Tuesday, March 29, 2011

இந்தியாவின் இரண்டாவது இறுதிப்போட்டி !?

இந்தியா தனது இரண்டாவது இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது . முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது நினைவிருக்கலாம் . சாதாரண போட்டியாக இருந்தாலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் பரபரப்பாக இருக்கும் . அதிலும் உலககோப்பை போட்டி என்றால் பரபரப்புகுச் சொல்லவா வேண்டும் . 

இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது , உலக கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் வருகிறது . இந்த அணிகள் மோதும் போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது . நிறைய பேர் விடுப்பு எடுக்கத் தயாராகி விட்டனர் . நான், நம் நாட்டின் பிரதமரைச் சொல்லவில்லை . அவருக்கு எப்போதுமே எந்த வேலையும் இருந்ததில்லை . அவர் கிரிக்கெட் பார்ப்பதும் ஒன்றுதான் , பாராளுமன்றம் போவதும் ஒன்றுதான் . நான் குறிப்பிட்டது சாதாரண வேலை செய்பவர்களை .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே . 

இந்தியா எப்போது நன்றாக விளையாடாமல் போகும் என்றும் ,  பாகிஸ்தான் எப்போது நன்றாக விளையாடும் என்றும் எப்போதுமே கணிக்க முடியாது . புள்ளிவிவரங்களை வைத்து இந்த இரு அணிகள் விளையாடும் போட்டியின் முடிவைக் கணிக்க முடியாது . வீரர்களின் மன வலிமையைப் பொறுத்தே முடிவுகள் இருக்கும் . இதில் தோனியின் அணுகுமுறையும் , அப்ரிடியின் அணுகுமுறையும் முக்கியத்துவம் பெறும் . 

வீரர்களின் திறமையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை . இரு அணிகளுக்கும்  நெருக்கடிகள் உள்ளன . எந்த அணி நெருக்கடியை சிறப்பாகச் சமாளிக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் .


வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !

இதையும் படியுங்கள் :

...........................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms