Saturday, January 7, 2012

ஒற்றையடிப் பாதை !


ரயிலில் பயணிக்கிறேன்
சிறியதும் பெரியதுமாக
நீளமும் குட்டையுமாக
குறுக்கும் நெடுக்குமாக
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகள்
நினைவூட்டுகின்றன
முன்பு நான் நடந்த
ஒற்றையடிப் பாதைகளின்
பாதையோரப் புற்களையும்
நான்கு பனைமரங்களுக்கு
அருகில் இருந்த
ஒரே நுங்கு மரத்தையும்
குளக்கரையையும்
பூவரசமர நிழலையும்
பலமுறை பார்த்த
வேறு வேறு பாம்புகளையும்
முள் தைத்து மிதிவண்டி
பஞ்சர் ஆனதையும்
அடைமழை காலத்தில்
பாதையின்  குறுக்கே இருந்த
ஓடையில் வந்த வெள்ளத்தையும்
தூக்கிபிடித்த பிறகும் கூட
டவுசரின் ஓரத்தை
நனைத்த வெள்ளத் தண்ணீரையும்
ஓடையை ஒட்டியிருந்த
நாவல்மர பழத்தின்
மறக்க முடியாத சுவையையும்
வாழ்க்கையைப் போலவே
பள்ளத்தையும் மேடையும்
கூடவே
ஒற்றையடிப் பாதைகளை
மறந்த என் நிகழ்காலத்தையும் !

மேலும் படிக்க :

நிலவே நீ ஒரு ...!

மெதுவான எளிய வாழ்க்கை !
.................................................................................................................................................................... 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms