Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 1, 2024

போர்களை நிறுத்துங்கள் !


19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போரின் வதைகளையும், வாதைகளையும், வலிகளையும் அதிகமாக அனுபவித்த இனம் யூத இனம். இன்று அதே யூத இனம் அடுத்த இனத்தை வதைக்கிறது. ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தவுடன் ஆதிக்க உணர்வு தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமானால் நாம் பாலஸ்தீன மக்களின் பக்கமே நிற்க வேண்டும். 


எந்தவிதமான ஆதிக்கமாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான். நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இன்றைய சூழலிலும் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போர்கள் நடந்து வருவது மனித இனத்திற்கே அவமானம் . அன்றைய போர்களில் போரிற்கு தொடர்பில்லாத எளிய மக்கள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய போர்களில் எளிய மக்களே அதிகமும் கொல்லப்படுகின்றனர். 


எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரத்தில் எங்கே குண்டு விழும் என்று தெரியாத அந்தப் போர்ச் சூழலை நினைக்கும் போதே அச்சமாகவும், பதைபதைப்பாகவும் இருக்கிறது. இரு தரப்பிலும் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபைக்கென்று கொஞ்சமாவது அதிகாரமும் மரியாதையும் இருந்தன. தற்போது எல்லாம் நீர்த்து போய் முதலாளித்துவத்தின் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அதே போல முன்பு உலகில் எங்கு போர் தொடங்கினாலும் முதல் குரலாக ஒலிப்பது அமைதி உடன்படிக்கைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என்பது தான்‌. அதற்கு சம்மதிக்க மறுத்து போரைத் தொடரும் நாடுகள் மீது உடனடியாக பொருளாதார தடை விதிக்கப்படும். இப்போதெல்லாம் இப்படியான எந்தக் குரலும் ஒலிப்பதில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.


போர்க் குற்றம் புரியும் நாடுகளை வெளிப்படையாக ஆதரிக்கும் குரல்கள் மட்டுமே தற்போது கேட்கின்றன. மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இது தான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தற்போதைய சூழலில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது . இது பூமிக்கும் மனித இனத்திற்கும் நல்லதல்ல. "எல்லோருக்கும் எல்லாம் " என்பதை எப்போதும் வலதுசாரிகள் ஏற்கமாட்டார்கள். வன்முறை யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் நிகழ்த்தப்படலாம் என்பதே கள நிலவரமாக உள்ளது. "அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி" என்கிறார் சாமுவேல் ஜான்சன். தேசபக்தி என்ற பெயரில் தான் நாடுகள் மற்ற நாட்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. எதற்கெடுத்தாலும் தேசபக்தியைத் தூக்கிப் பிடிப்பவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட மனிதமே பெரியது.அனைத்திலும் மனிதமே முன்நிறுத்தப்பட வேண்டும். 


தற்போதைக்கு உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் அமைதி மட்டுமே நிலவும். உலகெங்கும் போர்ச்சூழலிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். பூமியில் மனிதர்கள் சமநிலையை உருவாக்கத் தவறினால் இயற்கை தனது பாணியில் சமநிலையை நிச்சயம் உருவாகும்

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !


Sunday, July 23, 2023

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !

 


இன்று வரை இயற்கை வளங்கள் சிதைவடையாமல் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை பிரிவினைவாத பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பாஜக, கால் பதித்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும் மக்களிடையே பிரிவினைவாதத்தையும் வெறுப்பையுமே வளர்த்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைக்கும் இதுவே காரணம். 


பாஜக இருக்கும் இடத்தில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களின் வளர்ச்சி குறித்து ஒருபோதும் பாஜக  சிந்தித்ததில்லை.  பார்ப்பனியம், தனது ஆதாயத்திற்காக எந்த எல்லைக்கும் போகும், எதையும் செய்யத் தயங்காது. பாஜகவின் நிலைப்பாடும் இதுதான். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பிரிவினைவாதத்தை வளர்த்து சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைபற்றியிருக்கிறது. 


பாஜக எந்த இடத்தில் நுழைந்தாலும் அங்கிருக்கும் சிறுபான்மையினர்தான் அவர்களின் இலக்கு. அந்தச் சிறுபான்மையினர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகவோ , குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். அங்கிருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் அந்தச் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வெறுப்புகளையும் வளர்த்து வன்முறையைத் தூண்டி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டம். 2002ல் இனப்படுகொலை நடந்த பிறகு பாஜக குஜராத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் பாஜக, பெரும்பான்மையினரை மட்டுமே ஆதரிக்கும். பெரும்பான்மையினரின் செயல்களை நியாயப்படுத்தும். பெரும்பான்மையினரில் இருக்கும் குற்றவாளிகளுக்கும் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கும். அடுத்து மணிப்பூர் என்ன ஆகுமோ ? தெரியவில்லை.


வடகிழக்கு மாநிலங்களில் இன்று வரை பழங்குடியின மக்களால் காப்பாற்றப்பட்டு வந்து இயற்கை வளங்களின் நிலை இனி என்ன ஆகுமோ என்பதே பெரும் கவலையாக இருக்கிறது. இதைப் பற்றி பாஜக 1% கூட சிந்திக்கப் போவதில்லை. அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்க்கும். 


தாங்கள் இந்திய அளவில் சிறுபான்மையினமாக இருப்பதால் உருவான தாழ்வு மனப்பான்மையை மறைக்க இந்து ,இந்துத்துவா என்று சொல்லி பெரும்பான்மையினர் முதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள், பார்ப்பனர்கள். இதை  உணராதவரையில் இந்திய நாட்டிற்கு, இந்திய மக்களுக்கு விடிவுகாலமே இல்லை. நாம் சமநிலைப்படுத்தவில்லை என்றால் இயற்கை அனைத்தையும் சமநிலைப்படுத்தும். 


பார்ப்பனியம் - RSS - பாஜக ஆதிக்கம் செலுத்தும் வரை இந்தியா எல்லோருக்குமானதாக இருக்காது. இந்தியா என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா ? இந்தியா, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம். பிரிவினைவாத, மதவாத, இனவாத, சாதிவாத, கார்ப்பரேட்வாத , சமத்துவத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி எல்லோருக்குமான இந்தியாவை கட்டமைப்போம்.


பார்ப்பனியம் வீழும் இடத்திலிருந்தே புதிய இந்தியா தோன்ற முடியும் ! 


மேலும் படிக்க:


டெல்லி எரிகிறது !


Thursday, July 7, 2022

Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

 


தற்போதைய ஒன்றிய பாஜக அரசு, இந்திய மக்களுக்கு எதிராக ஏவி விட்டிருக்கும் விதவிதமான அடக்குமுறைகளை இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.  ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விதவிதமான சந்தைப்படுத்துதல் மூலமாக எப்படி நமது பொருளாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுகிறதோ அப்படி நமது உணர்வுகளை  ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் சேர்ந்து சூறையாடுவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 


'வேற்றுமையில் ஒற்றுமை ' தான் இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையை சீர்குலைத்து தனது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை காவு வாங்குகிறது தற்போதைய ஒன்றிய பாஜக அரசு. ஏற்கனவே உலகவணிகமயமாக்கலால் நமது வாழ்க்கை முறையின் மீதும் நமது பண்பாட்டின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 


உலகமயமாக்கலால் உலகெங்கும் வாழும் பல்வேறு விதமான தனித்த இனக்குழுக்களின் தனித்த அடையாளங்கள் அழிந்து வருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவை தற்போது ஆளும் ஒன்றிய பாஜக அரசு இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு விதமான இனக்குழுக்களின், மற்ற அரசியல் கட்சிகளின் , மற்ற மொழிகளின் அடையாளங்களை அழித்து தனது சாதிய பிரிவினையை முன்னிலைப்படுத்தும்  RSS சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது. ஏற்கனவே சாதிய திமிரில் ஊறித்திளைப்பவர்களுக்கு  இது வசதியாகப் போய்விட்டது. இன்று வரை சாதியப் பிரிவினையால் அதிகளவில் பலன்களை பெற்று வருபவர்கள் பார்ப்பனர்களே. சாதியை முன் வைத்து நிகழும் மரணங்கள் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது போதாதென்று பாஜக கட்சி, மக்களிடத்தில் மத ரீதியான பிரிவினையையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 


அதிகாரத்தை தக்க வைக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் போவார்கள். ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து, மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிறகும் கூட   இந்திய ஊடகங்கள் நாட்டில் நல்லாட்சி நடப்பது போன்ற பிம்பத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியோ இதுவரை ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை. அந்தளவிற்கு பயந்து கிடக்கும் ஒரு மனிதரைத் தான் சங்கிகள் வீரர் என்று கொண்டாடுகிறார்கள். கூடவே ஊடகங்களும் துதிபாடுகின்றன. தங்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டோசாப் செய்து பரப்பப்படும் அத்தனை பொய்களையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 


ஊடகங்கள் மூலம் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஊடகங்கள் மூலம் தான் தாங்கள் செய்து அத்தனை அயோக்கியத்தனங்களையும் மறைக்கிறார்கள். 2024 தேர்தலுக்கும் ஊடகங்களையே பயன்படுத்துவார்கள். இதை எதிர்த்து வெல்வதில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இப்படியான சூழலில்தான் ' Jana Gana Mana' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஊடகங்கள் எப்படி மக்களை முட்டாளாக்குகின்றன என்பதை அப்பட்டமாக விளக்குகிறார்கள். கேரள மக்களின் அரசியலறிவு பற்றி நாம் அறிந்ததே. இப்படியான அரசியல் சினிமா அங்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. இந்த விசயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது. நாயகத்துதிபாடல் ஒழியாதவரை தமிழ் சினிமா உருப்படாது. மிகவும் தைரியமான ஒரு முன்னெடுப்பு இந்த சினிமா. மக்களின் நலன்களுக்காக சிந்திப்பவர்களுக்கும் , மக்களின் நலனிற்காக களத்தில் இறங்கி செயல்படுபவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை இந்த சினிமா உருவாக்கி இருக்கிறது. 


 நீதிமன்றங்களை முன் வைத்து எடுக்கப்படும்  திரைப்படங்களே மக்களின் அரசியலை, மக்களுக்கான அரசியலை விரிவாக பேசுகின்றன. இத்திரைப்படமும் அப்படியே. மக்களின்  பக்கம் நின்று மக்களின் பிரச்சனைகளை பேசுவதுதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் 'Jana Gana Mana' ஒரு மக்களின் படைப்பு. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். Netflix OTT ல் காணலாம் !

மேலும் படிக்க :

ஜெய்பீம் - அறத்தின் குரல் !

சர்தார் உத்தம் - உலகத்தரம் !

Tuesday, February 25, 2020

டெல்லி எரிகிறது !


எதற்காக அஞ்சினோமோ அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2014 பாஜக ஆட்சியில் அமித்ஷா ஆட்சிக்கு வெளியில் இருந்தார். மக்களுக்கு தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தாலும் வன்முறையோ, மனிதத்தன்மையற்ற செயல்களோ தூண்டிவிடபடவில்லை. அங்கங்கே இஸ்லாமியர்களுக்கு எதிரான சிறுசிறு வன்முறைகள் மட்டுமே நடைபெற்றன. யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு மாநில அரசே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, ஈடுபடுகிறது. ஆதித்யநாத் எனும் மதவாதி பதவியில் இருக்கும் வரை இது தொடரவே செய்யும். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் தப்பித்தன.


இந்த 2019 பாஜக ஆட்சியில் அமித்ஷா எனும் மனிதத்தன்மையற்ற உயிரினம் நேரடியாக ஆட்சிக்குள் வந்தது. உள்துறை அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. நன்றாக கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். நரேந்திர மோடியால் பொய்களை உண்மையென்று நம்பி சத்தமாக பேச மட்டுமே தெரியும். செயல்கள் அனைத்துமே அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான். மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதும் இது தான் நிலைமை. இப்போது இந்திய பிரதமராக இருக்கும் போதும் இதுதான் நிலைமை.

இந்த 2019 பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே அமித்ஷா தனது மதவாத செயல்களைத் தொடங்கிவிட்டார். அஸ்ஸாமில் NRC அமல், கஷ்மீர் மாநிலத்திற்கான 370 சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA ) இயற்றியது என்று தொடர்கிறது.டெல்லி போலிஸ் தனது கட்டுப்பாட்டில் இருப்பதால் CAAவிற்கு எதிரான போராட்டங்களை கலைக்க போலிஸ்காரர்களுடன், RSS அமைப்பைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாகவே பங்கெடுத்து வருகிறார்கள். இந்த மனிதத்தன்மையற்ற செயல்களை ஊடகங்கள் மூடி மறைக்கப் பார்க்கின்றன. இந்திய அளவில் வெகு சில ஊடகங்களே கொஞ்சமாவது பாசிச பாஜகவின் மதவாத முகங்களை படம்பிடித்து காட்டுகின்றன. மற்றவை அனைத்தும் அப்பட்டமாக ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றன.

CAAவிற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் அமைதியான முறையிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன. பாஜக ஆளும் உத்திரபிரதேசத்திலும், கர்நாடகத்திலும், போலிஸ் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் மட்டுமே வன்முறைகள் ஏவப்பட்டு உயிர்பலிகள் நடந்துள்ளன. இதை வைத்து பார்க்கும் போது கலவர பயத்தை உண்டாக்கி CAAவிற்கு எதிரான போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வரவே பாஜக விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.

இஸ்லாமிய மதவெறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கிறது, பாஜக. இந்த நேரம் சிவசேனா மட்டும் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் மகாராஷ்டிர மாநிலமும், இன்னொரு டெல்லியாக மாறியிருக்கும். சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மகாராஷ்டிர மக்கள் தப்பித்தார்கள். பிரிவினைவாதத்தை விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்த பாஜக அரசு களிப்புடையதாக இருக்கும்.

சொல்லி வைத்தது போல அனைத்து சங்கிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். மனிதத்தன்மை சிறிதும் இல்லாமலேயே பாஜகவிற்கு முட்டுக் கொடுக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் தயவால் தமிழகத்தில் சங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்லதற்கல்ல.

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை மக்களுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் தொடரவே செய்யும். ஒட்டு மொத்த விமர்சனங்களும் அமித்ஷா மீதே வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான எதுவும், யாரும் வென்றதாக வரலாறு இல்லை. CAAவிற்கு எதிரான போராட்டத்திலும் மக்களே வெல்வார்கள். மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த அரசால் மக்களுக்கு என்று எந்தவித நன்மையும் கிடைக்காது.

Monday, August 5, 2019

கஷ்மீர் மக்களை வாழ விடுங்கள் !


இந்தியா, ஒரு சிற்றரசுகளின் கூட்டமைப்பு என்பதை உணராத யாராலும் கஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது. கஷ்மீர் என்றால் தீவிரவாதம், தீவிரவாதிகள், வன்முறை, குண்டு வெடிப்பு, பாகிஸ்தான்,சீனா எல்லை பிரச்சனைகள் என்பதையே நம் தலையில் கட்டுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இருக்கும் நிஜமான கஷ்மீரின் முகம் நம் கண்களுக்கு தெரிவதேயில்லை. நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை.

கஷ்மீர் பெற்றிருக்கும் சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்திற்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அந்த சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மட்டுமே அந்த சிறப்பு அந்தஸ்து பயன்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அது சிறப்பு அந்தஸ்தாக இருந்திருக்குமானால் இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக கஷ்மீர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களை விட 30 வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது. சாலை வசதி, கல்வி , மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு என எல்லாமே மோசமான நிலையில் தான் இருக்கின்றன. படித்த பிறகு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் குறி வைக்கின்றன. இது வரை வந்த அரசுகள் கஷ்மீர் மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்திருந்தால் அவர்கள் முழுமையாக இந்தியாவை ஆதரித்து இருப்பார்கள்.

கஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை கஷ்மீரின் சொக்க வைக்கும் இயற்கை வளங்கள் குன்றாமல் அப்படியே இருப்பது தான். அப்படிப்பட்ட அழகிய கஷ்மீரின் இயற்கை வளங்கள் இனி என்னாகும் என்பதே பெரிய கவலை. கார்பரேட்கள் கஷ்மீருக்குள் நூழைந்தால் நிச்சயம் இயற்கை வளங்கள் அழிவைச் சந்திக்கும்.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதும் கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. இப்போதும் பெரும்பாலான கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. ராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ அதிகபட்ச அதிகாரம் கொடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு கஷ்மீரும் ஒரு உதாரணம். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களைப் போலவே கஷ்மீரிலும் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களின் பட்டியல் என்பது மிகவும் நீளம். பெண்கள் அடைந்து வரும் துன்பங்களும் அதிகம். எந்த அரசாங்கமும் ராணுவத்தின் குற்றங்களை நியாயமாக்கவே முயற்சிக்கும். அதற்கு இந்திய அரசாங்கமும் விதிவிலக்கல்ல.

கஷ்மீர், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால் கஷ்மீர் மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை. மாநிலமாக இருந்த போதும் அவர்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. இந்தியாவுடன் சேர்ந்தால் இந்த உரிமைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட சொற்ப உரிமைகளையும் இழக்கப் போகிறார்கள். பாசிச பார்ப்பன பாஜக அரசு எப்போதும் கார்பரேட்களுக்காகவே சிந்தித்து அவர்களுக்காகவே உழைக்கும் ஒரு அரசு. அந்த வகையில் இந்த மாற்றம் என்பது நிச்சயம் கார்பரேட்களுக்கு உதவும்.

தீவிரவாதம் என்பது நிச்சயம் கஷ்மீர் பகுதியில் இருக்கிறது தான் அதற்காக ஒட்டு மொத்த கஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளை சித்தரிப்பதை பொது சமூகம் கைவிட வேண்டும். உலகிலுள்ள எல்லா மக்களையும் போலவே கஷ்மீர் மக்களும் வாழப் பிறந்தவர்கள் தான். அவர்களை வாழ அனுமதியுங்கள்.



Monday, April 15, 2019

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள்!


" பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ, இஸ்லாமிய, கிருத்துவராகவோ,சனாதன தர்மத்தால் ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை, மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது. " 'மூடர்கூடம்' திரைப்படத்தின் இயக்குநர், நவீன்.

நவீன் சொன்னது போல பாஜக அரசை எதிர்க்க நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். அந்த அளவிற்கு சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிய அரசு தான் தற்போதைய மோடி அரசு. இந்தியர்கள் கட்டிய வரிப்பணம் தவிர்த்து அனைத்து இந்தியர்களிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயையாவது முறையற்ற வகையில் திருடியிருக்கிறது இந்த அரசு.
இந்திய அரசியல் அமைப்பின் அடைப்படையே சமத்துவமும், சுதந்திரமும் தான். இந்த இரண்டையுமே கேள்விக்கு உட்படுத்திய அரசு தான், தற்போதைய மோடி அரசு.

உங்களின் ஓட்டு மோடிக்கா ? இல்லையா ?இந்த தேர்தல், இந்த ஒரே கேள்வியைத் தான் மையப்படுத்தி அமைந்துள்ளது. மக்களை ஓயாது நிம்மதியிழக்கச் செய்து இன்பம் கண்டது தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு. மோடி அரசை வீழ்த்துவதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம், காங்கிரஸ். காங்கிரஸின் துணையுடன் மூலமே பாஜகவையும், மோடியையும் செல்லாக்காசு ஆக்க முடியும். அதனாலேயே காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டியுள்ளது.

அதுவுமில்லாமல் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எவ்வளவோ முதிர்ச்சியடைந்துள்ளன. போன 2014 தேர்தலில் குடிசைகளுக்கு சென்று கூழ் மட்டுமே குடித்துக் கொண்டு பப்புவாக இருந்தவர், இன்று மக்களின் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். உண்மையிலேயே ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.பார்ப்போம், அதிகாரம் கையில் வந்தவுடன் என்ன செய்கிறார் என்று.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம். கோடிக்கணக்கான மக்கள் இத்திட்டத்தின் பலன்களை அனுபவிக்கிறார்கள். நிறைய குடும்பங்களுக்கு இதுவே வருமானம். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகவே இதை பார்க்க முடிகிறது. இத்திட்டத்தின் முழு பலன்களையும் பெற முதலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தவிர மற்றவர்களுக்கு செலுத்தப்படும் ஓட்டு மோடியின் பாஜகவிற்கு ஆதரவான ஓட்டாகவே கருதப்படும்.

யாருக்கு ஓட்டு போட்டு என்ன பலன் ? தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம். நாம உழைச்சா தான் நமக்கு வாழ்க்கை ஓடும் என்று இருப்பவர்களுக்கு, மற்ற தேர்தல்கள் போல இந்த தேர்தல் இல்லை. நாம உழைக்கனும், நம்ம வாழ்க்கை ஓடனும் என்று நினைப்பதற்கு கூட மோடியின் மக்கள் விரோத பாஜக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையையும் தற்போதைய பாசிச பாஜக அரசு பாதித்திருக்கிறது. மோ(ச)டி அரசிற்கு எதிராக வாக்களியுங்கள்.

11 ரூபாய் பாலிசி, 330 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு வருடா வருடம் நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு பாலிசி திட்டங்களால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் தினமும் மக்களின் பணம் வங்கிகளால் திருடப்படுகிறது. இந்த வகையில் ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கிகளுக்கு கிடைத்துள்ளன. அவ்வளவும் ஏழை எளிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணம். இந்த பாவம் உங்களை சும்மா விடாது.

மக்கள் தங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர். ஏர்செல் போன்ற சிறிய நிறுவனங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இன்று மொத்தம் பிஎஸ்என்எல் உடன் சேர்த்து நான்கு நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு சேவையை வழங்குகின்றன. எந்த ஒன்றும் முழுமையாக கார்பரேட்கள் கைக்குச் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் தான், மொபைல் சேவை அட்டூழியங்கள். நீங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 35 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த கெடு முடியும் போது உங்களின் கணக்கில் பணம் இருந்தாலும் உங்களால் பேச முடியாது. எவ்வளவு பெரிய வன்முறை இது.

மாதம் 100, 150 ரூபாயில் கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்தி வந்தனர். அதற்கும் வேட்டு வைத்தது, மோடி அரசு. நிம்மதியாக டிவி பாரக்கும் உரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது. இதுவும் கார்பரேட்கள் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அன்று 100, 150 ல் பார்த்த சேனல்கள் அனைத்தையும் இன்று 300 கொடுத்தாலும் பார்க்க முடியாது.இப்படி இந்த மக்கள் விரோத மோடி அரசு மக்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகளின் பட்டியல் மிகவும் நீளம். இன்று வரை இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளில் முழுமையான மக்கள் விரோத அரசு, மோடியின் பாஜக அரசு மட்டுமே. பிரிவினைவாத அரசியல் ஒழிய பாஜக ஒழிய வேண்டும்.

தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திக்காமல் எப்போதும் மக்களுடனே இருக்கும் கம்யூனிச தோழர்களை வெற்றியடையச் செய்யுங்கள். மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யுங்கள். தமிழகத்தில் களமிறங்கி இருக்கும் நான்கு தோழர்களையும் வெற்றி பெறச் செய்வது நம் கடமையாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :-

திருப்பூர் - கே.சுப்பராயன் - கதிர் அரிவாள்

நாகபட்டினம் -எம்.செல்வராசு - கதிர்
அரிவாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி :-

மதுரை - சு. வெங்கடேசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

கோவை - பி.ஆர்.நடராசன் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

நாகப்பட்டினம், மதுரை,திருப்பூர் மற்றும் கோவை மக்களே , எல்லாம் உங்கள் விரலில் !

ஒரு நாடே பாஜகவின்  மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக நிற்கும் போது கூட ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்களை என்ன செய்வது ? பெரும்பாலான ஊடகங்கள் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன. யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா போடுவது என்பது மட்டுமே தற்போதைய ஊடக தர்மம் என்றாகிவிட்டது.

எந்த ஊடகங்களும் மக்களை சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை. தாங்கள் நினைப்பதை மக்களின் மனங்களில் பதிய வைக்கவே மெனக்கெடுகின்றன. மனசாட்சிக்கும் ஊடகங்களுக்கும் தொடர்பில்லை.

அரசியல் யாருக்கானது ? எவ்வளவு போதாமைகள், குறைபாடுகள் இருந்தாலும் அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கானது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் பெறும் ஓட்டு சதவீத்திலிருந்தே இதை தெரிந்து கொள்ளலாம். மிகச் சிலரே இன்று வரை ஒரே சின்னத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் வெற்றியைத் தீர்மானிப்பது எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களுக்கு பிடித்தவர்களுக்கு, தங்களின் நியாயப்படி ஓட்டுப் போடும் பெரும்பான்மை மக்களே.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். யாரை எங்கே வைப்பது என்று அவர்களுக்குத் தெரியும். மக்களை நம்புவோம்,  தலை நிமிர்வோம் !

மோடியின் மக்கள் விரோத பாஜக அரசை தூக்கியெறியுங்கள் !

காங்கிரஸ் - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் !

மோடியின் வீழ்ச்சியே இந்தியாவின் எழுச்சி!

மக்களின் பணத்தை செல்லாக்காசாக மாற்றிய மோடியை செல்லாக்காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்!

மேலும் படிக்க :

இடதுசாரியும் வலதுசாரியும்!

Monday, April 8, 2019

இடதுசாரியும் வலதுசாரியும் !


அரசியல் நிலைப்பாட்டில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று இடதுசாரி அரசியல், மற்றொன்று வலதுசாரி அரசியல். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் அவற்றை இந்த இரண்டே பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். சமத்துவத்தை வலியுறுத்துவது இடதுசாரி அரசியல், சமத்துவத்திற்கு எதிரானது வலதுசாரி அரசியல்.

மக்கள் நலனை முன்வைத்து அரசியல் செய்வது இடதுசாரி அரசியல். இனம், மதம், மொழி,சாதி போன்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் செய்வது வலதுசாரி அரசியல். வலதுசாரி அரசியலில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும். இடதுசாரி அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்படும். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிச இயக்கங்களை மட்டுமே குறிக்காது. எல்லோரையும் சமமாக நடத்தும் எல்லா அரசியல் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்கள் தான். ஆனால் இந்த இடதுசாரி இயக்கங்கள் கம்யூனிச இயக்கங்களைப் போல தீவிரமாக இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதில்லை. இது தான் கம்யூனிச இயக்கங்களுக்கும் மற்ற இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இன்றைய அரசியல் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கார்பரேட்கள் கைகளில் தான் இருக்கிறது. கார்பரேட்கள் தாங்கள் நினைத்ததை நினைத்தவுடன் செய்வதற்கு வலதுசாரிகள் ஆட்சியில் இருக்க வேண்டும். உலகெங்கிலுமே இது தான் நிலைமை. முன்பை விட தற்போது வலதுசாரி இயக்கங்கள் புத்துணர்வு பெற்றிருப்பதற்கு கார்பரேட்களே முக்கிய காரணம். இயற்கையும், மனிதமும் காக்கப்பட வேண்டுமானால் வலதுசாரி இயக்கங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வாக்களிக்கப் போவதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் வாக்களிக்கப் போவது இடதுசாரிக்கா ? வலதுசாரிக்கா ?

பாஜக ஒரு வலதுசாரி இயக்கம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து கட்சிகளையுமே வலதுசாரிகள் என்று தான் அழைக்க வேண்டியுள்ளது. வலதுசாரிகளால் என்றுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. அனைத்து இடங்களிலும் வலதுசாரிகள் தோற்றுப்போவது தான் அவர்கள் மக்களுக்கு செய்யும் ஒரே நன்மை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் !

திமுக-வும் வேண்டாம், அதிமுக- வும் வேண்டாம், காங்கிரஸ்-ம் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம் என்றால் இவற்றுக்கு மாற்றாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களை தான். ஆனால் யதார்தத்தில் கம்யூனிச இயக்கங்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட மக்களிடத்தில் இல்லை. நீங்கள் இந்த கட்சிகளை எதற்காகவெல்லாம் புறக்கணிக்கிறீர்களோ அதற்காகவெல்லாம் ஆதரிக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களைத் தான். ஆனால் ஆதரிக்க மாட்டீர்கள்.

வலதுசாரி இயக்கங்கள் மாற்றாக இருக்க முடியாது . ஆம், நாம் தமிழர் கட்சியும் , மக்கள் நீதி மய்யமும் வலதுசாரி இயக்கங்கள் தான். இன்றுவரை தனது ஜாதி மீதான பற்றை துறக்க முடியாத கமலஹாசன் சொல்வது போல ஒருவரால் ஒரே நேரத்தில்  இடதுசாரியாகவும், வலதுசாரியாகவும் இருக்கவே முடியாது. தனது ஜாதி பற்றை மறைக்க முற்போக்கு வேடம் போடுவது போல தான் ஒரு வலதுசாரி என்பதை மறைக்க இடதுசாரி வேடம் போடுகிறார்.

பாஜக மதத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. நாம் தமிழர் கட்சி இனத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. பிரிவினைவாதத்தை உரக்கப் பேசுவதால் உள்ளம் மட்டுமே களிப்புறும். பிரிவினைவாதத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை.

ஏன் மனிதத்தை எல்லோரும் பேச மறுக்கிறோம் ? எல்லா மனிதர்களும் சமமானவர்கள். இந்த பூமி அனைவருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் வாழ்வதற்கு சம உரிமை இருக்கிறது. இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கை ஒரு கூட்டியக்கம். நாம் இந்த பூமியில் ஒரு நிமிட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க கண்ணிற்கு தெரியாத எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆனால் நொடியில் இதை மறந்து விடுகிறோம். இனம், மதம், சாதி பார்த்து உணவு உண்ண வேண்டுமெனில் நம்மால் ஒரு வாய் உணவைக்கூட உண்ண முடியாது. அப்புறம் என்ன கூந்தலுக்கு இவ்வளவு பிரிவினைவாதங்கள்.

மனிதம் வெல்லட்டும் !

Saturday, February 11, 2017

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பொன்னான வாய்ப்பு !

மத்தியிலும் சரி , மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மகத்தான வாய்ப்பை காலம் வழங்கியிருக்கிறது. அதற்கு முதலில் முதன்மையான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறுபாடுகளை பேசித்தீர்த்து ஒன்றிணைய வேண்டும். ஒரே கட்சியாக கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட தாங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்களுக்கான எல்லாப் போராட்டங்களிலும் கம்யூனிஸ இயக்கங்களே முன்னிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து தான் மக்கள், இந்துத்துவா கட்சி என்று தெரிந்தே தான் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.மோடியின் குஜராத் மாடல் விளமபரமும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அதிகாரத்தைக் கைபற்ற வாய்ப்பே பெறப்போவதில்லை என்ற மனநிலையில் தான் பாஜகவின் மோடி அரசின் செயல்பாடு இருக்கிறது. குஜராத் என்ற மாநிலம் குறித்து தற்போது ஒரு தகவலும் வெளியே வருவதில்லை. இந்நிலையில் காங்கிரஸ் , பாஜக இந்த இருகட்சிகளுக்கும் மாற்று எதுவும் தேசிய அளவில் புதிதாக உருவாகவில்லை ( ஆம்ஆத்மி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் ). இந்த இருகட்சிகளையும் தவிர்த்து தேசிய அளவில் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் உள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காகத்தான் உழைக்கிறார்கள்.ஆனால் இதுவரை மக்களை நெருங்கிச் செல்லவேயில்லை. இப்போதாவது நெருங்கிச் செல்ல வேண்டும். தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும்.

அடுத்த மாற்றாக இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளும் வலுவில்லாமல் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக்கட்சிகளில் உட்கட்சிபூசல் அதிகமாக உள்ளது. உதாரணம் , தமிழ்நாடு , உத்திரபிரதேசம் etc. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் நிரப்பினால் மக்கள் பயனடைவார்கள். இதை அம்பேத்கரின் வார்த்தைகள் மூலமாகவே நிறைவேற்ற முயலலாம். கற்பி , ஒன்றுசேர் , புரட்சி செய். மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்களை வாசிக்கப் பழக்க வேண்டும். பெரியாரையும் , அம்பேத்கரையும், மார்க்ஸையும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்திய மக்கள், மத்திய , மாநில அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகளால் தர முடியும். ஆனால் இது எளிதல்ல. மிகக்கடுமையாக உழைத்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழகத்தில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியம் தான். சமீபத்திய மெரினா போராட்டம் , மாணவர்களின் , மக்களின் கம்யூனிஸ ஆதரவு மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதற்கு முதலில் இந்த இரு இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.திரைப்படங்களில் கடைசியாக 'சிவப்பு மல்லி ' திரைப்படத்தில் கம்யூனிஸக் கொடியை பார்த்ததாக ஞாபகம்.

தமிழகத்தில் கம்யூனிஸ ஆட்சி என நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது. இது நடக்குமா ? என்று தெரியவில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் தோழர்களின் கையில் !
மீதி காலத்தின் கையில் !
மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !

..................................................................................................................................................................


Saturday, November 26, 2016

ஐநூறும் ஆயிரமும் !



இந்தியர்களுக்கு கடந்த இரண்டு வார காலமாக  வட்டச் செய்தி , மாவட்டச் செய்தி , தேசிய செய்தி , உலக செய்தி, இணையச் செய்தி என எல்லாமே 500 ,1000 மட்டும் தான். டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது கூட பத்தோடு பதினொன்னாவது செய்தியாகக் கூட அறியப்படவில்லை.

இந்த 500ம் , 1000மும் செல்லாது என அறிவித்த உடனேயே பயமும் குற்ற உணர்ச்சியும் நம்மை தொற்றிக் கொண்டன. நாம் உழைத்துச் சம்பாதித்த பணமாக இருந்தாலும் மிகுந்த தயக்கத்துடனே வெளியே எடுக்கிறோம். பெரு நகரங்களை விட சிறு நகரங்களில் 500 ,1000 ஓரளவிற்கு எல்லா இடங்களிலும் வாங்கப்படுகிறது. வேறு வழியில்லை . 100 ரூபாய் தாள்கள் கிடைப்பது தான் கடினமாக இருக்கிறது.  மக்கள் இன்னமும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பணத்தை மாற்றும் பணியில் சரியான திட்டமிடல் இல்லாததால் மனித உழைப்பும் , காலமும் வீணடிக்கப்படுகிறது. இதையெல்லாம் இந்த அறிவிப்பு ஈடு செய்யுமா ? தெரியவில்லை.இந்த நடவடிக்கை ஓரே ஒரு இந்தியச் சாமானியனின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்குமா ? மௌனத்துடன் காலம் சுழன்று கொண்டே இருக்கிறது.  

பொதுவாகவே சேமிப்பு பழக்கம் அதிகமுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். சிறுவாடு காசு என்ற பெயரில் ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை நம் வீடுகளில் இருப்பது இயல்பு. அதை மாற்றுவது கூட எளிதாக இல்லை.  எனக்குத் தெரிந்து தற்போதைய தலைமுறை தான் சேமிப்புப் பழக்கம் குறைவாகவோ அல்லது சேமிப்பு பழக்கம் இல்லாத தலைமுறையாகவோ இருக்கிறது.

ஊழலுக்கு எதிராகவும் , பெரும் பணக்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்தும் , பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகள் குறித்தும், அரசு நிறுவனங்கள் சலுகை விலையில் விற்கப்படுவது குறித்தும் , முக்கிய துறைகளில் கூட அந்நிய முதலீட்டை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பது குறித்தும் கேள்விகள் கேட்கும் நடுத்தர வர்க்கம் தான் கட்டம் கட்டப்படுவதாகத் தெரிகிறது.

எப்படிப் பார்த்தாலும் இந்த அறிவிப்பு மோடி அரசின் சர்வாதிகார மனநிலையையே வெளிப்படுத்துகிறது. இந்த அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது தான். இதுவரையிலான மோடி அரசின் செயல்பாடுகளால் மக்களின் பணம் தான் பல விதங்களில் அரசிற்கு சென்றடைந்துள்ளது. 11 ரூபாய் பாலிசி , 330 பாலிசி , பெட்ரோல் , டீசல் , எரிவாயு மானியம், தூய்மை இந்தியா திட்டத்திற்கு கூடுதல் வரி என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இன்று வரை தோல்வியடைந்த திட்டமாக இருக்கும்  'தூய்மை இந்தியா ' திட்டத்தின் சின்னம் வேறு புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வளவிற்குப் பிறகும் பணம் வாங்கிக் கொண்டு  ஓட்டுப் போட்டால் நமக்கெல்லாம் சொரனையே இல்லை என்று தான் அர்த்தம் !

அரசு, செல்லாது என அறிவித்து 19 நாட்கள் ஆகியும் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளமாக இன்னமும் 1000,500 தான் வழங்கப்படுகிறது.  அமைப்பு  சாரா  தொழிலாளர்களாக இருந்தாலும் சரி , அமைப்பு சார்ந்த ஆலைத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி சம்பளமாக 500, 1000 தான் கொடுக்கப்படுகிறது.

விடுமுறை எடுத்து பணத்தை மாற்றலாம் என்றாலும் எந்த வங்கியிலும் பணமில்லை , பணமில்லை எனறே சொல்கிறார்கள். ஒரு நாள் விடுமுறை என்பதே அவர்களுக்கு பெரும் இழப்பு தான். அப்படி எடுத்த விடுப்பும் பயன் தரவில்லை என்றால் என்ன செய்வார்கள் ?

அரசு செல்லாது என அறிவித்த பிறகும் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆலைகள் 1000,500 சம்பளமாக வழங்குவது சட்டப்படி குற்றம் என தெரிந்திருந்தும் எந்த தைரியத்தில் தொழிலாளர்களுக்கு வழங்குகிறார்கள் ?இந்தியாவில் இருக்கும் எந்தச் சட்டமும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , பணம் படைத்தவர்களையும் ஒன்றும் செய்யாது என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படுகிறது !

ஜனவரிக்குப்  பிறகு என்ன நடக்கப் போகிறது? என்பதைப் பொறுத்து தான் இந்த பிடிவாதமான நடவடிக்கையின் பலன் என்னவென்று தெரியும் . சாதாரண மக்களுக்கு பயன் தரும் ஒரே ஒரு திட்டமானது நிறைவேற்றப்பட வேண்டும் . எல்லோருக்கும் மருத்துவம் , எல்லோருக்கும் கல்வி . இவையே இந்தியாவின் தேவை . இந்த இரண்டும் தான் எல்லாவிதமான மக்களுக்கும் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது . இந்த இரண்டு தேவைகளையும் அரசு கவனித்துக் கொண்டால் மக்கள்,பெருமளவில் பணத்தைச் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது .

மேலும் படிக்க :

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ? 

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! 
..................................................................................................................................................

Sunday, May 15, 2016

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !


கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது. 

கதாநாயக துதிபாடல்களின் விளைவுகளை அறியாமலேயே கதாநாயக துதிபாடல் இங்கே வளர்க்கப்படுகிறது. சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் , மதவாதிகளும் சராசரி மனிதர்கள் தான் என்பதை மறந்து கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தெரியாமலேயே இருக்கிறோம். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடித்திருந்து அவருக்கு ஓட்டுப்போடுவதில் தவறில்லை. ஆனால் யார் எப்படி ஆட்சி செய்தாலும்  எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சின்னமான இரட்டை இலைக்குத்தான் சாகும்வரை ஓட்டுப் போடுவேன் என்பது அறிவீனம். இன்னொரு பிரிவினர் , தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் தி.மு.க. வின் செயல்பாடு எப்படியிருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்கிறார்கள்.

தொகுதியில், தங்களுக்குப் பிடித்த இயக்கத்தின் சார்பாக கடைந்தெடுத்த அயோக்கியனே நின்றாலும் நாங்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. இந்த நிலை மாற வேண்டும்.  கதாநாயக துதிபாடல் ஒழிய வேண்டும். முதல்வர் வேட்பாளரை முன்வைத்தோ , கட்சியை முன்வைத்தோ , சாதி, மதம் , இனம் உள்ளிட்டவையை முன்வைத்தோ வாக்களிக்கக் கூடாது. தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில்  யார் சிறந்தவரோ , தேர்தலுக்குப் பிறகும் எளிதாக அணுகக்கூடியவரோ அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும். 

ஒரு நல்ல வேட்பாளரை நமது தொகுதிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் நமது முதல் கடமை. நமக்குப் பிடித்தவர் முதல்வராக வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம் முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. நாம் நமது தொகுதிகளில்   தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் சேர்ந்து தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரும் நல்லவராகவே இருப்பார். இன்றைய சூழலில் இது பெருங்கனவு என்றாலும் இப்போதாவது தொடங்க வேண்டும்.  முன்பெல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முதல்வரையை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது, கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் மிதக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றமல் , தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திப்பதையே எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதில் பழைய கட்சிகள் , புதிய கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழக அளவில் சரிவர பணியாற்றவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடம் இருந்தும் , இரு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புகள் இருந்த போதும் இந்த வெற்றிடத்தை நிரப்ப கம்யூனிஸ்டுகள் தான் சரியான தீர்வாக இருந்தும் அதை அவர்கள் முன்னெடுக்கவில்லை. 

தங்களை மாற்றத்துக்கான கட்சி என்று அறிவித்து கொண்ட தேமுதிக கூட இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்கிறது. அந்த கட்சி வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மக்களோடு மக்களாக,  மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் வளர முடியும். ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் முன்நிறுத்தப்படாமல் அடுத்த கட்டத்தலைவர்களையும் உருவாக்க வேண்டும் . இதை எந்தக்கட்சியும் முறையாக கடைபிடிப்பதில்லை. ஜனநாயக சர்வாதிகாரம் தான் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது . 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் மாற்றி மாற்றி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான். இந்த இரு கட்சிகளின் மீதிலும் கடுமையான வெறுப்பு இருந்தாலும் , இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வாக்களிக்க பெருவாரியான மக்கள் தயங்குகிறார்கள்.  ஏன் என்று தான் தெரியவில்லை. புதிய கட்சிகளும் போதிய நம்பிக்கையைப் பெறவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஒரு மாற்றாக இருந்தாலும் , அவர்கள் ஒருங்கிணைந்து மக்களைக் கவரவில்லை. எத்தனை பேர் சேர்ந்திருந்தாலும் கூட்டணியின் பெயரை மாற்றியிருக்கக் கூடாது. " தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி - தாமாக கூட்டணி " வாசிக்கவே நன்றாக இல்லை.  எல்லாக் கட்சிகளும் மக்களின் நலனுக்காகத்தானே ஆட்சிக்கு வருவதாக சொல்கின்றன. அப்புறம் கூட்டணி பேர் வைப்பதில் ஏன் இத்தனை பேதங்கள். வைகோ வின் தான்தோன்றித்தனமான பேச்சுகளும்,  செயல்பாடுகளும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவையே தருகின்றன. 

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. சீமான் முன்வைக்கும் வாதங்கள் சிறப்பானதாக இருந்தாலும் , இனம் இனம் என்று  இனத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் யாரும் எங்கேயும் வாழ்வதற்குதான் சுதந்திரமே பெற்றோம்.ஜனநாயகத்தின் தேவையும் அது தான். நாம் தமிழர் கட்சி இன்னொரு சிவசேனாவாக மாறாமல் இருக்க வேண்டும்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் சின்னங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் குலுக்கல் முறையில் தனித்தனி  சின்னம் ஒதுக்க வேண்டும். ஓரே கட்சிக்கு ஒரே சின்னத்தை தொடர்ந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். குழப்பங்கள் நிகழும் என்று சொல்லப்படலாம். 75% மேல் படிப்பறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலத்தில் குழப்பம் எதற்கு வருகிறது.  இதை மீறியும் தேர்தலை முன்வைத்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் உள்ளன. ஓட்டுப் போடுவதைத் தாண்டியும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்படும் விசயம் ஓட்டு வங்கி. கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீததை வைத்தே தற்போதைய தேர்தலில் அக்கட்சிகளின் வெற்றி, தோல்வி  மட்டுமல்லாமல் , மற்ற கட்சிகளுடன் பேரங்களும் பேசப்படுகின்றன. நாம் கட்சிகளை பார்த்து ஓட்டுப்போட்டதன் விளைவு இது. கட்சிகளைப் பார்த்து ஓட்டுப் போடாமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட்டால் இந்த ஓட்டு வங்கி சதவீதம் சினானாபின்னமாகிவிடும். இந்த தேர்தலில் எப்படி மதுவிலக்கையும் ,பெரும்பாலும் இலவசமில்லா தேர்தல் அறிக்கைகளை வெளியிட வைத்தோமோ , அதே போல நல்லவர்களை மட்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லாம் நாம் போடப்போகிற ஓட்டில் இருக்கிறது. 

நம் வாக்கு! நம் மாற்றம் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !


Saturday, January 10, 2015

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?


தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது  எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே கிடக்கிறது என்ற புலம்பல் தான் மிச்சம்.

 பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து மறுசுழற்சி செய்தாலே பாதி இந்தியா சுத்தமாகி விடும்.

இயற்கையில் கழிவு என்பதே இல்லை. மனிதர்கள் தான் கழிவு என்பதை உருவாக்கி அதை சுத்தப்படுத்த வேறு மெனக்கெடுகிறோம். இயற்கையை நாம் ஒன்றும் காப்பாற்ற வேண்டியதில்லை. தன்னைக் காத்துக் கொள்ளும் பேராற்றல் இயற்கையிடம் இருக்கிறது. இயற்கை மீது நாம் கை வைக்காமல் ( மணல் அள்ளுதல், மலையைக் குடைதல், காடுகளை அழித்தல் ,ஆலைக் கழிவுகளை கலத்தல் etc ) இருந்தாலே போதும்.

எந்த உயிரினமும் தனது தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடமிருந்து பெற முயல்வதில்லை மனிதனைத் தவிர. ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் மூலம் பலநூறு ஆண்டுகளாக சேர்த்துவைக்கப்பட்ட இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்க  அனுமதியளித்துவிட்டு மறுபக்கம் சுத்தத்தைப் பற்றி பேசுகிறார்கள். இயற்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள் ,சட்டம் இயற்றுகிறார்கள்,திரைப்படங்கள் எடுக்கிறார்கள் , பாடத்திட்டம் வகுக்கிறார்கள் etc..

மட்கும் குப்பைகளை உரமாகவோ, உயிரி வாயு (bio gas )வாகவோ மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும் . Bio gas plant அமைக்க மானியம் கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு தெருவிலும் அரசே bio gas plant அமைக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான குப்பைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். மட்காத குப்பைகளை தனியே பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். ஒவ்வொரு வார்டிலும் ஒரு மையம் அமைத்து பிளாஸ்டிக் பொருட்களை கிலோ கணக்கில் மக்களிடமிருந்து பெற்று அதற்கு பணமும் கொடுக்கலாம்.

நேற்றைய குப்பையையும் இன்றைய குப்பையையும் சுத்தமாக்குவதுடன் தொழிற்சாலைகளில் உருவாகிக் கொண்டிருக்கும் நாளைய குப்பைகளை குறைப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் தேவை. தெருவுல இருக்கிறது மட்டும் தான் கழிவா , ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக பெற்று அனைத்து விதமான நீர் நிலைகளையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் வெளியேற்றுவதெல்லாம் கழிவு இல்லையா. அதைப் பற்றி யாரும் வாயே திறக்க மாட்டேங்கிறீங்க. ஆளாளுக்கு தெருவுல நின்னே போஸ் கொடுக்கிறீங்க போஸு .

எல்லோருக்குமான சுத்தமான , சுகாதாரமான கழிப்பிடங்களை  உறுதி செய்வதுடன் மனிதக் கழிவுகளை கையாள்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுத்து ஆக்கப்பூர்வமான முறைகளை செயல்படுத்த வேண்டும்.

போலி விளம்பரத்தால் பிரதமர் ஆனது போல போலி விளம்பரத்தால் இந்தியாவை சுத்தம் செய்து விடலாம் என நினைக்கிறீர்களா மிஸ்டர்.மோடி ?

தற்போது மோடி பிரதமராக இருப்பதற்கு காங்கிரஸ் மீதான நீண்டகால வெறுப்பும் , மாற்றத்தை விரும்பிய மக்களின் மனநிலையும் தான் முக்கிய காரணம் .அதை விளம்பரங்கள் உதவியுடன் மோடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மருந்துவிலை கட்டுப்பாட்டு கொள்கை நீக்கம் , ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்  முடக்கம் , மரபணுமாற்றம் செய்த பயிர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் , பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களுக்கு வீண் அலைச்சலைத் தரும் ஆதார் திட்டம் மீண்டும் செயல்படுத்தல் என்று மோடி அரசு மக்களுக்கு பல சோதனைகளை செய்து வருகிறது . இன்னும் மக்களுக்கு என்னென்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை . யார் ஆட்சி செய்தாலும் பெருநிறுவனங்களுக்கு, மக்களை விட நிறைய சலுகைகள் கிடைக்கும் என்பது பொது விதியாய் போனது .சாதாரண  மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிகவும் குறைந்தபட்ச சலுகைகள் கூட பறிக்கப்படுவது வருத்தத்தைத் தருகிறது .

சர்க்கரை வியாதி இந்தியாவின் தேச வியாதியாக மாறி வருகிறது . புற்றுநோய் கால் பதிக்காத ஊரே இல்லை என்ற நிலை மாறி , கால் பதிக்காத வீடே இல்லை என்ற நிலையை நோக்கிச் செல்கிறது . இதற்கு இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது ? அனைவருக்குமான மருத்துவ வசதியை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு இருக்கிறது . அமர்த்தியா   சென் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி குறிப்பிட்டு இருந்தார் .

மன்மோகன் சிங் சோனியாவின் பொம்மையாக இருந்தது போல , மோடி இந்துத்துவா சக்திகளின் பொம்மையாக இருக்கிறார் . எல்லாப் பிரச்சனைகளுக்கும் மன்மோகன் போலவே மோடியும் வாயை மூடியே இருக்கிறார் . இந்துத்துவா சக்திகள் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மை ஆட்சியை  தவறாகப் பயன்படுத்துகின்றன . இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகள் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன . இந்திய ஜனநாயக நாட்டின் பிரதமரான நீங்கள்  என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

கட்சி அரசியலை வேரறுப்போம் !

..................................................................................................................................................................


Wednesday, April 30, 2014

ஆம் ஆத்மியின் குரல் !

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தான் மாநில , தேசிய அளவிளான அரசியல் கட்சிகளின் பொது புத்தி . ஆம் ஆத்மி இவ்வாறு இல்லை என்பது சற்றே ஆறுதல் தருகிறது.

ஒரு தேசிய கட்சியாக நாடு முழுவதும் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியாவின் மாற்று அரசியலுக்கான நம்பிக்கைக் கீற்றாய் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அவசரப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக பதவியிலிருந்து விலகியது பெரிய விமர்சனமாக உள்ளது. எதற்காக பதவி விலகியது என்பது சிந்திக்க வேண்டிய விசயம் . மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் தான் ஆம் ஆத்மி பதவி விலகியது . பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானலும் நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் அதிகம் இருக்கும் நாடு தான் இந்தியா. பதவிக்காக இங்கே கருணாநிதி என்னவெல்லாம் செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே.

 கெஜிரிவால் ,காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து திடீரென்று மோடி எதிப்பு நிலைப்பாட்டிற்கு மாறியது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை . ஆம் ஆத்மியின் கொள்கை ஊழல் எதிப்பு என்றால் கெஜிரிவால், ராகுலை எதிர்த்து தான் போட்டியிட்டுருக்க வேண்டும் . கெஜிரிவால் ,மோடிக்கு எதிராக நிற்பது காங்கிரஸுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது . கெஜிரிவால் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படுகிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆம் ஆத்மி மீதும், கெஜிரிவால் மீதும் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன .ஒரு அரசியல் கட்சிக்கு ஊழல் எதிர்ப்பு , வெளிப்படைத் தன்மை இவை மற்றும் போதுமா ? காங்கிரஸ் ,பா.ஜ.க., மற்றும் பல்வேறு மாநில கட்சிகள் மீது இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மி எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறது ? தெரியவில்லை .

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் ஒவ்வொரு ஓட்டும் மாற்றத்திற்கான ஓட்டாகவே இருக்கும் . இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் பெறப் போகும் வாக்கு சதவீதம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் . ஒட்டு மொத்த இந்தியாவிற்காக கொள்கைகள் வகுத்து செயல்பட்டால் மட்டுமே ஆம் ஆத்மி வளர முடியும் . இந்தியாவை ஒரே விதமான அளவுகோலில் எப்போதுமே அளக்க முடியாது . பல்வேறு தரப்பட்ட மக்களின் குரலாக ஆம் ஆத்மி ஒலிக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் . எது எப்படியோ " நோட்டா " வில் விழும் ஓட்டும் " ஆம் ஆத்மி "ல் விழும் ஓட்டும் மற்ற கட்சிகளுக்கு மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அச்சத்தை நிச்சயம் உண்டாக்கும் .

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

...................................................................................................................................................................

Wednesday, March 13, 2013

ஈழத்தை நோக்கி ....

ஊடகங்களின் பிடியிலிருந்து வெளிவந்து சமூகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது நம் கடமை . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறைத்து தொடர்ந்து ஒரு போலியான ,மாயமான உலகை நம் கண்முன் நிறுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன . அப்படிப்பட்ட ஊடகங்களைத் தாண்டி இப்படி போராட்டம் தொடங்கி இருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் . சினிமாவைத் தாண்டி ,அரசியலைத் தாண்டி நம் ஊடகங்கள் யோசிப்பதே இல்லை . அரசியல் செய்திகளும் ,சினிமா செய்திகளும் ,கிரிக்கெட் செய்திகளும் மட்டுமே ஊடகங்களால் தொடர்ந்து முன்நிறுத்தப்படுகின்றன . நம் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் வேலை ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றன .

இந்த மாணவர்கள் போராட்டத்தை மறைக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன . ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்வதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே ஊடகங்களின் கடமைகளாக இருக்கின்றன . நாளிதழ்களில் மாணவர்கள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.செய்தி  தொலைக்காட்சிகளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மாணவர்கள் போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள் .மற்ற நேரங்களில் அடக்கி வாசிக்கிறார்கள் . செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் நடக்கும் ஒரே நல்ல விசயம் "கருத்துச் சுதந்திரம் ".இதற்கு முன்பு யாரையும் யாருக்கு எதிராகவும் கருத்துச் சொல்ல எந்தச் தொலைக்காட்சியும் அனுமதித்ததில்லை . இன்று கருத்துகள் மக்களைச் சென்றடைகின்றன . அவர்கள் சொல்வது சரியா? தவறா ?என்று முடிவு செய்வது மக்கள் வேலை . அரசுக்கு எதிராக கருத்துச் சொல்லவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது . எப்போது நம் உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறோமோ தெரியவில்லை .

உணர்ச்சிவசப்படாமல் ,அமைதியாக ஆக்கப்பூர்வமாக சிந்தித்து இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . தமிழக மாணவர்களின் குரலாக மட்டுமல்லாமல் தமிழர்களின் குரலாக ,இந்தியர்களின் குரலாக ,உலக நாடுகளின் குரலாக ,மனிதர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் . இந்தியாவின் 65 சதவீத இளைஞர்களின் சக்தியை சரியாகப்  பயன்படுத்த வேண்டும் . வன்முறையைத் தூண்டி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஆளும் அதிகார வர்க்கம் விரும்பும் என்பதை மனதில் கொண்டு கூடங்குளம் போராட்டத்தைப் போல தொடர்ந்து அற வழியில் போராட வேண்டும் .

இலங்கையில் கொல்லப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல சக மனிதர்கள் தான் என்ற மனப்போக்கை இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் . அதை நோக்கி இந்தப் போராட்டம் முன் நகர்ந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் .தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் . சமீபத்தில்  டெல்லி போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது .அதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக உலகெங்கும் விவாதங்கள் நடந்தன . முன்பை விட தற்பொழுது இந்தியாவில் என்ன நடந்தாலும் உலகம் கூர்ந்து கவனிக்கிறது ,கருத்து சொல்கிறது .இந்தச் சூழலை நாம் தவர விடக்கூடாது .

அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தில் பங்குபெறச் செய்ய வேண்டும் . பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து இந்தப்போராட்டம் தொடங்கியிருப்பது தான் சரியானது .போராட்டத்தின் முதன்மையான நோக்கம் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை உருவாகுவது தான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் .

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழம் உருவாக முடியாது என்பது தான் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை . இந்த நிலையிலாவது அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் .இன்னொரு அடியை அவர்களால் தாங்க முடியாது .அவர்கள் துணையுடன் உலகத் தமிழர்களின் ,உலக மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் .பொது வாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உருவானது  போல தனி ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடர வேண்டும்  . 




கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் . கிடைப்பது சுதந்திர தனி ஈழமாக இருக்கட்டும் !

நான் காலத்தை நம்புகிறேன் !

2011,ஜூலை 11 - இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...! ....



Friday, December 14, 2012

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ,மாவட்டம் ,மாநிலம் ,நாடு என்று வெளிப்புறத்திலும் மொழி , ஜாதி ,மதம் ,இனம் ,மாநிலம் ,நாடு என்று உள்ளுக்குள்ளும் எல்லைகள் வகுத்துக்கொண்டு நிதமும் தன் சக இனத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் .மனிதன் இன்னமும் விலங்கு தான் ; இனிமேலும் விலங்கு தான் .மனிதன் என்று ,எல்லாவற்றையும் கடந்து சக மனிதனை ,சக மனிதனாக நினைக்கிறானோ , தானும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்று உணர்கிறானோ, அன்று சொல்லிக் கொள்ளலாம் "தான் ஆறறிவு படைத்த விலங்கு" என்று .

ஒரு நாட்டின் வளம் ,செல்வம் என்பதெல்லாம் நீண்ட காலம் நீடிப்பதில்லை . அன்று செல்வ வளமுடன் இருந்த நாடு , இன்று ஏழை நாடு .அன்று மனிதர்களே இல்லாமல் இருந்த நிலப்பரப்பு இன்று வளர்ச்சியடைந்த நாடு . அன்று அனைத்து விலங்குகளாலும் அடித்து துரத்தப்பட்ட மனித இனம் , இன்று  மற்ற அனைத்து விலங்குகளையும் அடித்து துரத்துகிறது ; இயற்கையைக் கட்டுப்பாடில்லாமல் அழிக்கிறது . எல்லாம் ஒரு சுழற்சி தான் போல . வரலாற்றைப் புரட்டும்போது இந்தியா ,ஒரு காலத்தில் மிகவும் அதிகமான செல்வ வளங்கள் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது . இந்தியாவை அடைய பல நாடுகளில் இருந்து கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்தியாவை கண்டுபிக்கும் சாக்கில் கண்டறியப்பட்ட நிலப்பகுதிகள் அதிகம் . அப்படி வந்த மெக்காலே இங்கிலாந்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது .

1835 ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமென்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது :

"நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன் . எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ , திருடனையோ நான் காணவில்லை ! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் ஒரு நாடு ! உயர்ந்த பண்பு நலன்கள் கொண்ட நாடு ! சிறந்த மனநலமும் குணநலமும் கொண்ட மக்கள் . இப்படி ஒரு நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை . அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ,காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும் , பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும் . எனவேதான் இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன் .

இந்தியர்கள் தங்களது நாட்டையும் , தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும் , ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் தங்கள் கெளரவத்தையும்  சொந்த கலாசாரம் , பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள் . பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள் . அடிமைகளாகி  விடுவார்கள் . இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும் ."

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நாம் ஆங்கில மொழிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்கிறோம் . மக்களே கவனியுங்கள் , பிச்சைக்காரனோ ,திருடனோ கண்ணில் படவில்லையாம் . அப்படி வளம் மிகுந்த நாட்டை பல்வேறு படையெடுப்புகள் மூலம் கொள்ளையடித்துச் சென்றனர் . பிரிட்டிஷ்காரர்கள்  நிலையாக வியாபாரத் தளத்தை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி இனி கொள்ளையடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தார்கள் . இந்தியாவின் வளம் குன்றாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்திருக்காது . ஒரு நெடிய சுதந்திரப் போராட்டமும்  பல ஆயிரம் உயிர்களும் தேவைப்பட்டன அந்த சுதந்திரத்தைப் பெற . அப்படி வாங்கப்பட்ட சுதந்திரம் , சாதாரண இந்திய மக்களுக்கு பெரிய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை . சுரண்டலும் ,கொள்ளையடித்தலும் நிகழ்கிறது ,அன்று வெள்ளையர்களால் ,இன்று இந்தியர்களால் ,நாளை வெள்ளைக்காரர்களால் ?

இன்று இந்தியா தான் உலகின் மிகப்பெரிய சந்தை . எதைக் கண்ணில் காட்டினாலும் மறு பேச்சு இல்லாமல் வாங்கும் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா . சாப்பாட்டை விட மற்ற விசயங்களுக்கு  அதிகம் செலவு செய்யும் மக்கள் நிரம்பிய நாடு . அதனால் , வணிக நிறுவனங்களின்  ஒரே நோக்கம் எப்படியாவது இந்தியாவில் கடை விரித்து லாபம் பார்ப்பது . அதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய பெரு முதலாளிகள் தயாராக உள்ளனர் . சின்ன உதாரணம் , வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய மட்டும் 125 கோடி செலவு செய்துள்ளது . உள்ளே நுழையவே 125 கோடி என்றால் இந்தியாவின் சந்தை மதிப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள் . இந்தியாவை மறுபடியும் வெள்ளைக்காரர்கள்  உரிமையுடன் ஆளப் போகிறார்கள் .

இந்த விசயமெல்லாம் தெரியாத ஒரு மனுஷன், சமாதியில இருந்து எந்திருச்சு உட்கார்ந்து  கத்துறார் ,கத்துறார் .கேட்க நாதியே இல்லை .எல்லாப் பேரும்  கோடிகளில்  புரள்கிறார்கள் .அரசியவாதிகள் பணக் கோடிகளில் ,மக்கள் தெருக் கோடிகளில் . அதனால் அவர் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை . அவர் ஒன்றைத் தான் சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார்  .அது  "இப்படி ஒரு நிலை வரவா சுதந்திரம் பெற்றோம் . சுதந்திரம் பெறாமலே இருந்து இருக்கலாமே ! " என்பது தான் . அந்த வெவரம் கெட்ட மனுஷன் வேற யாரும் இல்ல நம்ம "காந்தி" தான் .

ரூபாய்க்கு மதிப்பு இருந்த வரை காந்திக்கும் மதிப்பு இருந்தது .ரூபாயின் மதிப்பு குறைந்து  கோடிகள் எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்ட நிலையில் இன்று காந்திக்கும் மதிப்பு இல்லை . காந்தியின் கொள்கைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன . காந்தி வளர்த்து  விட்ட " காங்கிரஸ் கட்சி " மட்டும் இன்று தேவைப்படுகிறது , ஊழல் மட்டும் செய்யவும் , கொள்ளையடிக்கவும் ,நாட்டை சகாய விலையில் விலை பேசவும் . இன்றைய  காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . மக்கள் என்றால்  யார் ? அவர்கள் எப்படி இருப்பார்கள் ?என்று அறிவுப்பூர்வமான  கேள்விகள் கேட்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள் . மக்களாட்சி என்பதற்கும் காங்கிரஸ் ஆட்சி என்பதற்கும் துளியும் தொடர்பில்லை . கிராமப்  பொருளாதரத்தை மேம்படுத்தாமல் வளர்ச்சியை கொண்டு வர முடியாது . வளர்ச்சி கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும் .இந்தியாவில் வளர்ச்சி என்பது அந்தரத்தில் இருக்கிறது .

தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது . தண்ணீர் ,மின்சாரம் ,இனம் ,பகுதி என்று பலவித பிரிவினைகள் . இந்தியன் எல்லா இடத்திலும் இந்தியனாக இல்லை . மின்சாரத்தைப் போல தண்ணீரையும் தேசியமயமாக்கினால் தான் என்ன ? எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் ,பல்வேறு பட்ட மக்கள் ,பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் இந்தியாவைப் பற்றி கொஞ்சமாவது அரசியல் கட்சிகள் நினைக்க வேண்டும் .இல்லையென்றால் இவர்கள்  பதவிக்கு வர எதுவும் இருக்காது .

ஆசையின் விளைவாக உலகில் நிகழும் மாற்றங்களை மெளனமாக பார்த்து ரசித்துச் சிரிக்கிறார் ,புத்தர் .

புத்தர் சிரிக்கிறார் !

பின் குறிப்பு :

உலகம் அழியுமா ? இப்போதைக்கு அழியாது . ஒரு காலத்தில் டைனோசர்கள் உலகை ஆண்டன .இன்று ,மனிதர்கள் ஆள்கிறார்கள் .நாளை ,வேறு ஏதாவது ஒரு விலங்கு உலகை ஆளலாம் . பூமி அழியவே அழியாதா .அழியும் ,சூரியன் என்று அழிகிறதோ அன்று பூமியும் அழிந்துவிடும் . மனிதர்கள் அழிந்தாலும் சூரியன் இருக்கும் வரை, பூமி உயிருடன் இருக்கும் என்று தான் தோன்றுகிறது .

நன்றி :- தினமணி ,  Wall Street journal.

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

காங்கிரஸை அழிப்போம் !

.................................................................................................................................................



Monday, September 24, 2012

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

எத்தனையோ விதமான சர்வாதிகாரிகள் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது . உலகில் இருந்து இன்னும் சர்வாதிகாரிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை . காலத்துக்கேற்ற மாற்றம் பெற்று முன்னை விட வலுவாகவே வாழ்ந்து வருகிறார்கள் . உலகமயமாக்கம் சர்வாதிகாரத்திற்கு துணை போகிறது .இன்று சர்வாதிகாரிகளுக்குத்தான் மரியாதை . அரசாங்கத்தை விலைக்கு வாங்கி தான் நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள் ,நவீன சர்வாதிகாரிகள் .

நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தடுத்த உறுப்பினர் முதல் அரசாங்க அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் வரை எல்லோரும் சர்வாதிகாரிகளாகத்தான் செயல்படுகிறார்கள் . யாரைப் பற்றியும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் ,தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை செய்து காட்டும் குணமுடைய அனைவரும் சர்வாதிகாரிகள் தான் .நம் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் ,முதல்வராக இருக்கலாம் ,பதவியில் இருக்கும் பொம்மைகளாகக்கூட இருக்கலாம் , அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்து சர்வாதிகாரத்தின் பாதிப்பு இருக்கும் . முதல்வரோ ,பிரதமரோ ,பிரதமர் போல செயல்படும் பொம்மையோ சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டால் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் .

சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் ,விதவிதமான ஊழல்கள் பற்றி நம்மவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலம் அவர்களது சர்வாதிகாரம் வெளிப்படுவதை வெளிப்படையாகக் காணலாம் .மக்களாட்சித் தத்துவம் மறைந்தே விட்டது . புதிய தத்துவம் தான் இன்று ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது .அது ," பணக்காரர்களுக்காக பணக்காரார்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் அரசு " என்பதாகும் . ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் ,அதை மறைக்க மக்கள் மீது பொருளாதார அடி .காந்தி தேசம் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில் காந்திய வழிப் போராட்டத்திற்கு எந்தவித மதிப்பும் ,கவனமும் ஆளும் அரசுகளால் கொடுக்கப் படுவதில்லை .

மக்களின் போராட்டம் அனைத்து இடங்களிலும் முடக்கப்படுகிறது ,ஊடகங்களால்  மறைக்கப்படுகிறது .பணக்காரர்களுக்கு வேண்டிய அனைத்தும் தாராளமாகச் செய்யப்படுகிறது .அவர்களுக்கு இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுகிறது .அவர்களுக்காக பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது .காரணம் ,நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் பகாசுர நிறுவனங்களும் தேவையாம் . கிராமத்தில் 28 ரூபாயும் ,நகரத்தில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் தேவையில்லை . அவர்களுக்கு கடனும் கிடைக்காது .மக்களின் நிலை பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியாளர்களை நம் காலத்தின் அவலம் . " மக்கள் தொடர்ந்து ஊழல்களை சகிப்பார்கள் " என்று அரசியல்வாதிகள் நம்பினால் இழப்பு அவர்களுக்குத்தான் . இந்நிலை தொடர்ந்தால் லிபியா ,எகிப்து ,துனிசியா ,ஏமன் போல இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகும் . அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை .

பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி தேர்தலின் போது மட்டும் மக்களுக்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் . மக்களை ரொம்ப நாட்களுக்கு ஏமாற்ற முடியாது . ஆட்சியாளர்களின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் . சிறு நெருப்பு அவர்களை உசுப்பேத்திவிடும் . மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்ந்து ஒடுக்கப்படுமானால் நிச்சயம் ஒரு நாள் புரட்சி வெடிக்கும் .

எல்லோருக்கும் ஒரு உயிர் ,ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது .பூமி எல்லோருக்கும் சொந்தம் !  



மேலும் படிக்க :

 சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................
    

Saturday, May 26, 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !




சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது
சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது

சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது
சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது...

மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு
ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு...

உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
நல்ல  கணக்கை  மாதி  கள்ளக்  கணக்கை  ஏத்தி
நல்ல  நேரம்  பாத்து  நண்பனையே  மாத்து...



1964 ஆம் ஆண்டு M.S.விசுவநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த  " ஆண்டவன் கட்டளை " என்னும் திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் . பாடியவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை , காலத்தைக் கடந்தும் எல்லோராலும் ரசிக்கப்படும் குரலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபு .

இந்தப்பாடல் எளிமையாக , வித்தியாசமாக அதே சமயம் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது . சந்திரபாபுவின் உடல்மொழி மிகவும் ரசிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது . இந்தப்பாடலின் வரிகள் அரசியல்வாதிகளையும் ,பொய்க்கணக்கு காட்டி அரசை ஏமாற்றும் பணமுதலைகளையும் நேரடியாக சாடுகின்றன . பெரிய மனுசன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு மிகக் கீழ்த்தரமான் செயல்களைச் செய்பவர்களையும் கேலி செய்கிறது இந்தப்பாடல் .

ஒரு அரசியல்வாதி ஒரு ஆண்டு முழுக்க கொடுத்த பேட்டிகளை ஒரு முறை தொகுத்து படித்துப்பாருங்கள் , உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு வரும் . நம்மை எவ்வளவு எளிதாக ஏமாற்றி உள்ளனர் என்பதும் புரியும் .

ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு , தனி ஈழம் சாத்தியமில்லை என்று சொல்லியவர் தற்போது தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று சொல்லும் போது சிரிப்பு வருது !

ஒரு நாளைக்கு 28 ரூபாய் மேல் சம்பாதிப்பவர்கள் ஏழை அல்ல என்று சொல்லும் மத்திய அரசை நினைத்துச்  சிரிப்பு வருது !

இடைத்தேர்தலுக்கு முன்பு வரை கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று சொல்லியவர் ,இடைத்தேர்தலுக்கு பின் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படும் ;தயாராகும் மின்சாரம் நிறைய வேண்டும் என்று சொல்லும்போது சிரிப்பு வருது !

நாட்டில் ,உலகில் ,பிரபஞ்சத்தில் எவ்வளவோ விசயங்கள் நடந்து இருக்கும் போது சம்பந்தமே இல்லாத விசயத்தை தலைப்பு செய்தியாக போடும் நாளிதழ்கள் மற்றும் வாரயிதழ்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருது !

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வருது ! புதிதாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அசத்தும் புதிய விளம்பரங்களான " சென்னைக்கு மிக அருகில் ...." என்று ஆரம்பிக்கும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. 1980 களில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்டுப்பகுதியை பார்த்து கவுண்டமணி பேசும் வசனம் " இங்க இப்படி ஒரு இடம் இருக்கா , எங்க ஆளுகளுக்குத் தெரிஞ்சா " சென்னைக்கு மிக அருகில் " னு பிளாட் போட்டு வித்துருவாய்ங்க " . 30 வருடங்களுக்குப் பிறகும் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் !

இதற்கு முன்பு வரை இந்திய ஜனாதிபதி பதவி ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தான் நினைத்தேன் . இப்போது தான் தெரிகிறது 200 கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் ஊர் சுற்றும் உரிமை உள்ள பதவி என்று . இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் " 28 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல " அதே சமயம் எந்த அதிகாரமும் இல்லாத நாட்டின் முதல் குடிமகன்/ குடிமகள் 200 கோடி வரை செலவு செய்யலாம் . சிரிப்பு வருது !

டாஸ்மாக் வருமானத்தில் இலவசங்கள் கொடுக்கும் அரசுகளை நினைக்கும்போது  சிரிப்பு வருது ! இதில் புதிய வகை மதுவுக்கு செயல் விளக்கப் பயிற்சி வேறு கொடுக்கப்படுகிறதாம் .ஒசத்தியான சரக்கு விக்க எலைட் பார் வேறு வருதாம் .அப்படியே ஒவ்வொரு டாஸ்மாக் பக்கத்திலையும் ஒவ்வொரு  காவல் நிலையம் கொண்டு வந்தா பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் . மாதக் கடைசியில் காவலர்கள் வழக்கு பதிவு செய்ய சந்து சந்தாக நிக்க வேண்டிய நிலைமையும் வராது . 

இதையெல்லாம் நினைக்கும் போது என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வருது !உலகத்த விட்டுடுவோம் . நீங்க கடைசியா எப்ப வாய் விட்டு சிரிச்சீங்க ??? ( நான் "கலகலப்பு" படம் பார்க்கும் போது வாய் விட்டு கண்ணில் நீர் வரச் சிரித்தேன் )  வாய் விட்டு  சிரிக்கும் தருணங்கள் குறைந்து வருகின்றன . வாய் விட்டு  சிரிக்கும் தருணங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்  . எளிமையான மனதைப் பெற்றால் மட்டுமே நம்மால் வாய் விட்டு சிரிக்க முடியும் .

சிரிப்பு வருது !
      
மேலும் படிக்க :


உண்மையான கொண்டாட்டம் !

Friday, May 11, 2012

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !

ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச் செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் .

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால்  அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர் புகழ் அடைந்தனர் . அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள்  பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?

இங்கு நாம் கவனிக்க வேண்டியது , ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது ஒரு உயர் அரசு அதிகாரி கடத்தப்பட்டுள்ளார் .அலெக்ஸ் பால் மேனன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் கடத்தப்பட்டு தான் இருப்பார்கள் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் அலெக்ஸ் பால் மேனன் அவர்களைக் கடத்துவது அல்ல . அவர்களின் நோக்கம் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்துவது .ஏன் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்த வேண்டும் ? தொடர்ந்து அரசு அதிகாரிகளும் , சுற்றுலாப் பயணிகளும் கடத்தப்படுவதற்கு என்ன காரணம் ? மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடாமல் ஒட்டு மொத்த ஊடகங்களும் மையம் கொண்ட ஒரு புள்ளி " அலெக்ஸ் பால் மேனன் " . அலெக்ஸ் பால் மேனன் பற்றிய தகவல்களைப் பரப்பவே நேரம் எடுத்துக்கொண்டனர் . அவரை வைத்து 12  நாட்களுக்கு தொழில் செய்தனர் அவ்வளவுதான் .

அரசியல் தொழில் செய்பவர்களின் அத்துமீறல்கள் தான் அனைத்திற்கும் காரணம் . இயற்கையைப் பற்றியோ , பல நூற்றாண்டுகளாக இயற்கையை நம்பி வாழும் மக்களைப் பற்றியோ எந்த புரிதலும் , கவலையும் இல்லாமல் நாடெங்கும் பரவியிருக்கும் கனிம வளங்களை பணம் பண்ணுபவர்களுக்கு பிடுங்கி கொடுக்கும் வேலையை மிகத் தெளிவாக செய்து வருகின்றனர் , அரசியல் தொழில் செய்பவர்கள் . அதனால் , இரு வகையான இனங்கள் பாதிக்கப்படுகின்றன . ஒன்று கேள்வி கேட்கத் தெரியாத விலங்கினம் ( வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ) , மற்றொன்று கேள்வி கேட்கத் தெரிந்த விலங்கினம் ( மனிதர்கள் ).

புலி ,சிறுத்தை , யானை ,காட்டெருமை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு காரணம் , நாம் மட்டுமே . காடுகளின் பரப்பளவு குறைவதால் தான் அவை ஊருக்குள் வருகின்றன . தமிழ்நாட்டில், வால்பாறைப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தையோ ,யானையோ வருவதற்கு காரணம் , மலையின் உச்சிப் பகுதியில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றப்படுவது தான் .நாம் சிறுத்தைகளின் இடத்தைப் பிடிக்கும் போது சிறுத்தை நம் இடத்தை நோக்கி வர உந்தப்படுகிறது .சிறுத்தைகளைக்   குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை . இந்த பூமியில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிறுத்தைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு . பூமி எல்லோருக்கும் சொந்தம் .

கேள்வி கேட்கும் விலங்குகளாக பழங்குடியின மக்கள் , மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் . அவர்களுக்கான நீதி மறுக்கப்படும் போது ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் . ஆயுதம் என்றவுடன் 5000 மையில் தூரம்  அணுகுண்டுகளைக் தூக்கி சென்று தாக்கும் அக்னி-5 என்று நினைத்துக்கொள்ளக் கூடாது . வருகிற வருவாயில் அதிக பணத்தை ராணுவத்திற்காக செலவழித்த பிறகும் ஆயுதம் போதவில்லை என்று சொல்லும் இந்திய அரசையும் நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மக்களின் உதவியுடன் மக்களுக்காகவே போராடுகின்றனர் , அவர்களின் போராடும் முறை தான் தவறு .

நாட்டில் வாழும் உரிமை உள்ளவர்கள் ( பொதுமக்கள் ) தங்கள் கோரிக்கைகள்  நிறைவேற சாலை மறியலோ ,உண்ணாவிரதமோ செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் . உரிமை மறுக்கப்பட்டவர்கள் ( மாவோயிஸ்ட்டுகள் ) அரசு அதிகாரிகளைக் கடத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இயந்திரத்தைத் தூண்டுகின்றனர் . கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசு அதிகாரிகள் நாடெங்கிலும் கடத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் , யாரும் கொல்லப்படவில்லை , கடத்தலை தடுத்தவர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் . யாரையும் கொல்வது குற்றம் தான் . ஆனால் ,மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசின் முதல் அடியே கொலை தான் .அந்த கொலைக்கு பெயர்  " என்கவுன்டர் " ," பசுமை வேட்டை " . அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் எண்ணிக்கை ஏராளம் . சொந்த மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று தான் போல . தங்களை யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று தான் உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கம் நினைக்கிறது .இதில் சீனா , இலங்கை , அமெரிக்கா ,இந்தியா என்ற பேதமெல்லாம் இல்லை . இந்த விசயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று தான் .

அரசிடம் நேர்மை என்பதே இல்லை . ஏனெனில் அதன் அங்கத்தினருக்கு நேர்மை என்பது அவசியமில்லை . வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சுகபோகமாக வாழலாம் என்பது மட்டுமே முக்கியம் . மற்றதெல்லாம் அவசியமில்லை . மாவோயிஸ்ட்டுகளிடம் நேர்மை இருக்கிறது ,வீரப்பனிடமும் நேர்மை இருந்தது . வீரப்பன் இருக்கும் வரை , அவர் இருப்பதாக சொல்லப்படும் அனைத்து வனப்பகுதிகளும் வன அதிகாரிகள் இல்லாமலேயே மிகவும் பாதுகாப்பாக இருந்தன .அவர் இறந்த பிறகு நிலைமை தலைகீழ் . அவர் இருந்த பகுதிகளில் தற்போது வனம் பாதிக்கப்பட்டுள்ளது . இதே போல் தான் உலகெங்கிலும் , எங்கெல்லாம் போராட்டக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வனம் காக்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது .

வனம் காக்கப்படுவது தான் அரசுகளுக்கு பிடிக்கவில்லை . ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு  மாநிலமாக விலை பேசி வருகிறார்கள் . அதற்குத்  தடையாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் . நியாயமான முறையில் உண்ணாவிரதம் இருந்தாலும் ( கூடங்குளம் ) கண்டுகொள்வதில்லை . ஆயுதம் எடுத்தாலும் கண்டுகொள்வதில்லை . எங்கள் உரிமைகளுக்காக வேறு எப்படித் தான் நாங்கள் போராடுவது ? 

பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே நிறைய ஊடகங்கள் இயங்குகின்றன . அவை , மக்கள் மத்தியில் ஒரு மாய உலகை காட்சிக்கு வைக்கின்றன . உண்மைகள் அனைத்தும் லாவகமாக மறைக்கப்படுகின்றன . தொடர்ந்து மக்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றுகின்றன . எந்த விசயத்திலும் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தும் ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன .

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்கள் வெளியே வர வேண்டும் . கடவுளே ( இருக்காரா? இல்லையா ?)  உண்மையான  நேர்மையான ஊடகம் எது என்று எனக்கு அடையாளம் காட்டு .... ஐயோ கரன்ட் போச்சே !!!  


மேலும் படிக்க :

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
....................................................................................................................................................................

Saturday, October 22, 2011

ஈட்டி எட்டுறமுட்டும் பாயும் , பணம் பாதாளமுட்டும் பாயும் !

" ஈட்டி எட்டுறமுட்டும் பாயும்   , பணம் பாதாளமுட்டும் பாயும்  " தேர்தல் முடிவின் போது காதில் விழுந்த பழமொழி . பதவிக்காக ஏராளாமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளது . மெம்பருக்காக நின்றாலும் , தலைவருக்காக நின்றாலும் வாக்காளருக்கு பணம் கொடுத்தே ஆக வேண்டிய  கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல . வாக்காளருக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் . 

பதவிக்காக மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை மக்கள் நேரடியாக பார்த்த தேர்தலாக , இந்தத் தேர்தல் அமைந்துவிட்டது .ஓட்டுக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தனர் . ஒரு வகையில் உள்ளூர் கறுப்புப் பணத்தை வெளிவர வைத்த தேர்தலாகவும் அமைந்து விட்டது . அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . 

இந்தத்தேர்தலில் தமிழ்நாடு முழுக்கத் தோற்றவர்கள் மக்கள் மட்டுமே . தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர் . ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சம் தான் . லஞ்சம் வாங்கிகொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை அடமானம் வைத்துவிட்டனர் . 

இந்தத் தேர்தலில் "எங்கள் ஊருக்கு இதைச் செய்ய வேண்டும் "
 என்ற சத்தம் கேட்கவில்லை " எனக்கு எவ்வளவு தருவீங்க " என்ற சத்தம் தான் கேட்டது . "யார் பதவிக்கு வந்தாலும் எதுவும் செய்யப்போவதில்லை ", அதனால் கிடைத்தவரை லாபம் என்று நினைத்துத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் , " பணம் வாங்காவிட்டால் வேட்பாளர் தப்பாக நினைப்பார் " என்பதற்க்காகத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் சொல்கிறார்கள் மக்களில் சிலர் .

காரணம் எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தப்பு  தான் . உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்காத இந்தக்காலத்தில் , ஓட்டுக்காக பெற்ற  பணம் எந்த மூலைக்கு ?  உழைக்காமல் வரும் எந்தப்பணமும் நம் பணமல்ல . நம் நாட்டில் பலர்,  வாங்கும் ஊதியத்திற்கு  ஏற்ப உழைப்பதில்லை . கடுமையாக உழைப்பவர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை .

எது எப்படியோ இந்தத் தேர்தலில் பணத்துக்காக விலை போய்விட்டது ஜனநாயகம் !

பின்குறிப்பு :

திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க . வாங்கிய ஓட்டுக்களை அ .தி.மு.க . வும் உள்ளாட்சித் தேர்தலில் அ .தி.மு.க .பெற்ற வெற்றியை மற்ற கட்சிகளும்  கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் படிக்க :


.........................................

Wednesday, August 17, 2011

காங்கிரஸை அழிப்போம் !

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நம் பொருளாதரத்தை வணிகமயமாக மாற்றியதன் விளைவு தான் இது . வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது.  வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது.  ஆனால், பருத்தி ,மக்காச்சோளம் ,சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

வனத்தை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்துகிறார்கள் . எதற்காக என்றால் அங்கு இருக்கும் கனிம வளத்தைத் தோண்டி எடுக்க . இயற்கை வளத்தையும் அழித்து , மக்களையும் அப்புறப்படுத்தி பணமுதலைகளுக்கு விற்பதை வளர்ச்சி என்று சொல்கிறார்கள் . பாஸ்கோ நிறுவனம் ஒரிசாவை அழிக்கப் பார்க்கிறது . இப்படியே போனால் ஒவ்வொரு மாநிலத்தையும்  ஒவ்வொரு நிறுவனத்திற்கு விற்றுவிடுவார்கள் . அவர்கள் இந்தியாவைச் சுரண்டி இந்தியாவை குப்பைத்தொட்டி  ஆக்கிவிட்டு பணத்தை எண்ணிக்கொண்டு போய்விடுவார்கள் . இளிச்சவாயர்கள் நாம் மட்டும் தான் . 

உண்மையில் கறை படிந்த கட்சி காங்கிரஸ் தான் . சாதாரண கறை அல்ல ரத்தக்கறை . விவசாயிகளின் ரத்தம் , மலைவாழ்மக்களின் ரத்தம் ,ஈழத் தமிழர்களின் ரத்தம் , தற்போது ஒரிசா மக்களின் ரத்தம் என்று ரத்தத்தைக்  குடித்து உயிர் வாழ்கிறது காங்கிரஸ் . இலங்கையில்  " இறுதி கட்டப்போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை தான் " என்று இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையிலும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு எதுவும் சொல்லாமல் மவுனமாக  இருக்கிறது .இந்த மவுனத்தின் மூலம் போரை நடத்தியது இலங்கை அல்ல நாங்கள் தான் என்று இன்றைய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டு விட்டது .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதமர் கொல்லப்பட்டதற்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொன்று விட்டனர் . இது போதாது என்று இன்னும் மூவரையும் தூக்கிலிட்டு கொல்ல நினைக்கிறது காங்கிரஸ் அரசு . காங்கிரசின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை .

காங்கிரஸ் ஆட்சியில் பெருமுதலாளிகள் மட்டுமே பிழைக்க முடியும் , வளர முடியும் . சாதாரண மக்கள் வளரவே முடியாது  . பெரும் முதலாளிகளை வளர வைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் . நமக்கு எதுவும் செய்யமாட்டார்கள் .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் பேட்டியைப் பார்த்தால்  நம்மைக் கேலிப்பொருளாக மட்டுமே பார்ப்பது புரியும் . பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு பொம்மை சொல்கிறது " உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது " என்று . வேறு எப்படி ஒழிப்பது .ஆயுதம் எடுத்தா ? நாங்கள் " ஓட்டு " என்னும் ஆயுதத்தை எடுத்துவிட்டோம்  உங்களை ஒழிப்பதற்கு . ஒழிக்காமல் ஓய மாட்டோம் . நமது சுதந்திரமே உண்ணாவிரதத்தால்தானே கிடைத்தது .

 இந்த நிலையில் தொடர் சில்லறை  வணிக கடைகள் தொடங்குவதற்கு 51 % அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருக்கிறது . இதன் மூலம் விலைவாசி குறையும் என்று அரசு சொல்கிறது . ஆனால் அப்படி நடக்காது . நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் ,சிறுவணிகர்களும் அழிக்கப்படுவார்கள் .நாட்டில்  சிறுமுதலாளிகள் இருக்க மாட்டார்கள் .அந்நிய நிறுவனங்களின்  தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள்  .சீனத் தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் .லாபம் அமெரிக்காவுக்குச் சென்றுவிடும் .நம் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்ததாக மாறிவிடும் .அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் நமது பொருளாதாரமும் இப்போது பாதிக்கப்படுவதை விட அதிகளவு  பாதிக்கும் .நாமெல்லாம் பிச்சைக்காரர்களாகவும் ,அடிமைகளாகவும் மாற்றப்படுவோம் .இவற்றில் எதையும் உணரும் மனநிலையில் தற்போதைய  காங்கிரஸ் அரசு இல்லை .

 சர்க்கரைநோய் , இதயநோய் , எயிட்ஸ் ,புற்றுநோய் அதிகம் உள்ள தேசமாக இந்தியா மாறிப்போய் விட்டது . இவற்றைத் தடுப்பதற்கோ ,குறைப்பதற்கோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை . போலி மருந்து , மாத்திரைகளும் , மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருத்துகளும் இந்தியாவில்  தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன . பெரிய மருத்துவமனைகள் பணத்தைக் குறி வைத்தே இயங்குகின்றன . இவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை. 

121 கோடி மக்கள் இருந்தும் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லவே போராட வேண்டியிருக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது .

நம் மக்கள்தொகையில் 30 % அதிகமானவர்கள் ஒரு வேளை உணவுக்கே போராடும் நிலை தான் இன்றும் உள்ளது .எத்தனையோ நோய்கள் உலகில் இருந்தாலும் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றும்அதிகம் . உலகில் பசியால் வாடும் மூவரில் ஒருவர் இந்தியர் (http://www.bhookh.com/) . ஆனால் உலகப் பெரும்பணக்காரர்களில்  முதல் பத்தில் மூவர் இந்தியாவில் தான் உள்ளனர் . என்ன கொடுமை இது ? எவ்வளவு பெரிய பொருளாதார வேறுபாடு . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறது . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கவில்லை . கண்டிப்பாக இந்தியாவில் நடப்பது நல்லாட்சி அல்ல கொல்லாட்சி .

தேசியக்கொடியின் நிறங்களை காங்கிரஸ் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் . தேசிய கொடியின் நிறங்களில் இரண்டை மட்டுமே மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் . 

மனசாட்சி உள்ள எந்த மனிதனும் காங்கிரஸ் கட்சியில்  இருக்கமாட்டான் . ஏனென்றால் உண்மையான காங்கிரஸ் காமராஜர் செத்த போதே செத்துவிட்டது  . உண்மையான  காங்கிரஸ்காரர் யாரும் இன்று  காங்கிரஸில் இல்லை. காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்யும் வரை நான் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் . உள்ளாட்சித்  தேர்தல் , சட்டமன்றத்  தேர்தல் , நாடாளுமன்றத்  தேர்தல் என்று எந்தத் தேர்தலாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட வேண்டாம் .வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் . தன் தலையில் தானே தீ வைத்துக்கொள்ள விரும்புவர்கள் மட்டும் மனசாட்சியே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் பொன்னான ஒட்டைப்போடுங்கள் .

 இந்தியா இன்றும் அடிமை தேசம் தான் . அன்று அந்நியர்கள் நேரடியாக ஆண்டார்கள் .இன்று ,  காங்கிரஸ் உதவியுடன் மறைமுகமாக ஆள்கிறார்கள் . என்று இந்த போலியான காங்கிரஸ் அழிகிறதோ அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் !

போலியான காங்கிரஸ் அழியட்டும் ! 

இந்தியா சுதந்திரம் பெறட்டும் !

மேலும் படிக்க :



................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms