாகம் 3 : உண்மையான கழ(ல)கக்காரர் ! மேலும் கேட்க : M.R.ராதாவின் சிறந்த பேச்சு !...

Monday, June 13, 2011

சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் !

ஜூன் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது . இதில் கேள்விகள் ஆங்கிலத்திலும் , ஹிந்தியிலும் இருந்தன . ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தத் தேர்வு கொஞ்சம் எளிதாக இருந்து இருக்கும் . காலையில் நடந்த பொதுஅறிவு தேர்வை விட மதியம் நடந்த ஆங்கிலத் திறனறிவு தேர்வில் மொழியால் பாதிப்பு அதிகம் .  ஒரே தீர்வு தான். ஆங்கிலம் , ஹிந்தி இவற்றுடன் பிராந்திய மொழியிலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் . ஹிந்திக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் நிறுத்தப்பட வேண்டும். ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை ஆளும் அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.  மேலும் படிக்க : M.R.ராதாவின் சிறந்த பேச்சு ! .....................................

சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !

சென்னைக்கும் பறவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா ? சென்னை , கிராமங்களின் கூட்டமாக இருந்த காலத்தில் கேட்ட பறவைகளின் சங்கீதம் இப்போது மீண்டும் கேட்க ஆரம்பித்துவிட்டது . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இந்த பறவைகளின் சங்கீதம் ஒரு ஆறுதல் . இயந்திர ஒலிகளை மட்டுமே விரும்பிக் கேட்கும் ஒரு சிலருக்கு இது எரிச்சலைக்கூட உருவாக்கலாம் . ஆனாலும் இது நம்  ஆரோக்கியத்தின் அடையாளம் .   சென்னையில் மரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குயில் இருக்கிறது . காலை , மதியம் ,மாலை , இரவு என்ற பேதமில்லாமல் எல்லா நேரமும் கூவிக் கொண்டே இருக்கிறது . எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குயிலின் சங்கீதம் . ஒரு சில இடங்களில் தனியாகவும் மற்ற இடங்களில் இயந்திர ஒலிகளுடன் இணைந்து தான் கேட்கிறது , குயிலின்...

Friday, June 10, 2011

நானே ராஜா நானே மந்திரி - விஜயகாந்த்

விஜயகாந்த் , நகைச்சுவை காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்த படம் , " நானே ராஜா நானே மந்திரி " . இந்தப் படத்தில் இடம்பெற்ற சில நகைச்சுவை காட்சிகளை ஒரு முறை பாருங்களேன் . ஒளியும் ஒலியும் கொஞ்சம் தரம் குறைவு . ஆனால் , நகைச்சுவையின் தரம் அதிகம் . பாகம் 1: பாகம் 2: பாகம் 3: நானே ராஜா நானே மந்திரி ! மேலும் பார்க்க : குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! ...................................

Sunday, June 5, 2011

வேடந்தாங்கலில் ஒரு நாள் !

" வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும்  இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது .  வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது . பறவைகளை தங்கள் குழந்தைகள் போலே பாவித்து , அவைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் . இந்த கிராம மக்களின் இந்த உயர்ந்த பண்பால் தான் நமக்கு இந்த சரணாலயம் கிடைத்துள்ளது . 1962 முதல் இந்தச்...

Friday, June 3, 2011

முக்கிய பிரச்சனைகளும் ஆளுநர் உரையும் !

ஆளுநர்  உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:  அரசு தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் அச்சமின்றி அமைதியான வாழ்க்கையை நடத்த வழிவகுக்கும். கடந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும். சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதுவரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படுகிறது. உள்ளூர் கேபிள் டிவி இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமை ஆக்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச...

Wednesday, June 1, 2011

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

M.R.ராதா , ஈடு இணையில்லாத உன்னதமான  கலைஞர் , எதற்கும் , யாருக்கும் அஞ்சாத மகா துணிச்சல்காரர் , பெரியாரின் வழி நடந்த பெரியார் . தனது நாடகங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரப்பியவர் . நடிப்பில் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர் . இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு முறை மலேசியா சென்ற போது அவர் பேசியதைக் கேளுங்கள் .  எவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா , MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள் என்று நிறைய பேசி இருக்கிறார் . சுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக் கேட்ட திருப்தி! மேலும் பார்க்க  : நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் !  குறுக்கு...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms