Sunday, January 29, 2012

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம்

1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப்  பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் .  1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம்  மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை...

Saturday, January 21, 2012

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல . நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல்...

Saturday, January 7, 2012

ஒற்றையடிப் பாதை !

ரயிலில் பயணிக்கிறேன் சிறியதும் பெரியதுமாக நீளமும் குட்டையுமாக குறுக்கும் நெடுக்குமாக வழியெங்கும் ஒற்றையடிப் பாதைகள் நினைவூட்டுகின்றன முன்பு நான் நடந்த ஒற்றையடிப் பாதைகளின் பாதையோரப் புற்களையும் நான்கு பனைமரங்களுக்கு அருகில் இருந்த ஒரே நுங்கு மரத்தையும் குளக்கரையையும் பூவரசமர நிழலையும் பலமுறை பார்த்த வேறு வேறு பாம்புகளையும் முள் தைத்து மிதிவண்டி பஞ்சர் ஆனதையும் அடைமழை காலத்தில் பாதையின்  குறுக்கே இருந்த ஓடையில் வந்த வெள்ளத்தையும் தூக்கிபிடித்த பிறகும் கூட டவுசரின் ஓரத்தை நனைத்த வெள்ளத் தண்ணீரையும் ஓடையை ஒட்டியிருந்த நாவல்மர பழத்தின் மறக்க முடியாத சுவையையும் வாழ்க்கையைப் போலவே பள்ளத்தையும் மேடையும் கூடவே ஒற்றையடிப் பாதைகளை மறந்த என் நிகழ்காலத்தையும் ! மேலும் படிக்க : நிலவே நீ ஒரு ...! மெதுவான எளிய வாழ்க்கை...

தனிமை !

நீளமான மின் கம்பியில் ஒரே ரெட்டைவால்குருவி என்னைப் போலவே ! மேலும் படிக்க : கவிதை மாதிரி !  மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் ! ......................................................................................................................................................................

நிலவே நீ ஒரு ...!

உனது பெயர் சில ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் உன்னைப்பற்றி எழுதாத இலக்கியமுமில்லை அறிவியலுமில்லை  நீயில்லாவிட்டால் ஜோதிட உலகமே இயங்காது இரவுகள் உனக்கானவை வளர்ச்சியும் வீழ்ச்சியும் நிரந்தரமல்ல கற்றுத்தருவது நீ தான் வர்ணிக்கப்படுகிறாய் ஆண் என்றும் பெண் என்றும் உண்மையில் நிலவே நீ ஒரு திருநங்கை ! மேலும் படிக்க :  கவிதை மாதிரி !  நாமெல்லாம் குற்றவாளிகளே ! .......................................................................................................................................................................

Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்                    கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம் செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம்                     சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம்  உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்                    உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம் சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன் ...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms