Showing posts with label பாலியல் பேசுவோம். Show all posts
Showing posts with label பாலியல் பேசுவோம். Show all posts

Saturday, August 31, 2024

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் கதை !


" பாலியல் தொழிலை அங்கிகரியுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் "

 - நளினி ஜமீலா

சக மனிதர்களிடமிருந்து மரியாதையை மட்டுமே நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் " என்பதன்படியே இன்றும் வாழ்கிறோம். மரியாதை கொடுக்காத எந்த இடத்திற்கும் நாம் செல்வதில்லை. ஆனால் அதே சமயம் துப்புரவு பணியாளர்கள் , வீட்டு வேலை செய்பவர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , மாற்றுப்பாலினத்தவர்கள் , மூட்டை தூக்குபவர்கள் , கூலித் தொழிலாளர்கள் , சாலையோரத்தில் குடியிருப்பவர்கள் , பிச்சைக்காரர்கள் என்று நம்மிடையே வாழும் விளிம்புநிலை மனிதர்களுக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்களை மலினமான பார்வையாலும் , ஏச்சுக்களாலும் கடந்து போகிறோம். நாம் மதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தே வாழும் துயரமான வாழ்க்கை அவர்களுடையது.ஆனால் நம்மை விட சிறந்த வாழ்க்கை. 

நளினி ஜமீலா, இந்த நூலில் சொல்லப்பட்டவரை எந்த இடத்திலும் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வை அடையவேயில்லை. அவரது சூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன என்பதை மட்டுமே கூறியுள்ளார். தன்னுடைய மகளை 'இவள் நளினி மகள் ' என அழைக்கப்பட்டதையே பெருமையாக கருதுகிறார். யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 

எல்லாவிதமான மனிதர்களும் ஒரே மாதிரி தான் பிறக்கிறார்கள். அவரவர் பிறக்கின்ற இடத்தை வைத்து தான் பேதங்கள் கற்பிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளே நமது எல்லோருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.

இவர்கள் இல்லாமல் பூமியில் வாழ்வே இல்லை. ஆனால் இவர்களுக்கு உண்டான மரியாதைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களும் , விவசாயிகளும் !

மதிப்போம் மதிப்படைவோம் !


மேலும் படிக்க:

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

BEAUTY AND THE DOGS (2017)

Wednesday, December 22, 2021

Sex Education - Netflix Series !


இந்தியப் பொதுவெளியில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையுடனும், அருவருப்புடனும்தான் பார்க்கப்படுகிறது. மாறாக தனிவெளியில் கிளுகிளுப்பு நிறைந்ததாக அணுகப்படுகிறது. செக்ஸ் என்பது இயல்பான ஒன்று என்பதை இந்திய சமூகம் ஏற்பதில்லை. மதங்களின் மூலமாக மிகவும் பிற்போக்கான, இயற்கைக்கு எதிரான விசயங்கள் மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன. 

இங்கே எந்த வயதிலும் செக்ஸ் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. செக்ஸ் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. உடல் குறித்தான நிறைய சந்தேகங்களும் ,குழப்பங்களும் எழும் பருவம். இந்தியச் சூழலில் பதின்பருவத்தினரின் பாலியல் குறித்தான சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்க்கப்படுவதேயில்லை. இதனால் வளர்ந்த பிறகும் , மணமான பிறகும் கூட பாலியல் சிக்கல்கள் தொடர்கின்றன. பாலியலையும் வயதையும் சேர்த்து குழப்பிக் கொள்வது இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறனவர்கள் என்பது போல அவர்களின் பாலியல் விருப்பமும் வெவ்வேறானவை.

அனைத்து வயதினருக்குமான ஆண் மற்றும் பெண் குறித்தான பாலியல் சிக்கல்களே இன்னும் இங்கே பேசப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆண்,பெண் மட்டுமல்ல LGBTQ+ பிரிவினரையும் அவர்களின் பாலியல் சிக்கல்களையும் சேர்த்தே இந்த 'SEX EDUCATION ' தொடர் பேசுகிறது. Netflix-ல் வெளியாகி மூன்று சீசன்களைக் கடந்திருக்கிறது இந்தத் தொடர். ஓட்டிஸ் மற்றும் மேவ் ஆகியோருக்கு இடையிலான காதல் கதைதான் பிரதானமானது என்றாலும் கூட அனைத்து வயதினருக்குமான பாலியல் சிக்கல்களை உள்ளடக்கிய நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. 

வயதுவந்த அனைவரும் வாய்ப்பிருந்தால் பாருங்கள். நமது சூழலில் இவ்வாறான தொடர் எடுப்பதற்கான தேவை இருக்கிறது. பாலியல் என்பதை அறிவியல்படி அணுகும் மனநிலை என்பது இங்கே குறைவாகவே இருக்கிறது அல்லது சுத்தமாக இல்லை. பெண்ணுடலை காமத்திற்கான வடிகாலாக சித்தரிப்பதுதான் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. இந்த மாதிரியான சித்தரிப்புகளால் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பெண்களை காட்சிப்படுத்துவதில் இந்திய இயக்குநர்களுக்கு இன்னுமும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. 

எப்படி பார்த்தாலும் பாலியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் நாம் கடக்க வேண்டிய தூரம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் முதல் அடியை இப்போதாவது எடுத்து வைக்க வேண்டும்!

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம்!



Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !



இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும் அறிவியல்படி பார்க்காதது தான் இந்திய சமூகம் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் அதிகப்படியான பாலியல் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் காரணம்.

பாலியல் குற்றங்கள் என்பது எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அதிகப்படியான பாலியல் சிக்கல்கள் பெண்களை அடிமைகளாக நடத்தும் பின்தங்கிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. உதாரணமாக பெண்களின் உடை என்பது வளர்ந்த நாடுகளில் ஒரு பாலியல் சிக்கலாக இல்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் உடை தான் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என எண்ணும் மனப்போக்கு உள்ளது. இதே போல பிடித்தமான துணையை தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகப்படியான சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வளவு படித்தாலும் கூட பெரும்பாலான பெண்களின் மற்றும் ஆண்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் அவர்களிடம் இல்லை. இருவருக்கும் விருப்பமிருந்தால் அதிக வயது ஆண், குறைந்த வயது பெண்ணையோ, அதிக வயது பெண், குறைந்த வயது ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதமான மனத் தடையோ, சமூகத் தடையோ வளர்ந்த நாடுகளில் இல்லை. ஆனால் இன்றும் தமிழகத்தில் பெரியார், குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததை பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஜோடிகளை சமூகம் இயல்பாக பார்ப்பதில்லை. இதை ஒரு குறையாக பார்க்கும் மனநிலையே அதிகம் இருக்கிறது. பிடித்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரப் போகிறோமோ ? தெரியவில்லை.

' ஒடுக்கப்படுவது எந்த இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் குரலாக இருப்பதே சிறப்பு ' என்பதன் அடிப்படையில் பாலியல் சிக்கல்கள் என்று வரும் போது பெண்களின் பார்வையிலிருந்து அணுகுவது தான் சரியாக இருக்கும். ஆனால் யதார்தத்தில்
'பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஆண்களுக்கு எல்லாம் தெரியும், பெண் என்றால் முட்டாள், ஆண் புத்திசாலி ' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடில்லாமல் இந்த ஆணாதிக்க மனநிலை வேரூன்றி இருக்கிறது. இந்த மனநிலை ஆண்களிடமும், பெண்களிடமும் நிறைய மனக்குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களை சகமனிதர்களாக நினைக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை.

பெண்கள் தொடர்ந்து உடைமைகளாகவே பார்க்கப்படுவதற்கு , நடத்தப்படுவதற்கு பெரிய திரையான சினிமாவும், சின்னத்திரையான தொலைக்காட்சியும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் போகப்பொருளாக, சிறியது முதல் பெரிய அளவிலான வன்முறைகளை ஏவும் உடலாக மட்டுமே பெண்கள், பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதிலும் புதிய அறிமுகமாக 'கேம் ஷோ' என்ற பெயரில் பெண்களை உடலாகவே நிறுவும், அறுவெறுக்கத்தக்க ,கேவலமான வார்த்தைகளை பேசும் நிகழ்ச்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகின்றன. எந்தவித உறுத்தலும் இல்லாமல் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பங்குபெறும் பெண்களுக்கே தங்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது தான். அதிலும் தற்போதைய தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அனைத்தும் பிற்போக்குத்தனங்களின் கூடாரம்.ஒரு மனிதராக, ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக எதையெல்லாம் உதறிவிட்டு மேலெழுந்து வர வேண்டுமோ , அதையெல்லாம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அறியாமையில் வைத்திருக்கவே சின்னத்திரைகள் உதவுகின்றன.

சினிமாவில் பெண்கள், சித்தரிக்கப்படும் விதத்தில் இன்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. தமிழ் சினிமா, திரையில் காட்டும் எந்தப்பெண்ணும் நிஜத்தில் அப்படி இருக்கமாட்டார். நிஜத்தில் இருக்கும் பெண்ணையும் சித்தரிப்பதில்லை, பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும் சித்தரிப்பதில்லை. ஆண்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகு சேர்க்கவும், ஆண்களின் வீர தீரங்களை வெளிப்படுத்தவும், ஆண்களை சார்ந்து இருக்கும் வகையிலேயே பெண்களின் கதாப்பாத்திரங்கள் மரியாதைக் குறைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. பெண்களை சுயமரியாதையோடு சித்தரித்த திரைப்படங்கள் ( 'அவள் அப்படித்தான் ' போல ) மிகவும் குறைவு. அதிலும் சமீப காலங்களில் மனித சமத்துவத்திற்கு எதிரான மதம் சார்ந்த விசயங்கள் இரண்டு திரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகின்றன. இதே போல நிஜமான சிறுவர்களின் உலகம் திரையில் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமீப காலங்களில் இரண்டு திரைகளிலும் சிறுவர்களை, குழந்தைகளை காட்டுவதையே மிகவும் குறைத்துவிட்டார்கள். இவர்களெல்லாம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வார்கள் போல.

எல்லாவிதமான ஊடகங்களும் மக்களுக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக , மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. பாலியல் சிக்கல்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை ஊடகங்களால் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். மக்களின் நலனிற்கு எதிராக செயல்படும் அரசுகளை மட்டுமல்லாமல் ஊடகங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய தேவை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசுகள், ஊடகங்கள் இவற்றுக்கு பின் இருப்பது கார்பரேட்கள். கார்பரேட் துணையில்லாமல் அரசோ, ஊடகமோ செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான் கார்பரேட் வணிகம். இதற்கு அரசுகளும், ஊடகங்களும் துணை போகின்றன.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை, குற்றங்களை அரசாலும், ஊடகங்களாலும் தடுக்க இயலும். ஆனால் தடுப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சனைகளையே அரசும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. எந்தப் பிரச்சனையையும் அந்தப் பிரச்சனையாகவே சுருக்கி கடந்து போய்விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பிரச்சனை குறித்து தீர ஆராய்வதேயில்லை. அதே குற்றம் மீண்டும் நிகழாதவாறு தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது, ஊடகங்களுக்கும் இருக்கிறது.ஆனால் எளிதாக பொறுப்பைத் தட்டிக் கழித்து அடுத்த பிரச்சனையைத் தேடிப் போய்விடுகிறார்கள். மக்கள், தொடர்ந்து சுயசிந்தனை இல்லாதவர்களாக இருக்கவே அரசும், ஊடகங்களும் விரும்புகின்றன. அப்போது தான் கார்பரேட் அங்கே கால் பதிக்க முடியும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்பரேட்டின் பங்கு இருக்கிறது.
அதீத கார்பரேட் வணிகத்தில் அறம் என்ற வார்த்தைக்கு துளி கூட இடமில்லை. இனி வரும் காலம் என்பது கார்பரேட்களை எதிர்ப்பதில் தான் கழியப் போகிறது.

நாம் சந்திக்கும் அனைத்துவிதமான சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இயற்கையிடம் மட்டுமே உள்ளன. கார்பரேட்களையும் இயற்கையின் துணை கொண்டு தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. கார்பரேட்களுக்கு எதிரான வலிமையான ஆயுதம், இயற்கை. பாலியல் சார்ந்த சிக்கல்களுக்கும் இயற்கையே தான் தீர்வு. மற்ற விலங்கினங்களில் பாலியல் சார்ந்த சிக்கல்களும், பாலியல் சார்ந்த வன்முறைகளும் மிகவும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை என்றே கூறலாம். உலகிற்கே தான் ராஜா என நினைத்துக் கொண்டிருக்கும் மனித இனம் தான் பாலியல் சார்ந்த வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

குழந்தைகளையும், சிறுவர்களையும் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் இருந்து காப்பாற்றுவது தான் சமூகத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவும், சிறுவர்களை சிறுவர்களாகவும் பார்க்கும் மனநிலை எல்லா மட்டத்திலும் உருவாவது அவசியமாகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கும் , பாலியல் குற்றங்களுக்கும் போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதரோ/ மனிதர்களோ போதையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த குற்றம் அங்கே நிகழ்ந்திருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இந்த பார்வையும் முக்கியம்.

பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இன்றும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. புரிதல் இல்லாத உறவில் தொடர்வது கொடுமையானது. இந்த சூழலில் பிரிவதும் எளிதாக இல்லை, மறுதுணையை தேர்வு செய்வதும் எளிதாக இல்லை. அதிலும் பெண்கள் கல்யாணம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்று இந்திய நாட்டின் பிரதமரே நினைக்கும் அளவிற்கு தான் இந்திய மனநிலை இருக்கிறது. இதில் மறுதுணை என்பது பெண்களுக்கு எளிதான ஒன்றாக இல்லை. முதல் திருமணத்தில் கிடைத்த கசப்பான விசயங்களால் பெண்கள் ,மறுமணம் குறித்து சிந்திப்பதும் குறைந்து வருகிறது. குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

கள்ளக்காதல் என சமூகம் வரையறுக்கும், சமூகத்தின் வரம்பு மீறிய காதல் என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும் அந்த காதலால் நிகழும் கொலைகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வு ஆகாது. இந்த கொலைகளால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோரில் ஒருவர் கொல்லப்படுவதும், மற்றொருவர் ஜெயிலில் இருப்பதும் எந்த அளவிற்கு அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதையும் சமூகம் உணர வேண்டும்.

தமிழகம் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு கல்வியில் அடைந்த முன்னேற்றமே முக்கிய காரணம். பகுத்தறிவு மண் என்று சொல்லிக்கொள்ளும் இதே தமிழகம் பாலியல் சார்ந்த விசயங்களை பகுத்தறிவுடன் ஆராய்வதில்லை. பாலியல் கல்வி தான் இன்றைய முதன்மையான தேவையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் பாலியல் சிக்கல்கள் பற்றி எழுதுவதாலோ, பேசுவதலோ ஒன்றும் நிகழ்ந்துவிடாது. முறையான பாலியல் கல்வியின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பாலியல் சிக்கல்களை குறைப்பதற்கான முதல் ஆயுதம் பாலியல் கல்வி தான்.

சமூகத்தின் கருத்துப்படியே பார்த்தாலும் பாலியல் வறட்சியே இல்லாமல் செய்துவிட்டால் பாலியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும் தானே. இந்தியாவில் 'செக்ஸ் டாய்ஸ்' களுக்கு தடை இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தடையே நீக்கி விட்டாலே பாலியல் வறட்சி காணாமல் போய்விடும் தானே. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை . பல நாடுகள் 'செக்ஸ் டாய்ஸ்' குறித்தான விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செக்ஸ் டாய் இருக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பது ஒரு வாழ்க்கை தானே வாழுங்கள். இதிலென்ன இருக்கு பேசுங்கள் !

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :










Monday, June 24, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 9 !


"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் 
Touching a Woman without Her Consent is a Punishable Crime”

இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து இருப்பது போல் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது.

பெண்ணை அனுமதியின்றி தொடுவதும், தொட நினைப்பதும் தவறு என்றே சமூகம் இன்னமும் உணரவில்லை. அனுமதியுடன் தொடுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. காமத்திற்காக, காதல் என்ற பெயரில் கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பெண்களை பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கியெறிவது இன்றும் குறைந்தபாடில்லை. பதின்பருவத்து பெண்களே இந்த வகையில் அதிகம் ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். 16 வயதைக் கடந்தவர்கள் விருப்பத்துடன் பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சட்டம் சொல்கிறது. அந்த விருப்பம் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்ற பக்குவத்தை பதின்பருவத்தினரிடம் நாம் உருவாக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொள்வது சட்டப்படி குற்றம்.கல்யாணம் பற்றிய சிந்தனையில்லாமல் விருப்பத்துடன் நிகழ்ந்தாலும் கூட பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. நிகழும் பாலுறவு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல எனும் போது பாதுகாப்பு சாதனங்களை (குறிப்பாக ஆணுறை) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியமாகிறது.

நம்பி ஏமாறுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக இன்று மாறியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் பின்னணி இது தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டவர்கள் தான். இதே போன்ற குற்றங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம். ஆனால் குற்றம் ஒன்று தான். பாலுறவை வீடியோவாக படம் பிடிப்பது என்பதும் அதை வைத்து பிளாக்மெயில் செய்வது என்பதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. பெரும்பாலும் பெண்களின் விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ தான் வீடியோ எடுக்கப்படுகிறது.பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வரும் போது பெண்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.தெரிந்தே கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவால் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் இன்னமும் அதிகம். ஒரு சில பெண்கள் தெரிந்தே விருப்பப்பட்டே வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள். எந்த உள்நோக்கமும் இல்லாத யாரும் பாலுறவை வீடியோ எடுக்க மாட்டார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும். காமிரா லென்ஸ் குறித்த கவனம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.

பாலியல் வீடியோ குறித்த புரிதல் பதின்பருவத்தினருக்கும் இல்லை, சமூகத்திற்கும் இல்லை. நாட்டில் இவ்வளவு அத்துமீறல்கள் நடந்த பிறகும் கூட பள்ளி, கல்லூரிகளில் 'பாலியல் கல்வி' கொண்டு வர யாரும் தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை. எது சரி , எது தவறு என்று எதையுமே வேறுபடுத்திக் காட்டாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆண்களுக்கு பாலியல் விசயங்களில் தவறானதைப் போதிக்க சினிமாவும், சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. வீடியோ தெரிந்து எடுத்ததோ, தெரியாமல் எடுக்கப்பட்டதோ அதை வைத்து பிளாக்மெயில் செய்யும் போது மீண்டும் பலியாகாமல் அதை எதிர் கொள்ளும் பக்குவத்தை பெண்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் பெண்ணுடல் குறித்த புனிதத்தன்மை ஒழிய வேண்டும். பெண்ணுடலில் மட்டுமல்ல இந்த பூமியிலேயே புனிதம் என்று எதுவும் இல்லை, அதே போல தீட்டு என்றும் எதுவுமில்லை. இந்த இரண்டுமே பார்ப்பனியத்தின் கூறுகள்.

வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண் இன்னொரு ஆணை சந்திப்பதற்கு யார் காரணம் ? மீண்டும் நாம் குடும்ப அமைப்பையே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காதலை மட்டுமல்ல நட்பைக்கூட பல குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.குடும்பங்களில் காதல் மீதான வெறுப்புணர்வு குறையாதவரை பெண்களின் மீதான அத்துமீறல்கள் தொடரவே செய்யும். யாருடன் பழகுகிறோம், பழகுபவர்களில் யாரைச் சந்திக்க எங்கு போகிறோம் என்பதை வீட்டிற்கு தெரிவித்துவிட்டு போகும் சூழல் உருவாவது தான் இம்மாதிரியான சிக்கல்களைக் குறைக்க உதவும். ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் கூட ஆண்களின் எந்தவிதமான நடவடிக்கையையும் பெரும்பாலான குடும்பங்கள் கண்டுகொள்வதில்லை. ஆண்கள் குறித்தும் குடும்பங்களில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் உருவாக வேண்டும்.

பிழைத்திருப்பதற்கு இந்த வேலையே இவ்வளவு நேரம் செய்து தான் ஆக வேண்டும் என்றிருக்கும் உழைப்புச் சுரண்டலைப் போலவே பாலியல் சுரண்டலும் பெண்கள் மீது சில இடங்களில் திணிக்கப்படுகிறது. ஆண்களும் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் பெண்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அதிகளவு பாலியல் சுரண்டல் குடும்பங்களிலும், பணியிடங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பங்களில் சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அந்த காலத்தில் 'கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்' என்றிருந்த பழக்கத்திற்கு பெண்கள் உடன்பட்டதற்கு குடும்பங்களில் நிகழ்ந்த பாலியல் சுரண்டலும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பணியிடங்களிலும் ( வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, பதவி உயர்வு பெற) பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அரசின் அதிகார அமைப்புகளாலும் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். எல்லாப் பெண்களும் இதற்கு பலியாவதில்லை என்றாலும் பாலியல் சுரண்டல் என்பது இருக்கவே செய்கிறது.

பாலியல் வன்கொடுமை என்பது பெண் மீது நிகழ்த்தப்படும் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. கூட்டுப்பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மனிதத்தன்மையற்றவர்களிடமிருந்து குழந்தைகளைக் கூட காக்க முடியவில்லை என்பது தான் பெரும் துயரம். பெரும்பாலும் மதுபோதையில் இருப்பவர்கள் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.இந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு மதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. மது குடிப்பது என்பது தனிமனித சுதந்திரம் என்றாலும் கூட அந்தக் குடியால் மற்ற மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ எந்தப் பாதிப்பும் உருவாகாமல் இருப்பது முக்கியம். ஆனால் தமிழகத்தில் நிலைமை அப்படி இல்லை. தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் மதுவிற்கு அடிமையான குடி நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியான குடி நோயாளிகளால் அவர்களது குடும்பமும் ,சமூகமும் பெரிய அளவில் கொடுமைகளை அனுபவிக்கிறது. குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவது மிகவும் ஆபத்தானது.

பள்ளி மாணவர்கள் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு நவீன தொழிற்நுட்பங்களான தொடுதிரை தொலைபேசியும், இணைய வசதியும் காரணமாக இருக்கின்றன. இதை அவர்களே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான பாலுறவு வீடியோக்களை இணைய வசதி இருந்தால் பார்க்க முடியும். பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கு பாலுறவு வீடியோக்களும் ஒரு முக்கிய காரணமென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் திருமணம் ஒன்று தான் பாலுறவிற்கு ஒரே வழி என்ற சூழலில் சமூக, பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் போது பாலுறவு வீடியோக்களும், சுய இன்பமும் தான் வடிகால்களாக இருக்கின்றன. இன்னொரு மனிதரைப் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை என்பது பாலுறவு வீடியோக்களுக்கும் பொருந்தும்.

விதவிதமான பிளாக்மெயில்கள் மூலம் நிகழும் பாலியல் வன்கொடுமைகள், சுரண்டல்கள், குடும்பங்களில், பணியிடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள், குழந்தைகள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர பாலியல் வன்கொடுமைகள், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் என சமூகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். இவ்வளவு வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக பெண்களே இருக்கிறார்கள். ஆனால் பொதுசமூகம் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறது. இது தான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

பாலுணர்வு என்பது பொதுவானது என்றாலும் கூட பெரும்பாலும் இது ஆணின் உடைமையாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களைப் போல தங்களின் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் பெண்களுக்கில்லை. பெண்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்துவதும் தரக்குறைவான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அனைத்துவிதமான தப்புகளையும் மூடி மறைக்கும் வேலையை குடும்பம் என்ற அமைப்பு தொடர்ந்து கச்சிதமாக செய்து வருகிறது. தப்பு யார் செய்தாலும், ஆண் செய்தாலும் தப்பு தான் என்ற மனநிலை குடும்பங்களில் உருவாக வேண்டும். ஆணாதிக்க சமூகம் தான். ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களிடமும் 'ஆண் எது செய்தாலும் சரி' என்ற ஆணாதிக்க மனநிலை மேலோங்கி இருக்கிறது தான். ஆனாலும் இதை அப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது. முதலில் பெண்கள், ஆணாதிக்க மனநிலைக்கு துணை போவதை கைவிட வேண்டும். இது குறித்தான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே கொஞ்சமேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஆண்களை எதிரிகளாக பார்ப்பதைத் தவிர்த்து ஆணாதிக்க மனநிலையை எதிரியாக பார்க்கும் பார்வையே முக்கியமானது. ஆண்கள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட இந்த ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க மனநிலையை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். பெண் மீதான ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், இன ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என ஆதிக்க மனநிலையே இப்பூமியில் நிகழும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆதிக்கமும், ஆணாதிக்கமும் ஒழியுமானால் இந்தப் பூமியே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். 
பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Saturday, March 16, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் -8 !

பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு மண பந்தத்தை உருவாக்கி வாழும் உரிமை பெண்ணுக்கு அப்போது கிடைக்கவில்லை. இன்றும் கூட அது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆணுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. 

கடந்த தலைமுறையிலிருந்து இருதார அல்லது பலதார மணம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் படிப்பறிவு பெற்றது தான் முதல் காரணம். இன்றைய சூழலில் ஆணால் அவ்வளவு எளிதாக முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்வதும் மரியாதைக் குறைவான விசயமாக பாரக்கப்படுகிறது. இன்று இருதார மணம் என்பது இயல்பான ஒன்றாக பாரக்கப்படுவதில்லை. ஆனால் முன்பு அது இயல்பாக பார்க்கப்பட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான முதல் தேவையாக பாலியல் விருப்பம் அல்லது காமமே இருந்திருக்கிறது. பெரும்பாலும் மனிதர்களால் ஒரே ஆணுடன் அல்லது ஒரே பெண்ணுடன் திருப்தி அடையவே முடியாது. நிர்பந்தங்களால் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எப்படியான மனிதராக இருந்தாலும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பு நிச்சயம் உருவாகவே செய்யும். பெரும்பாலும் அந்த ஈர்ப்பை நிராகரிப்பது அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பது தான் தற்போதைய வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் என்பதால் கடந்து போய்விடுகிறார்கள். அந்த ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

திருமணம் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானது என்றாலும் காலம் காலமாக பெண் மீது நிகழ்த்தபடும் ஒரு ஒடுக்குமுறையாகவே இருந்து வருகிறது. இன்றும் கூட பெரிய அளவில் மாற்றம் உருவாகிவிடவில்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த போது நிலையற்ற அரசியல் தன்மை நிலவியதால் அடிக்கடி நிகழ்ந்த போர்களால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 'பெண் கொள்ளை' என்ற ஒன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த கொள்ளையிலிருந்து பெண்களைக் காப்பாற்றவே பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க பழக்கப்படுத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனாலேயே அதிகளவில் குழந்தைத் திருமணங்களும் நிகழ ஆரம்பித்தன என்கிறார்கள். தமிழக சூழலில் வரதட்சணை தான் பெண் குழந்தை, சுமையாக கருதப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்திருக்கிறது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பரிமாணமடைந்து வரதட்சணை இன்றும் அப்படியே தான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது மாறி வரதட்சணை கொடுப்பது கௌரவம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இப்போதும் நேரடியாக வரதட்சணை கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வட இந்தியாவின் சில மாநிலங்களில் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது. அப்படி மணமுடிக்கப்படும் பெண்கள் அதீத கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.ஒரு சில இடங்களில் மணமுடிக்கப்படும் பெண் அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் உடைமையாக்கப்படுவது இன்றும் நின்ற பாடில்லை. இன்னும் பல மோசமான பழக்கவழக்கங்களால் வட இந்திய பெண்கள் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியறிவு ஒன்று தான் அவர்களை இக்கொடுமைகளிலிருந்து வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலைமை அந்த அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது என்பது தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. வரதட்சணையால் நின்று போன திருமணங்கள் நிறைய இருக்கின்றன. வரதட்சணை கம்மியாக கேட்கிறார்கள் என்பதற்காகவும், வசதியாக இருக்கிறார்கள் என்பதற்காகவும் பெண்ணை விட வயதில் பெரிய வித்தியாசம் உள்ளவர்களுக்கு அல்லது தெரிந்தே பொருத்தமில்லாதவர்களுக்கு மணமுடிப்பது என்பது முன்பிருந்தே நடந்து வருகிறது. இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படியான திருமணங்கள் நடைபெறவே செய்கின்றன. ஏற்கனவே குடும்பம் என்ற அமைப்பு மோசமான முறையில் தான் மணப்பெண்ணையோ, மணமகனையோ தேர்ந்தெடுக்கிறது. அந்த தேர்வை மேலும் பலவீனப்படுத்துவதாக வரதட்சணை இருக்கிறது.

நினைத்து பார்க்கவே முடியாத விதத்தில் எல்லாம் திருமணங்கள் ஒரு சில சமூகங்களில் இன்றும் நடைபெறவே செய்கின்றன. மனைவி இறந்ததால் சொந்த பேத்தியையே திருமணம் செய்து கொண்டதாக ஒருவர் கூறியது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வதும் சில சமூகங்களில் வழக்கத்தில் இருக்கிறது. இதன் பின்னணியில் சொத்து மட்டுமே பிரதான காரணமாக இருக்கலாம். சம்மதமில்லாமல் நடக்கும் இப்படியான திருமணங்களால் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மிகவும் பாதிப்படைகிறது. அதிக வயது ஆண் , வயதிற்கு வந்த குறைந்த வயது பெண்ணை சம்மதத்துடன் மணமுடிக்க அனுமதிக்கும் சமூகம், அதிக வயது பெண், வயதிற்கு வந்த குறைந்த வயது ஆணை மணமுடிக்க அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அவர்களைப் பார்வையாலேயே கொல்கிறது. ஆண் - பெண் பாலியல் ஈர்ப்பு யாருக்கு , எப்படி, எங்கே தோன்றும் என்று உறுதியாக கூற முடியாது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் , யாருடனும் ஈர்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

மனித வரலாற்றின் தொடக்க காலத்தில், இன்று இன்செஸ்ட் (incest) என்று சொல்லப்படும் உறவு முறைகள் இயல்பானவையாக இருந்திருக்கின்றன. தாய் - மகன், தந்தை -மகள், சகோதரர் - சகோதரி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு இடையில் பாலுறவுடன் கூடிய உறவு உருவாவதே இன்செஸ்ட் உறவு முறை எனப்படுகிறது. நாகரிக சமூகம் உருவாகாத வரை இந்த உறவு முறை பெரிய அளவில் இருந்திருக்கிறது. இந்த உறவு முறைகளால் உருவாகும் குழந்தைகள் வீரியமில்லாததாக இருந்ததாலும் இந்த உறவு முறை கைவிடபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பொருந்தாததை நீக்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றுதான். அது தான் நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலகெங்குமே இந்த உறவு முறைகள் இன்று வரை தொடரத்தான் செய்கின்றன. இதிலுமே பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் உறவுகளால் எந்தச் சிக்கலும் இல்லை. சம்மதமில்லாமல் நடப்பவை பாலியல் துன்புறுத்தலாகவும், பாலியல் வன்கொடுமையாகவுமே பார்க்க வேண்டியிருக்கிறது . சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு முறைகளில் உருவாகும் பாலியல் சிக்கல்களே பேசப்படாத போது , ஏற்கொள்ளப்படாத இன்செஸ்ட் உறவு முறைகளில் உருவாகும் சிக்கல்கள் மட்டுமல்ல உறவு முறையே வெளியே சொல்லப்படாததாகவே இருக்கிறது.

காலங்காலமாக கற்பித்து வந்த புனித பிம்பங்களைக் கடந்தே இன்செஸ்ட் உறவு முறைகள் நிகழ்கின்றன. அதிலும் அம்மா என்ற உறவு இங்கே மிகவும் அதிகமாக புனிதப்பட்ட ஒன்று. இப்படியான நிலையிலும் அம்மா-மகன் உறவென்பது இங்கு நிகழ்ந்து தான் வருகிறது. இயற்கையின் நியதிபடி பாலுறவிற்கு வயது வந்த இருவர் தான் தேவை , அந்த இருவர் யாராகவும் இருக்கலாம் என்பது இன்செஸ்ட் உறவுகளில் நிஜமாகிறது. காமம் குறித்து நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசாத சூழல் தான் இந்திய அளவிலேயே இருக்கிறது. ஆனாலும் ஒரு சில பெற்றோர்கள் பேசத்தான் செய்கிறார்கள். இயல்பாக நிகழும் இந்த உறவை அனுமதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான சூழலில் பரஸ்பர விருப்பத்துடன் நிகழும் அம்மா - மகன் உறவென்பது அல்லது இன்செஸ்ட் உறவென்பது ஆரோக்கியமானதா ? இல்லையா ? என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இன்செஸ்ட் உறவில் இருப்பவர்கள் இந்த உறவு சரியென்றே வாதிடுகிறார்கள். " எனது பார்வையில் என்றால், போதுமான அளவு பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. செக்ஸில் நிறைய விசயங்களை பரிசோதனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது திறம்பட செயல்பட முடியும். அம்மாவின் பார்வையில் என்றால், அவருக்கும் பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. கணவனிடமிருந்து போதிய செக்ஸ் கிடைக்கப் பெறாதவர்கள் வெளியே வேறு ஆண்களை தேடிப் போய் சிக்கலில் மாட்டுவதை விட வீட்டிலேயே கிடைப்பது எவ்வளவோ பாதுகாப்பு. அதுவும் இல்லாமல் குறைந்த வயது ஆண் அந்த பெண்ணை வயதில் இன்னும் குறைந்தவராகவே நடத்துவார். இதுவும் அப்பெண்ணுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது " அம்மா - மகன் உறவில் இருக்கும் ஒரு மகனின் வாதமிது. இப்படி சகோதரன் - சகோதரி , அப்பா - மகள் உறவில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்த உறவு பிடித்திருப்பதாகவும் , இதை தொடர விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் அல்லது பெண்களுடன் ஒரே நேரத்தில் கலவி கொள்ளும் விருப்பம் நிறைய மனங்களில் இருக்கவே செய்யும். அது இயல்பானதும் கூட. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் இது சாத்தியமே இல்லை என்று தான் கூற முடியும். ஒரே ஆண் வெவ்வேறு காலகட்டங்களில் பல பெண்களுடன் கலவி கொள்வதும், ஒரே பெண் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல ஆண்களுடன் கலவி கொள்வதும் பலருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் என்பது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். காமத்தில் இது தான் சரி, இது தவறு என்று பிரிக்க முடியாத அளவிற்கு மனிதர்களை காமம் ஆட்டிவைக்கிறது. ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் கூட்டாக சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை இனி தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இந்த இடத்தில் பழைய கற்பிதங்கள் அனைத்தும் உடைபட்டுபோய்விடும். இப்படியான மனநிலையில் தான் நாம் ( LGBT ) எனப்படும் பால் சிறுபான்மையினர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவே LGBT வகையினர் இருக்கின்றனர். இந்தியாவில் இப்போது தான் சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண்ணும் பெண்ணும் (L ), ஆணும் ஆணும் (G) விருப்பம் கொள்வதும், சேர்ந்து வாழ நினைப்பதும் இயல்பான இயற்கையான ஒன்று என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு ஆணையும் பிடிக்கும் , பெண்ணையும் பிடிக்கும் (B) இருவருடனும் உறவைத் தொடர விரும்புவார்கள்.திருநங்கை , திருநம்பியை (T) விரும்புபவர்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட அங்கீகாரத்துடன், சமூக அங்கீகாரமும் கிடைத்தால் மட்டுமே பால் சிறுபான்மையினர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும். எப்போதும் போல இதற்கும் தடையாக இருப்பது குடும்பம் என்ற அமைப்பு தான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு பிடிப்பதில்லை. ஒரே மாதிரியான உணவை உண்ண எல்லோருக்கும் உடலும் இடம் தராது, ஆனாலும் ஏதேனும் ஒரு உணவை உண்டு தான் ஆக வேண்டும், அதே தான் காமத்திலும். உணவும் காமமும் ஒன்றுதான்.

பசியுணர்வும், பாலுணர்வுமே நம்மை வழிநடத்துகின்றன. வாழ்கின்ற வாழ்க்கையே இவற்றை நிறைவு செய்யவே எனவும் கூறலாம். இவை இரண்டுமே இயற்கையான உணர்வுகள். இவற்றை தவிர்க்கவே முடியாது. இந்த உணர்வுகளின் மூலம் இயற்கையாக உருவான சிக்கல்கள் முன்பு தாமாகவே சரிசெய்யப்பட்டன. குடும்பம், அரசு போன்ற அதிகார அமைப்புகள் உருவான பின்பு இந்த இரண்டு உணர்வுகளும் மேலும் சிக்கலாகிவிட்டன. அதிலும் பாலுணர்வுதான் அதிக சிக்கல்களைச் சந்திக்கிறது. இந்த அமைப்புகள் சொல்வது தான் சட்டம், நீதி என்றாகிப் போனது. குடும்பம் என்ற அமைப்பு சிறிய அமைப்பு போல தோன்றினாலும் உண்மையில் அதிக அதிகாரமுள்ள அமைப்பு அது. அதிகாரம் கால் பதித்த எந்த இடத்திலும் இயற்கைக்கும் இடமில்லை, இயற்கையான உணர்வுகளுக்கும் இடமில்லை என்ற நிலை உருவாகி பல ஆண்டுகளாகிவிட்டன. பசியைப் போலவே பாலுணர்வும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். பட்டினி போடப்படும் மனிதர்கள் எதை தின்பார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை என்று சொல்வார்கள். அதே தான் பாலியல் பட்டினிக்கும். திருமணம் தாண்டிய உறவுகள் உருவாக இந்த பட்டினியும் ஒரு காரணமாகிறது.

திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு தற்போதைய திருமண முறையும் ஒரு காரணம். " காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா எல்லாம் சரியாக போய்விடும் " என நினைக்கும் குடும்ப அமைப்பு அந்த கல்யாணத்தை சரியான புரிதலுடன் செய்து வைப்பதில்லை. இந்திய சமூகத்தில் திருமணம் தாண்டிய உறவுகள் என்பவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த உறவுகள் பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கினாலும் எல்லா இடங்களிலும் தொடரவே செய்கின்றன. திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவன், மனைவி தங்களுக்குள் மனம்விட்டு பேசாதிருப்பதும் ஒரு காரணம். மற்ற விசயங்கள் குறித்து விவாதிக்கவும், சண்டை போடவும் தயாராக இருப்பவர்கள் தங்களுக்கான பாலுணர்வுத் தேவைகள் குறித்து பேச முன்வருவதில்லை. அப்படி பேசுவதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை. அதிலும் பெண்கள் தானாக முன்வந்து பேசுவதற்கான சுதந்திரமும் இங்கில்லை.

மொத்தம் 245 பாலுறவு நிலைகள் (Sex Positions) இருப்பதாக காமசூத்ரா சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் எத்தனை நிலைகள் பின்பற்றப்படும் என்று தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் எத்தனை கணவன்- மனைவிகள் இந்த பாலுறவு நிலைகள் பற்றி பேசவும் அதில் சிலவற்றையாவது நிகழ்த்திப் பார்க்கவும் விரும்புவார்கள் என்று தெரியவில்லை. இப்படியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் மாறுபட்ட பாலுறவு ஆசைகள், விருப்பங்கள் திருமணம் தாண்டிய உறவின் மூலமே பூர்த்தியடைவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இதை போய் எப்படி கணவரிடம் அல்லது மனைவியிடம் கேட்பது என்ற தயக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதாம். ஆனால் இதையே திருமணம் தாண்டிய உறவுகளிடம் கேட்பதிலும் , நிகழ்த்துவதிலும் தயக்கம் ஏற்படுவதில்லையாம்.

ஒரு ஆண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவுத் தேவை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவு தேவை மட்டும் முக்கிய காரணமாக இருப்பதில்லை. பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் புறக்கணிப்பிற்கான வடிகாலாகவே பெண்கள் இந்த உறவைப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் இந்த உறவைத் தொடர்வதற்காகவே பாலுறவிற்கும் சம்மதிக்கிறார்கள்.ஆண்களைப் போல பாலுறவிற்காக உறவைத் தேடும் பெண்களும் இருக்கிறார்கள்தான். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள், பெண்கள் எங்கெல்லாம் சேர்ந்து வேலை செய்யும் அல்லது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் இருந்திருக்கிறதோ அங்கெல்லாம் திருமணம் தாண்டிய உறவுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பல இடங்களில் இது குற்றமாக பார்க்கப்படுவதில்லை, எதுவரை என்றால் குடும்பத்தை பாதிக்காத வரை. கணவன், மனைவிக்கு தெரிந்தே அனுமதிக்கப்படும் உறவுகளும் இருக்கின்றன.'மண்ணு திங்கற உடம்பு தான இது . யாரு தின்னா என்ன ? 'என்ற மனநிலையும் பரவலாக முன்பு இருந்தது. ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்ற "கூடை மேல கூடை வச்சு.." பாடலில் வந்த வரியைப் போல " எங்கே வேணா போயிக்க, என்னை விட்டு மட்டும் போயிடாம இருந்தாலே அது போதுமே" என்ற மனநிலை காரணமாக இருக்குமா ? தெரியவில்லை. இன்னொரு மனிதரைப் பாதிக்காத எந்த உறவும் தவறில்லை என்று தான் சொல்ல வேண்டி வருகிறது.

திருமணம் தாண்டி உறவு என்பது இருவரின் சம்மதத்துடன் தான் நிகழ்கிறது. 20 வயதுகளிலேயே திருமணம் செய்து கொள்பவர்கள், காதல் திருமணமாக இருந்தாலும் 30களில் திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வயதிற்குரிய வாழ்க்கையை அப்போது வாழ முடியாததை இப்போது சேர்த்து வாழ நினைக்கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு 30 வயதிற்கு பிறகுதான் பாலியல் உணர்வுகள் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், அப்போது தான் குழந்தைகள் ஓரளவு வளர்ந்து இருப்பார்கள், வேலைப்பளுவும் சற்று குறைந்திருக்கும். தன்னைப் பற்றி சிந்திக்கவும் சற்று இளைப்பாறவும் அப்போது தான் நேரமும் கிடைக்கிறது. அடுத்ததாக நிர்பந்தங்களால் ,குடும்ப அழுத்தத்தால் பொருத்தமில்லாதவர்களை மணமுடிக்க நேர்பவர்கள் , தங்களுக்கு பொருத்தமானவர்களைச் சந்திக்கும் போது அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள். பின்பு அதுவுவே உறவாக மாறிவிடுகிறது. தனது குடும்பம் தரும் அழுத்தங்களிலிருந்து மற்றவர்களுடன் பேச ஆரம்பிப்பவர்கள் அந்த பந்தம் தரும் இளைபாறலில் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் பிறந்த பிறகு உருவாகும் இடைவெளி, உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், குழந்தை இல்லாமை, கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாதது, பொருளாதார நெருக்கடி போன்ற பலவும் திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் விட்டு பேசிக்கொள்வதில் தான் எல்லாமும் இருக்கிறது. வெளியே புதிய உறவு உருவானாலும் கூட அதைப் பற்றியும் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் சூழல் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். பெண்களை உடைமையாகவும், புனிதப்பொருளாகவும், குடும்பத்தின் மானத்தைக் காப்பவர்களாகவும் பார்க்கும் ஆணாதிக்க பார்வை மாறாதவரை பெண் மனது புரிந்துகொள்ளவேபடாது.

திருமணம் தாண்டிய உறவைத் தொடர்வதிலும், பழைய உறவை விட்டு வெளியேறவும் தடையாக இருப்பவர்கள் குழந்தைகள் தான். அதனால் திருமணம் தாண்டிய உறவுகளால் குழந்தைகள் தான் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் இந்த உறவுகளைத் தொடர்பவர்களால் அது மேலும் பாதிப்படைகிறது. திருமணம் தாண்டிய உறவைத் தொடரும் போது குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. திருமணம் தாண்டிய உறவுகளால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 'கள்ளக்காதல் கொலைகள்' என செய்தியாக்கப்பட்டாலும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகள் நேரடியாக பாதிப்படைவதுடன் ஒரு சில இடங்களில் உறவைத் தொடர தடையாக இருப்பதால் சொந்தப் பெற்றோராலோ அல்லது புதிய துணையாலோ குழந்தைகள் கொல்லப்படுவது இன்னும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. " காதலுக்கு நான்கு கண்கள்... கள்வனுக்கு இரண்டு கண்கள்... காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை ..." என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது .கணவன் மனைவி என்றில்லை மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான வன்மங்கள், கோபங்கள், வெறுப்புகள் சரியாகியிருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் குற்றங்களாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. நடந்து முடிந்த குற்றங்களில் பலவும் சரியாக பேசப்பட்டிருந்தால் நிகழாமலே போயிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். குற்றத்தை நிகழ்த்தும் எண்ணம் வரும்போது குற்றம் புரிந்த பிறகான வாழ்க்கை எவ்வளவு கொடூரமாகவும், எவ்வளவு குற்றவுணர்ச்சியுடனும் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் யாரும் எந்தக் குற்றத்தையும் நிகழ்த்த முன்வரமாட்டார்கள்.

பாதுகாப்பான செக்ஸ் குறித்த புரிதல் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலுமே கூட நல்ல நிலையில் இல்லை. ஆனாலும் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில் போதிய தெளிவு இல்லாமையே தேவையற்ற கர்ப்பங்களுக்கு காரணமாகிவிடுகிறது. தேவையற்ற கர்ப்பங்களுக்கும், அதனால் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளுக்கும் ஆண்களின் பொறுப்பற்றதன்மை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனமாக ஆணுறையே இருக்கிறது. ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வெற்றிபெறவில்லை. இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பக்கவிளைவுகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஆராய்ச்சி அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை சந்தைக்கு வர இன்னும் காலம் தேவைப்படும். பெண்களுக்கான கருத்தடை சாதனமாக மாத்திரைகளே இருக்கின்றன. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் என்றாலும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் ஒரே வழியாக இருக்கிறது. பரவலாக இம்மாத்திரைகள் கிடைப்பதும் இல்லை. விரைவில் இம்மாத்திரைகள் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியே மாத்திரைகள் கிடைத்தாலும் சரியான நேரத்தில் உண்டால் மட்டுமே பலனளிக்கும். பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுறைகள் வெற்றிபெறவில்லை.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் எளிய , வசதியான, பக்கவிளைவு இல்லாத, எங்கும் கிடைக்கக்கூடிய சாதனமாக ஆணுறையே இருக்கிறது. பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது, ஆணுறை இல்லாமல் உறவில் ஈடுபடும்போது தான் சுகம் அதிகம் கிடைக்கும் என்பது தான் அது. இதில் மிகவும் குறைந்த அளவிலேயே உண்மை இருக்கிறது. மிகச்சிறிய அளவிலான சுக வேறுபாடு மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதற்கும், பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இடையில் உள்ளது. அந்த சின்ன சுகத்திற்காக பெண்களை கர்ப்பமாக்குவதையும், தேவையற்ற கருக்கலைப்பிற்கு கொண்டு செல்வதும் ஏற்க முடியாது ஒன்று. அப்படியே ஆணுறை பயன்படுத்த விருப்பமில்லை என்றாலும் கூட ஆண்கள் தங்களின் உச்சநிலையின் போது வெளியே எடுத்து விந்துவை வெளியேற்றுவது ஓரளவிற்கு வெற்றி தரும் என்றாலும் இதையும் ஆண்கள் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே பெண்கள் மீது ஏவப்படும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளில் ஒன்றாக இந்த தேவையற்ற கர்ப்பமும் சேர்ந்து விடுகிறது. பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை இந்த தேவையற்ற கர்ப்பம் உருவாக்கிவிடுகிறது. ஆண்களே , எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்திற்கு காரணமாகி விடாதீர்கள். ஒரு ஆணும் , பெண்ணும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். அந்த உறவு சுகத்திற்காக மட்டுமென்றால் கண்டிப்பாக கருத்தடை சாதனம் பயன்படுத்த முன்வர வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என்றால் கருத்தடை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

இன்று, குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது விருப்பம் என்பதை விட குடும்ப, சமூக அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப கௌரவமே வாரிசு உருவாவதில் தான் இருப்பதாக இன்றும் நம்பவைக்கப்படுகிறது. எல்லாதவிதமான குடும்பங்களும் இதனுள் அடங்கும். கல்யாணம் பண்ணி வைத்தே உடனேயே வாரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கெங்கோ பிறந்து வளர்ந்த கணவனும், மனைவியும் தங்களுக்குள் போதிய புரிதல் உருவாகும் முன்பே பெற்றோராகி விடுகின்றனர். குழந்தையின்மைக்கு கணவன், மனைவி இருவருமே காரணமாக இருக்க முடியும் என்றாலும் இன்றும் பெண் மீது தான் பழி விழுகிறது. ஆண் வாரிசு மீதான போதையும், கற்பிதங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆண் வாரிசுக்காக பெண்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பமடைவது இன்று வரை தொடரவே செய்கிறது. என்னென்ன குழந்தைகள் வேண்டும் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே கணவனும் மனைவியும் தீர்மானிக்கும் நிலை வர வேண்டும். பாலின சமத்துவம் என்பதை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதுவுமில்லாமல் உங்களின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தாலும் உங்களால் உங்களின் வாழ்க்கையின் 14 வருடங்களை ஒதுக்க முடியும் என்றால் மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எல்லோருக்குமான காமம் குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மணம் முடிக்காதவர்களின் காமம், மணம் முடித்தவர்களின் காமம், பல்வேறு சூழ்நிலைகளால் தனிமைக்கு தள்ளப்பட்டவர்களின் காமம், மாற்றுத் திறனாளிகளின் காமம், வயதானவர்களின் காமம் இப்படி பேசப்பட வேண்டிய காமம் நிறையவே இருக்கிறது.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Monday, December 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -7 !



காமம் என்ற வார்த்தையே இங்கு தவறாகத்தான் பார்க்கப்படுகிறது , தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒதுக்கி ஒதுக்கியே காமத்தை இயல்பில்லாத ஒன்றாக நினைக்கப் பழகி விட்டோம். மற்ற உயிரினங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் மனித இனத்தில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. காமமே நம்மை வழிநடத்துகிறது.மனித இனத்தில் பெண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை , ஆண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை.அதே போல காமம் இல்லாத மனித இனமும் சாத்தியமில்லை.

காமத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. கைரேகை போலவே ஒவ்வொருவரின் காமமும் தனித்துவமானது. அதுவே புரிந்து கொள்வதில் சிக்கலாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது பாலின பேதமில்லாமல் விளையாடுகிறோம். பாலுறுப்புகள் மூலம் ஆண் ,பெண் என்ற பேதம் தெரிய வருகிறது. பல்வேறுவிதமான விளையாட்டுகளின் ஊடே அப்பா -அம்மா விளையாட்டும் விளையாடப்படுகிறது. நான்கைந்து வயதுகளில் அந்த விளையாட்டு யாரோ ஒருவர் மூலம் எப்படியோ அறிமுகமாகிவிடுகிறது. ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிப்பது தான் நடக்கும். அதுவும் பெரியவர்கள் கவனத்திற்கு வந்த பிறகு நாலு சாத்து சாத்தி திருத்தப்படும். அப்புறம் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களை ஆண்களுடன் விளையாட விடமாட்டார்கள். பதினான்கு ,பதினைந்து வயதுகளில் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் எழும்.நண்பர்களின் மூலம் பலான புத்தகங்கள் , பலான படங்கள் அறிமுகம் ஆனாலும் ஒரு தெளிவும் இருக்காது. குழந்தை எப்படி உருவாகிறது , எதன் வழி பிறக்கிறது என்பதேயே தாமதமாகத் தான் அறிந்து கொள்ள முடிந்தது. நிறைய தமிழ்த் திரைப்படங்கள் பெண்களின் கழுத்தில் முத்தம் வைத்தால் குழந்தை பிறக்கும் என்பது போன்ற பிம்பத்தையே உருவாக்கி வைத்திருந்தன. கதாநாயகனும் , கதாநாயகியும் கட்டிப்பிடிப்பதைக் கூட பொய்யென்று நம்பினோம். ரெண்டு பேரையும் தனித்தனியாக படமெடுத்து அப்புறம் இணைச்சு விட்டு கட்டிப்பிடிப்பது போல காண்பிக்கிறாங்க என்றே நினைத்தோம். இன்றைய ஆன்ட்ராய்டு வாழக்கையில் அந்த அளவிற்கு நிலமையில்லையென்றாலும் கூட பதின்பருவத்தினர் சரியாக வழிநடத்தப்படுவதில்லை. இருபாலர் பள்ளிகளில் படித்தவர்கள் எதிர் பாலினம் மீதான ஈர்ப்பை கொஞ்சம் நெருக்கமாகவே உணர்ந்திருப்பார்கள். பல்வேறு வகுப்புகளில் உடன்படித்த நம்மை வசீகரித்த பெண்களின்/ ஆண்களின் நினைவுகளில் இன்றும் நம்முள் நிச்சயம் இருக்கும். கிரஷ் (Crush) என்று சொல்வது எல்லா காலகட்டங்களிலும் எல்லோருக்கும் இருக்கும். காதல் கூட வராமல் போகலாம் கிரஷ் வராமல் போகவே போகாது.

பள்ளிப்படிப்பு முழுமையும் அரசுப்பள்ளி . ஒன்றாவதிலிருந்து ஐந்தாவது வரை இருபாலர் பள்ளி. ஆறிலிருந்து பனிரெண்டு வரை ஆண்கள் பள்ளி என்றாலும் பதினொன்று , பனிரெண்டாவதில் மட்டும் இருபாலர் பள்ளியாக அப்போது செயல்பட்டது. பெண்கள் பள்ளியில் இடவசதி பத்தாததால் பதினொன்றாவதும் , பனிரெண்டாவதும் ஆண்கள் பள்ளியில் செயல்பட்டது . இந்த காரணத்திற்காக பெண்களை அடுத்து படிக்க வைக்காதவர்களும் இருந்தார்கள். இதே காரணத்திற்காக வேறு பள்ளிக்கு தங்களின் பெண் பிள்ளைகளை மாற்றியவர்களும் இருந்தார்கள். ஒரே அறையில் மாணவர்களும் ,மாணவிகளும் நூறு பேர் நெருக்கியடித்துக் கொண்டு படித்தாலும் பள்ளியில் இருக்கும் போது மாணவ மாணவிகள் பேசிக்கொண்டதில்லை. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் ஒரு மரத்தடியிலும் , மாணவிகள் ஒரு மரத்தடியிலும் அமர்ந்திருப்பார்கள். வேதியியல் ஆசிரியர் , யாராவது ரெண்டு பசங்களைக் கூப்பிட்டு, " போய் பொண்ணுங்கள வரச்சொல்லுங்க " என்று சொல்லுவார். நாங்க போய் அவர்களின் முகம் பார்த்து சொல்வதற்கு பதிலாக மரத்தைப் பார்த்து கெமிஸ்ட்ரி சார் வரச்சொன்னார் என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவோம். இப்படியான சூழல் தான் அப்போது நிலவியது.

இதுவரையிலான நமது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் எந்தக்காலத்திலும் மறக்க முடியாத பொன்னான நினைவுகளைக் கொடுத்திருக்கும். எனது வாழ்க்கையில் அப்படியான காலகட்டம் இளங்கலை கல்லூரிக் காலம் தான். அதனுடன் எதனையும் பதிலீடு செய்ய முடியாது. கிராமத்து மாணவர்களுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய பயத்தை , தயக்கத்தை பெருமளவு உடைத்தது அந்த கல்லூரி வாழ்க்கை தான். இப்போதும் பயமும் தயக்கமும் இருக்கிறது தான் என்றாலும் அப்போதிருந்த அளவிற்கு இல்லை. பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்ததும், ஏன் பேச ஆரம்பித்ததே அப்போது தான் என்று தான் சொல்ல வேண்டும். அது ஒரு கிறித்துவ கல்லூரி அங்கு பெண்களுடன் பேச எந்த தடையும் இல்லை. எப்போதும் எந்த இடத்திலும் பெண்களுடன் பேச முடியும்.கல்லூரி சென்ற முதல் நாளே வகுப்பறையில் பெண்கள் ஆண்கள் கலந்து தான் உட்காரவே வைக்கப்பட்டோம். பெண்களையும் ,பெண்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொண்டதும் அப்போது தான்.

வகுப்பறையில் மாணவர்கள் , பெண்கள் பெஞ்சில் பெண்களுடன் அமர்ந்திருந்தாலும் வகுப்பெடுக்க வரும் விரிவுரையாளர்கள் மாறி உட்காரச் சொல்ல மாட்டார்கள். பாலின சமத்துவம் கல்லூரி எங்கும் இருந்தது. முழு சுதந்திரமும் இருந்தது. அதே நேரத்தில் எல்லைக்கோட்டைத் தாண்டாதவாறு கண்காணிக்கப்பட்டோம். நாங்களும் அதற்கேற்றவாறு நடந்து கொண்டோம். ஜூனியர் சீனியர் என்ற பேதமெல்லாம் பெரும்பாலும் இருந்ததில்லை. நண்பர்கள் எல்லோரும் மரத்தடியில் வட்டமாக அமர்ந்து மதிய உணவை பகிர்ந்து உண்போம். கல்லூரிக்குச் செல்லும் வரை எந்த மேடையும் ஏறாமல் இருந்த எனது மேடை பயத்தை போக்கியது அந்த கல்லூரிக் காலம் தான். எழுதுவதற்கும் அப்போதே ஊக்குவிக்கப்பட்டேன். நான்கு குழுவாக பிரிந்து விளையாடும் விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் பங்கு பெற்றேன். ஒவ்வொருவருக்கும் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அவ்வப்போது கலந்தாய்வுகளும் நடக்கும். ஓசை காளிதாசன் ஒருமுறை கல்லூரிக்கு வந்திருந்த போது தான் புல்வெளிக்காடுகளின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. வருடத்திற்கு ஒரு முறை அதுவும் ஒரு நாள் என்று மூன்று முறை தான் கல்லூரி பயணம் சென்றோம். அவ்வளவு அற்புதமான நாட்கள் அவை.

எங்கள் துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் படிப்பவர்களும் பெருமளவில் நண்பர்களாக இருந்தார்கள். எல்லாத்துறை ஆசிரியர்களும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அறிமுகமாகி விடுவார்கள். கல்லூரி முழுவதும் நட்பூக்கள் தான். இப்படி அந்தக் கல்லூரிக் காலம் குறித்து பேசிக்கொண்டே போகலாம். அந்தக் காலம் ஒருபோதும் திரும்பிவிடப் போவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாது. அதன் பிறகு முதுகலை படிப்பு தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் போலவே ஆண் -பெண் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் பேசிக் கொள்வோம் என்றாலும் இயல்பாக சுதந்திரமாக பேசிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர் பாலினத்தை அதாவது ஆண்களை பெண்களும் , பெண்களை ஆண்களும் புரிந்து கொள்வதில், புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தான் எல்லாமும் இருக்கிறது.

பெண்கள் அறிமுகம் ஆகும் போது அவர்களுடன் உரையாடவே அதிகம் விரும்பியிருக்கிறேன். அவர்களை நேரில் பார்த்து தான் ஆக வேண்டும் என்றெல்லாம் யோசித்ததில்லை. நாம் சொல்வதை கேட்பதற்கு ஒரு ஆள் இருந்தால் போதும் என்று தான் தோன்றும். அதிலும் எதிர் பாலினமாக இருக்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு ஈர்ப்பு உருவாகிவிடும். இப்படியான நட்பே அவ்வப்போது வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் உரையாடல் தொடங்கும் , வளரும் அப்புறம் முடிந்துவிடும். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. பெரும்பாலும் எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணிடம் நம்பிக்கை ஏற்படாமல் எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். ஏன் பேசவே முன்வர மாட்டார்கள். கவனமாக தவிர்த்து விடுவார்கள். தங்களுக்கு பிடிக்காத எதையும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தவிர்த்து விடுவதை பெண்களின் வலிமையான ஆயுதம். இதை சரியாக பயன்படுத்தினால் யாராலும் பெண்ணை நெருங்க முடியாது. பெண்களின் இயல்புகளை ஆண்களும் ஆண்களின் இயல்புகளை பெண்களும் புரிந்து கொள்ளாமல் இங்கு எதுவும் மாறாது. எவ்வளவு படித்திருந்தாலும் , எவ்வளவு பெரிய வேலை பார்த்தாலும் ,எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பயனும் இல்லை. பெண்களின் இயல்புகளை புரிந்து கொள்ள ஆண்களால் 'முயற்சி' மட்டுமே செய்ய முடியும் என்றாலும் அதையும் பெரும்பான்மையான ஆண்கள் செய்வதில்லை என்பது தான் பிரச்சனையே. ஆனால் ஆண்களின் உளவியலை பெண்கள் எளிதாக புரிந்து கொள்கிறார்கள்.

காமத்திற்கும் எதிர் பாலினத்தை புரிந்து கொள்வதற்கும் தொடர்பிருக்கிறதா ? நிச்சயம் தொடர்பிருக்கிறது.கல்லூரிக் காலங்களில் சைட் அடிக்கும் போது கூட பத்தாவது வரை படிக்கும் மாணவிகளை சைட் அடிக்கக்கூடாது என்று தீர்மானித்து இருந்தோம். பதினொன்னாவது , பனிரெண்டாவது படிக்கும் மாணவிகளை அவர்கள் அணியும் ரிப்பனின் நிறத்தைக் கொண்டு கண்டறிந்து சைட் அடித்தவர்கள் தான் நாங்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் எங்களுடன் பேச முயற்சித்தால் அதை கவனமாக தவிர்த்தோம். அதே நேரம் கல்லூரி மாணவிகள் என்றால் பேசத் தயாராகவே இருந்தோம். பெண்களை பெண்களாகவே பார்க்க பிடிக்கும். பேதங்கள் எப்போதும் பார்த்ததில்லை. நாம் எல்லாவற்றையும் மிகைப்படுத்துவதால் தான் இயல்பாக இருக்காமல் நடிக்கப் பழகிக் கொள்கிறோம்.

சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் நிறைய அழுத்தங்கள் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. குடும்பம் என்ற அமைப்பு தான் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. பாலின சமத்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். 14 வயது வரை ஆண்பிள்ளைகளையும் , பெண்பிள்ளைகளையும் குழந்தைகளாகவே நடத்தி அவர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து அவர்களை காக்க வேண்டியது நம் கடமையாகும். மற்ற வன்முறைகளை விடவும் குழந்தைக்களுக்கு எதிரான வன்முறைகள் நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. கல்வியின் மூலமே எல்லா குழந்தைகளையும் சென்றடைய முடியும் என்றாலும் ஒரு சில கல்விக்கூடங்களில் பணிபுரியம் சில அயோக்கியர்களால் அங்கேயும் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்கிறது. 14 வயதிற்கு பிறகு உடலில் நடக்கும் மாற்றங்களை தெளிய வைப்பதன் மூலம் எதிர் பாலினம் மீதான அதீத ஈர்ப்பு கட்டுப்படுத்தப்படும். தவறான பாதையில் செல்வதும் தடுக்கப்படும். எதிர் பாலினத்திடம் ஏமாறாமலும் இருக்க முடியும். ரெண்டும்கெட்டான் பருவத்தை சிக்கலில்லாமல் தாண்டவும் முடியும். பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் , கல்லூரிகள் நடத்துவது தான் கொடுமையென்றால் இருபாலர் பள்ளிகள் ,கல்லூரிகளில் இருபாலரும் பேசிக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவது கொடுமையிலும் கொடுமை. பாலியல் கல்வி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

ஆண்களையும் , பெண்களையும் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரித்தே வளர்த்து , படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்பிவிட்டு, கல்யாணம் என்று வரும்போது மட்டும் எதிர் பாலினத்தை தேர்வு செய்து ஒரு அறைக்குள் தள்ளி 'போங்க போய் மகிழ்ச்சியாக வாழுங்க' என்று அனுப்பி வைக்கிறார்கள். நட்பு வட்டத்தைப் பொறுத்தும் ,அவர்களின் சுய தேடலை பொருத்துமே எதிர் பாலினம் மீதான புரிதல் உருவாகும். புத்தக வாசிப்பு எதிர் பாலினம் மீதான நிறைய மனமாற்றங்களை நம்முள் ஏற்படுத்துகிறது. திரைப்படம் இன்னொரு சக்தி வாய்ந்த வழிவகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் எதிர் பாலினம் மீதான தவறான புரிதலையே கட்டமைக்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் எடுக்கப்படும் நிறைய திரைப்படங்கள் நமது போலியான சமூக மதிப்பீடுகளை அடித்து நொறுக்குகின்றன. உலகத்திரைப்படங்கள் பார்க்காத வரை கற்பு , ஒருவனுக்கு ஒருத்தி,ஏதோ ஒரு காரணத்தால் பெண்களைத் தனிமைப்படுத்துவது, பெண் ,ஆண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற போலியான ஏற்பில்லாத கற்பிதங்களே நிரம்பியிருந்தன. அந்த மனநிலையிலிருந்து வெளியேறி ஒரு பொதுத்தளத்திலிருந்து ஆண்-பெண் உறவுகளை பார்க்க வைத்தது உலகத் திரைப்படங்கள் தான். கலையே மனிதர்களை மேம்படுத்தும், மனிதத்தை பரவச் செய்யும்.அதிலும் காட்சி ஊடகமே மிக வலிமையானதாகவும் அதிகம்பேரைச் சென்றடைவதாகவும் இருக்கிறது.

பெண்களை போகப் பொருளாக கட்டமைத்ததில் காட்சி ஊடகங்களின் பங்கு தான் முதன்மையானது. அதிலும் பெண்களின் மார்பகங்களை கவர்ச்சியின் உச்சமாக நிறுவியதும் அதே காட்சி ஊடகங்கள் தான். இயல்பாகவே ஒரு ஆண், பெண்ணை பார்க்கும் அவளது மாரபகத்தையும் பார்க்கவே செய்வான். மார்பகத்தை பாரக்காமல் கண்ணை மட்டும் பார்த்து பேசுபவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. அதே நேரத்தில் மார்பகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பேசுவதும் சரியான மனநிலையல்ல. மார்பகமும் ஒரு பாலியல் உறுப்புதான். ஒரு பெண் கருவுறுதலுக்கு தயாராக இருக்கிறாள் என்பதை ஆணிற்கு தெரிவிக்கும் சமிக்கையாகவே மார்பகங்கள் இருக்கின்றன. கலவியின் போது சுகத்தை அதிகப்படுத்தவும் , குழந்தை பிறந்த பிறகு பாலூட்டவும் பெண்களின் மார்பகங்கள் உதவுகின்றன. அதனால் இனவிருத்தியையே முதன்மையானதாக கருதும் இயற்கையின் விதிப்படி ஆண்கள் பெண்களின் மார்பகங்களை பார்க்கவே செய்வார்கள். பெண்களின் பின்புறத்தைப் பாரக்கவும் அதே இயற்கை தான் காரணமாக இருந்திருக்கிறது. நான்கு கால் விலங்கினமாக இருக்கும் போது பின்புறம் உப்பி சிவந்திருப்பதை பார்ப்பதன் மூலமே பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கிறது என்பதை ஆண் விலங்கு அறிந்து கொள்ளும். அதன் எச்சமே இன்றும் ஆண்கள் பெண்களின் பின்புறத்தைப் பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. மற்றபடி பெண்களின் மார்பகங்களையும் ,பின்புறத்தையும் கவர்ச்சி பொருளாக்கி காசு பார்ப்பது வணிகமாகிப் போய்விட்டது.

இயல்பாகவே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தை ரசிப்பதையும் ,எதிர்பாலினத்தால் ரசிக்கப்படுவதையும் எப்போதுமே விரும்பக்கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள் எந்த வயதிலும். விதிவிலக்குகள் (LGBT ) இருக்கின்றன. யோசித்து பாருங்கள் எதிர் பாலினம் இல்லையென்றால் உலகம் எப்படி இருக்கும் என்று. ரொம்பக் கொடூரமாக இருக்கும். ஒரு பேருந்தில் ஏறும் போது அந்தப் பேருந்தில் பெண்களே இல்லாமல் இருந்தால் ஏற்படும் மனநிலையை நினைத்துப் பாருங்கள். ஏதோ கொஞ்சம் தூரம் பயணிக்கப் போகிறோம். அங்கே பார்க்கும் பெண்களே மறுபடி சந்திப்போமா தெரியாது. ஆனால் மனம் அங்கே பெண்களின் இருப்பை விரும்புகிறது. அங்கே மட்டுமல்ல எங்கேயும் எதிர்பாலினத்தின் இருப்பு அவசியமாகிறது. முகநூலை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் ஆண்நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் ஆண்களையோ , வெறும் பெண் நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் பெண்களையோ பார்த்திருக்கிறீர்களா ? பார்த்திருக்கவே மாட்டோம். நமது இருப்பை நியாயப்படுத்துவது எதிர்பாலினத்தின் இருப்பு தான்.

பெண் பொருளாக பார்க்கப்படுவதற்கு ஆண்களின் உளவியலும் காரணமாக இருக்கிறது. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணை பார்த்தவுடனேயே அவன் மீது மோகம் வந்து விடாது. முடிந்தால் இன்னொரு முறை திரும்பிப் பார்ப்பார். அவ்வளவுதான். தொடர்ந்து பேசிப்பழகி நம்பிக்கை ஏற்பட்டவுடன் தான் மோகமும் வரும். அதையும் இந்தியச் சூழலில் வெளிப்படுத்த முடியாது. அதே நேரத்தில் ஒரு ஆணிற்கு பெண்ணை பார்த்தவுடனேயே மோகம் வந்துவிடும். பெண் என்று இல்லை பெண் போன்ற உருவமே அவனுக்கு கிளர்ச்சியை உண்டாக்கும். பெரும்பாலும் பெண்களை பார்ப்பதிலிருந்து தங்கள் கண்களை அவ்வளவு எளிதாக ஆண்களால் விலக்கிக்கொள்ள முடியாது. இது எல்லா வயது ஆண்களுக்குமே பொருந்தும். மற்ற ஆண்களை விட தான் எந்த விதத்தில் உசத்தி என்பதை வெளிப்படுத்தவே ஒவ்வொரு ஆணும் அதிகம் மெனக்கெடுகிறான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆண்களின் இந்த மனநிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி உலகமயமாக்கல் மூலம் பணம் பண்ணுவதில் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தாக செயல்படுகின்றன. ஆண்கள் பயன்படுத்தும் பொருள் கூட பெண்களின் மூலமே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பெண்களையும் பொருளாகவே இருக்கும்படி செய்து பணமீட்டுகிறார்கள்.

பெண்கள் தங்களின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தும் அழகு சாதனங்களின் எண்ணிக்கையும் அதன் வணிகமும் மிகவும் பெரியது. தற்போது ஆண்களையும் சுவீகரிக்கத் தொடங்கியிருக்கிறது இந்தத் துறை. இதுவும் ஒரு அடிமைத்தனம் தான். இந்த அடிமைத்தனத்திலிருந்தும் பெண்கள் வெளியேற வேண்டும். ஆண்களும் தான். ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் எல்லா பெருநிறுவனங்கள் கையிலும் இருக்கின்றன. அதை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, விளம்பரப்படுத்தப்படுகின்றன , விற்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் நாம் அழகு தான் என்ற மனநிலை எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். எப்போதும் எந்த வயதிலும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதையே மனித மனமும் விரும்புகிறது. அப்படி விரும்புவதில் தவறில்லை. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் கவனமும் ,நேரமும் ,பணமும் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகமும் பாதிக்கவே செய்கிறது.

இயற்கையும் பெண்ணும் ஒன்று தான். இயற்கையை ரசிப்பது போலவே பெண்களையும் ரசிக்கலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. அந்த வாசனையை ஆண் உணரும் போது பித்துபிடித்தவன் போலாகி விடுகிறான். அதிலும் அவர்கள் சூடியிருக்கும் மலரின் மணமோடு , உடலின் வாசனையும் சேரும் போது கிறக்கமே உருவாகிவிடும். இதுவரை உலகெங்கிலும் தயாரிக்கப்பட்ட அனைத்துவிதமான வாசனைத் திரவியங்களும் பெண்ணின் உடலின் வாசனையின் முன்பு தோற்றுத்தான் போகும். ஆண்களுக்கும் அப்படியான உடலின் வாசனை இருக்குமென்றே நினைக்கிறேன். அந்த வாசனையின் குணத்தைப் பற்றி பெண்கள் தான் சொல்ல வேண்டும். இயற்கையைக் கொண்டாடுவது போலவே பெண்களையும் கொண்டாடலாம். இயற்கைக்கும் பெண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. இயற்கை இல்லாமல் இந்த பூமியில்லை. பெண் இல்லாமல் மனித இனமில்லை. ஆனாலும் இயற்கைக்கு உரிய மரியாதையையும் , பெண்ணிற்கு உரிய மரியாதையையும் மனித இனம் கொடுப்பதேயில்லை. நாள்தோறும் கொடுமைகளையே கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்களைச் சந்தித்தாலும் ஒரு நாள் இயற்கை மீண்டு எழும். அதே போல பெண்ணும் மீண்டு எழுவாள். தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் சக்தி இயற்கைக்கும் இருக்கிறது , பெண்ணிற்கும் இருக்கிறது.

காதல் என்பதும் இங்கே கொஞ்சம் அதிகமாகவே புனிதப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான காதலாக இருந்தாலும் ஒருநாள் காமத்தில் கலந்தே ஆக வேண்டும். காதல் என்ற உணர்வு தரும் களிப்பை அனுபவிக்க வேண்டியது தான். அதற்காக காதலை புனிதப்படுத்த வேண்டியதில்லை. பலரும் காதலிடம் தங்களை முழுதாக ஒப்புக்கொடுப்பதில்லை. அப்படி முழுதாக ஒப்புக் கொடுத்தவர்கள் அந்தக் காதல் மீது எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருப்பார்கள். அந்தக் காதலால் சேர்ந்திருந்தாலோ பிரிந்திருந்தாலோ எந்த மாற்றமும் இருக்காது. அகமும் புறமும் சந்திக்கும் இடமாகவே காதலும் , காமமும் இருக்கிறது. ஒட்டுமொத்த பெண்களின் உருவமாகவே தன் காதலியை காதலனும் , ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாகவே காதலனை காதலியும் பார்க்கிறார்கள். "நீ எனக்கு மட்டும் தான் " என்ற மனநிலை காதலர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காதலி இன்னொரு ஆணுடனோ , காதலன் இன்னொரு பெண்ணுடனோ பேசிச் சிரிப்பது கூட பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இது கூட இல்லைனா அப்புறம் என்ன காதல் என்றாலும் கூட பிரிவு என்று வரும்போது அதிக அழுத்தத்தை ,நெருக்கடியை இம்மனநிலை கொடுக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரைத் தான் காதலிக்கணுமா ? பலரைக் காதலித்தால் என்ன தவறு என்ற மனநிலை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் காதலையும் அதன் அடிப்படைவாதத்திடமிருந்து , புனிதத்தன்மையிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையிருக்கிறது.

உலகெங்குமே பரவலாக கொண்டாப்படும் எந்த ஒரு படைப்பிலுமே காமம் தான் முதலிடம் பெறுகிறது. இது ஒரு நல்ல சிறுகதை , இது ஒரு நல்ல நாவல் ,இது ஒரு நல்ல திரைப்படம் என அறிமுகமாகும் அனைத்திலுமே காமமே ஓங்கி இருக்கிறது. இதிலிருந்து மனித மனதிற்கு எப்போதுமே காமம் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழ் திரையிசைப் பாடல்களில் கருப்பு வெள்ளை காலங்களிலிருந்தே காமம் தூக்கலான பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. 70 களுக்கு முந்தைய பாடல்களைப் புரிந்து கொள்ளும் போது எவ்வளவு அருமையாக, பூடகமாக காமச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என வியக்கத் தோன்றும்.வயது வந்தவர்களுக்கே அப்பாடல்கள் புரியும். 80களுக்கு பிறகான பாடல்களில் காதலன் காதலியை உறவிற்கு அழைப்பது போலவும் , அதற்கு காதலி திருமணத்தைக் காரணம் காட்டி மறுப்பது போலவுமே நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் ஒரு சுவை இருந்தது. 2000 க்கு பிறகான பாடல்களில் நேரடியான வரிகளில் எழுத ஆரம்பித்த பிறகு பாடல்களில் காமச்சுவை குறைந்துவிட்டது. இப்படி காமம் என்பது எப்போதும் நம்மைச் சூழ்ந்தேதான் இருந்து வருகிறது. முத்தக்காட்சி , படுக்கையறை காட்சிக்காக திரைப்படங்கள் கவனம் பெறுவதும் இதனால் தான்.

நம் வாழ்க்கையில் நாம் காமத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது. காமம் சார்ந்த நமது கற்பனைகளுக்கு எல்லையே கிடையாது. நடைமுறையில் எப்போதும் சாத்தியமில்லாததைக் கூட மனம் கற்பனையில் கண்டு களிப்புறும். காமத்தின் மீதான நம்பிக்கையில் தான் ' ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் சரியாகி விடும் ' என்ற மனநிலை. ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. காமத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களை காமம் மேலும் நெருக்கமடையவே செய்யும். பாலுறவு சரியாக நடைபெற்று வரும் தம்பதிகளிடையே சச்சரவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியமும் , சமூகத்தின் ஆரோக்கியமும் காமத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் எந்த மட்டத்தில் பாலியல் சுதந்திரம் அதிகம் இருக்கிறதோ அவர்களே இந்த வாழ்வு தரும் அனைத்துவிதமான அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவருக்கும் பிரச்சனையில்லை , கீழே இருப்பவருக்கும் பிரச்சனையில்லை நமக்குத் தான் பிரச்சனை என்றே பொது சமூகம் யோசிக்கிறது. நாம் நாகரிகம் என்று சொல்லிக்கொள்ளும் விசயங்கள் இன்னும் சென்றடையாத பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இது தான் காமம் என்பதை அறியாமலேயே காமத்தைக் கொண்டாடுகிறார்கள், கூடவே வாழ்க்கையையும். காமத்திற்கும் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. சரியாக கிடைக்காத காமமே குற்றத்தை நோக்கித் தள்ளுகிறது. ஒரு சமூகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அங்கே காமமும் சரியாக இருக்கிறது என்பதே மறைமுக அர்த்தம்.

இயற்கையின்படி , அறிவியலின்படி பாலுறவு கொள்ள விரும்பும் இருவரும் வயதிற்கு வந்திருக்க வேண்டும், இருவருக்கும் அதில் விருப்பம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். நாகரிக வாழ்வில் இது சாத்தியமில்லை. ஆனால் இன்றும் பல பழங்குடியினங்களில் இது சாத்தியம் தான். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் இப்படித்தான் இருந்திருக்கிறது. பாலியல் ஒழுக்கம் என்ற ஒன்று உருவான பிறகு தான் அதிகப்படியான சிக்கல்களும் உருவாகின. மனித இனம் குழுவாக வாழ்ந்த வரை, சொத்து பொதுவில் இருந்தவரை, குழந்தைகளை வளரப்பது குழுவின் கடமையாக இருந்தவரை பாலியல் சுதந்திரத்தில் எந்தச் சிக்கலும் உருவாகவில்லை. குடும்பமாக ,தனிச்சொத்தாக ,குழந்தை வளர்ப்பு குடும்பத்தின் கடமையாக ,குறிப்பாக தாயின் கடமையாக மாறிப்போனதால் பாலியல் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டது. இதை மீறும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.அனைத்து குழந்தைகளையும் அரசே தத்தெடுக்க முன்வந்தால் நிறைய பெண்களும் , ஆண்களும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். குழந்தைகளுக்காகத்தான் நிறைய குடும்பங்கள் தங்களைத் தாங்களே சாமாதனமும் ,சமரசமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றன.

"இந்தியர்கள் எப்படி தங்கள் ஆடையைக் கூட முழுதாகக் களையாமல் உறவு கொள்கிறார்கள் " என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த ஒரு ஆங்கிலேயர் சொன்னாராம். இன்றும் இந்த நிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்காது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆணிற்கும் பெண்ணிற்குமான தனியிடம் என்பது இந்தியச் சூழலில் மிகவும் குறைவு. குடும்பத்தில் என்றாலும் வெளிநாடுகளைப் போல குழந்தைகள் தனியறைகளில் படுக்க வைக்கப்படுவதில்லை. ஆதலால் பாலுறவு என்பதே இருவருக்கும் விருப்பம் இருந்தாலும் குழந்தைகள் அனுமதித்தால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது . அதிலும் குழந்தை பிறந்த பிறகு , குழந்தை வளர வளர குழந்தையைக் காரணம் காட்டி பாலுறவு மறுக்கப்படுவதும் நடக்கிறது. வயதிற்கும்
காமத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றாலும் உடல் காமத்தைத் தேடும் வரை காமத்தை உடலுக்கு அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. தங்களுக்கு வேண்டிய காமம் குறித்து தம்பதிகளே தங்களுக்குள் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. அன்பைப் போல , காதலைப் போல காமத்திலும் கொடுத்துப் பெறுதலே இன்பம், பேரின்பம். காதலில் கூட தனது விருப்பங்களை பேச இடம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் காமத்தில் அப்படி இடம் கொடுக்கப்படுவதில்லை. 'ஆர்கசம் ' என்ற வார்த்தையே அறியாமல் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ள நாடு தான் இந்தியா. ஆனால் இதற்கு மாறாக முந்தைய இந்தியாவில் வாழ்ந்தவர்கள் காமத்தை அவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள். எவ்வளவு விதவிதமான நிலைகளில் அமைந்த சிற்பங்களை வடித்துவிட்டு போயிருக்கிறார்கள். காமம் அசிங்கம் என நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் தங்களின் வழிபாட்டுத் தளங்களில் இப்படி வடித்திருக்க மாட்டார்களே. அதுமட்டுமில்லாமல் வெளிப்படையாக குறி வழிபாட்டை உருவாக்கி அதை எல்லோரையும் வழிபட வைத்திருப்பதன் மூலம் எந்த அளவிற்கு காமத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

காமத்திற்கு சரியான வடிகால் இல்லாமல் இருப்பது குற்றத்தில் போய் முடிகிறது. அதனால் தான் காமம் கிடைக்கச் சாத்தியமில்லா பதின்பருவத்திலேயே ஏதேனும் கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள். உரிய துணை கிடைக்கும் வரை உற்ற துணையாக கலையையே துணையாகக் கொள்வது நல்ல பலனை அளிக்கும். ஏனென்றால் காமம் தலைக்கேறிய நிலையில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சரியாக முறைப்படுத்தப்படாத காமமே இன்னொருவர் மீது நிகழ்த்தப்படும் குற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. பிரெஞ்சுத் திரைப்படங்கள் காமத்தின் ஊடாக காமத்தின் பல்வேறு சிக்கல்களை பல்வேறு கோணங்களில் பேசி வருகின்றன. பிரெஞ்சுத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ஒருவர் தானாகவே காமத்தைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார், கூடவே வாழ்க்கையையும். ஆம், காமத்தைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாடவே முடியாது!

பொறுப்பு துறப்பு :
ஒரு ஆணின் அரைகுறை மனநிலையில் எழுதப்பட்ட பதிவிது. ஏராளமான தர்க்கப்பிழைகள் இருக்கின்றன. முன்பே சொன்னது போலவே விவாதத்தை முன்னெடுப்பது தான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர யாருக்கும் எதையும் போதிப்பதல்ல. மற்றபடி கடுமையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :






   

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms