Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Saturday, November 22, 2025
Thursday, December 31, 2015
நானும் நானாக !
11:47:00 AM
மானிடன்
நதியும் நதியாக
கடலும் கடலாக
காடும் காடாக
ஊரும் ஊராக
அதுவும் அதுவாக
அவளும் அவளாக
இல்லாத தேசத்தில்
நானும் நானாக இல்லை ... !
மேலும் படிக்க :
பிரியாத பிரியங்கள் ...!
நிலவே நீ ஒரு ...!
...................................................................................................................................................................
கடலும் கடலாக
காடும் காடாக
ஊரும் ஊராக
அதுவும் அதுவாக
அவளும் அவளாக
இல்லாத தேசத்தில்
நானும் நானாக இல்லை ... !
மேலும் படிக்க :
பிரியாத பிரியங்கள் ...!
நிலவே நீ ஒரு ...!
...................................................................................................................................................................
Saturday, July 19, 2014
Wednesday, December 19, 2012
சிறகசைவில்...!
10:36:00 PM
மானிடன்
அத்தனையும்
அற்றுப்போன நிலையிலும்
துளிர்க்கிறேன்
உன் சிறகசைவில்
ஒவ்வொரு முறையும்...!
நன்றி :- http://praying-mantis101.blogspot.in/
மேலும் படிக்க :
பிரியாத பிரியங்கள் ...!
ஒற்றையடிப் பாதை !
கேணி வீடு !
..........................................................................................................................
Monday, June 18, 2012
பிரியாத பிரியங்கள் ...!
9:00:00 PM
மானிடன்
நீ என்னைவிட்டு பிரிந்த பின்பும்
பிரியாத பிரியங்களை என்ன செய்ய
கடலில் கரைத்தேன் மழையாக
பொழிந்து என்னை வந்து சேர்ந்தன
காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது
மீண்டும் என்னுள் வந்துவிட்டன
மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு
உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன
இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன்
சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன
நீயே சொல்லிவிடு
உன் பிரியங்களை என்ன செய்ய !
மேலும் படிக்க :
முதல் காதல் !
.................................................................................................................................................................
பிரியாத பிரியங்களை என்ன செய்ய
கடலில் கரைத்தேன் மழையாக
பொழிந்து என்னை வந்து சேர்ந்தன
காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது
மீண்டும் என்னுள் வந்துவிட்டன
மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு
உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன
இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன்
சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன
நீயே சொல்லிவிடு
உன் பிரியங்களை என்ன செய்ய !
மேலும் படிக்க :
முதல் காதல் !
.................................................................................................................................................................
Wednesday, June 6, 2012
முதல் காதல் !
10:03:00 PM
மானிடன்
முதல் துளி
சிட்டுக்குருவியின்
முதல் சிணுங்கல்
மலரை தீண்டும்
முதல் தென்றல்
சூரியனின்
முதல் வெளிச்சம்
துளிர் விடும்
முதல் இலை
வானவில்லின்
முதல் தரிசனம்
பவுர்ணமி இரவின்
முதல் குளுமை
கடல் அலைகளின்
முதல் நனைத்தல்
நம் முதல் காதல் !
மேலும் படிக்க :
ஒற்றையடிப் பாதை !
கேணியின் ஆயுட்காலம் !
..................................................................................................................................................................
Saturday, March 24, 2012
கேணி வீடு !
1:15:00 PM
மானிடன்
ஆழமாக
அழகாக
அதிசயமாக
வற்றாத சுவை நீர்
வழங்கிய
நீச்சல் பழகிய
புறாக்கள் கூடு
கட்டிய
பயிர்களை
விளைவித்து
பசி போக்கிய
கேணி மீது
மண் மூடி
கட்டப்படும் வீட்டுக்கு
என்ன பேர் வைப்பார்கள் ?
என்ன பேர் வைத்தாலும்
இனி எங்களுக்கு
அது கேணி வீடு தான் !
கோடை காலத்தின்
வறண்ட தழுவலால்
துவளும் அந்த வீட்டின்
தரையை இனி கேணியின்
வற்றாத ஊற்றுகளின்
ஜீவிதம் நனைக்கக்கூடும் !
இப்படிதான் முடிகிறது
எங்கள் ஊர் கேணிகளின்
ஆயுட்காலமும்
விளைநிலத்தின்
ஆயுட்காலமும் !
மேலும் படிக்க :
ஒற்றையடிப் பாதை !
....................................................................................................................................................................
Saturday, January 7, 2012
ஒற்றையடிப் பாதை !
9:45:00 PM
மானிடன்
ரயிலில் பயணிக்கிறேன்
சிறியதும் பெரியதுமாக
நீளமும் குட்டையுமாக
குறுக்கும் நெடுக்குமாக
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகள்
நினைவூட்டுகின்றன
முன்பு நான் நடந்த
ஒற்றையடிப் பாதைகளின்
பாதையோரப் புற்களையும்
நான்கு பனைமரங்களுக்கு
அருகில் இருந்த
ஒரே நுங்கு மரத்தையும்
குளக்கரையையும்
பூவரசமர நிழலையும்
பலமுறை பார்த்த
வேறு வேறு பாம்புகளையும்
முள் தைத்து மிதிவண்டி
பஞ்சர் ஆனதையும்
அடைமழை காலத்தில்
பாதையின் குறுக்கே இருந்த
ஓடையில் வந்த வெள்ளத்தையும்
தூக்கிபிடித்த பிறகும் கூட
டவுசரின் ஓரத்தை
நனைத்த வெள்ளத் தண்ணீரையும்
ஓடையை ஒட்டியிருந்த
நாவல்மர பழத்தின்
மறக்க முடியாத சுவையையும்
வாழ்க்கையைப் போலவே
பள்ளத்தையும் மேடையும்
கூடவே
ஒற்றையடிப் பாதைகளை
மறந்த என் நிகழ்காலத்தையும் !
மேலும் படிக்க :
நிலவே நீ ஒரு ...!
மெதுவான எளிய வாழ்க்கை !
....................................................................................................................................................................
தனிமை !
9:41:00 PM
மானிடன்
நீளமான மின் கம்பியில்
ஒரே ரெட்டைவால்குருவி
என்னைப் போலவே !
மேலும் படிக்க :
கவிதை மாதிரி !
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
...................................................................................................................................................................
நிலவே நீ ஒரு ...!
9:24:00 PM
மானிடன்
உனது பெயர்
சில ஆண்களுக்கும்
சில பெண்களுக்கும்
உன்னைப்பற்றி எழுதாத
இலக்கியமுமில்லை
அறிவியலுமில்லை
நீயில்லாவிட்டால்
ஜோதிட உலகமே
இயங்காது
இரவுகள் உனக்கானவை
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நிரந்தரமல்ல
கற்றுத்தருவது நீ தான்
வர்ணிக்கப்படுகிறாய்
ஆண் என்றும்
பெண் என்றும்
உண்மையில்
நிலவே நீ ஒரு
திருநங்கை !
மேலும் படிக்க :
கவிதை மாதிரி !
நாமெல்லாம் குற்றவாளிகளே !
....................................................................................................................................................................
Monday, April 4, 2011
மனிதனாய் இருக்க மறந்து விடாதே ...!
7:09:00 PM
மானிடன்
குழந்தையாய் இரு
சிரிக்கும் வரை ...!
சிறுவனாய் இரு
விளையாடும் வரை...!
மாணவனாய் இரு
படிக்கும் வரை ...!
இளைஞனாய் இரு
ஜெயிக்கும் வரை ...1
மனிதனாக இருக்க
மறந்து விடாதே சாகும் வரை ...!
....................................













