Friday, March 18, 2011

தமிழக பத்திரிக்கை உலகம் - ஆளும் கட்சியின் அடிமையா ?




தமிழக பத்திரிக்கை உலகம் ஆளும் கட்சியின் அடிமையாக மாறிவிட்டது . மக்கள் பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . அரசியல் தலைவர் குளிக்கப்போனார்  , நேற்று அவர் தூங்கவில்லை , கடிதம் எழுதினார் , கூட்டு வைத்தார், டெல்லி பயணம் ( பதவி பிச்சை வாங்க) . ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது .

முதல்வர் மற்றும் பிரதமர் பேசும் எதற்கும் பயன்படாத வெட்டிப்பேச்சை
பக்கம் பக்கமாக போடுகின்றன .மக்களுக்கு பயன்தரும் செய்திகளை எங்கோ
ஒரு ஓரத்தில் போடுகின்றன . தினத்தந்தி படித்துதான் நான் நன்கு தமிழ் கற்றுக் கொண்டேன். இன்றும் எழுத்துப்பிழைகள் குறைவாக உள்ள நாளிதழாக தினத்தந்தி உள்ளது .ஆனால், இப்பொழுது  தினத்தந்தியில் வரும்  தலைப்பு செய்திகள் அனைத்தும் ஆளும் கட்சியின் ஜல்ராவாகவுள்ளது . எப்போதுமே தினத்தந்தி ஆளும் கட்சியின் ஜால்ரா தான் .ஆனால், அது  வெளியில் தெரியாது . இப்போது சாதாரண மனிதனுக்குக்கூட தினத்தந்தியின் 
நிலை புரியும் . அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும்  அவர்களுக்கும் ஜால்ரா போடுவார்கள் . நம் நிலைமை தான் பாவம் .


மக்கள்  பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . தினத்தந்தியின் தலையங்கம் யாருமே படிக்க முடியாத வகையில் மிகச்சிறிய எழுத்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது . தினத்தந்தியில் தலையங்கம் என்று ஒன்று வருவதே மூன்று நாட்களுக்கு முன்புதான் எனக்குத்தெரியும் . தலையங்கத்தைமுதல்பக்கத்தில் போடுங்கள் அல்லது 4 வது பக்கத்திலேயே 
பெரியதாகபோடுங்கள் . இல்லையென்றால் தலையங்கமே போடாதீர்கள் . 

இந்த நேரத்தில் சுப்பிரமணியன் சாமி அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தியாவின் துணிச்சல் மிகு மனிதர் . எத்தனையோ பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றித் தெரிந்திருந்தாலும் யாரும் வழக்கு தொடர  முயற்சி செய்யவில்லை . இவர் மட்டுமே வழக்கு தொடர்ந்தார் . வெற்றியும் பெற்றார் . பெருவாரியான மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி தெரியவந்தது சுப்பிரமணியன் சாமி அவர்கள் புண்ணியத்தில் தான் . அடுத்து தமிழக முதல்வரை குறி வைத்துள்ளார் ? ஆக மொத்தத்தில் இவர் ஒரு " ஒன் மேன் ஆர்மி " . இவர் பணி தொடரட்டும் . இவர் புண்ணியத்தில் இந்தியாவில்   ஜனநாயகம் கொஞ்சம் உயிருடன் இருக்கிறது .


மின்சார தட்டுப்பாடு மீண்டும் தலை தூக்குகிறது . இரண்டு மணி நேரமாக இருந்த மின்தடை தற்பொழுது ஐந்து மணி நேரமாக மாறிவிட்டது . இது மட்டும் இல்லாமல் எப்பொழுது மின்சாரம் போகும் , எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது . மின்சார தட்டுப்பாடு ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டாலும்  ஆளும் அரசு எதிர் கட்சியை குறை சொல்கிறது .
இதைப்பற்றி எந்தப்   பத்திரிக்கையும் பெரிதாக எழுதுவதில்லை . சின்ன பெட்டிச்  செய்தியாக மட்டுமே இடம் பெறுகிறது .


தமிழகத்தில் எல்லாப் பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியின் அடிமையாக இல்லை . ஆனால் , எந்தப் பத்திரிக்கையும் (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு ) நடுநிலையாகவும் , மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நிலையிலும் இல்லை .அவரவர் சார்ந்த அரசியல் கட்சியின் நலனுக்காகவும் , பரபரப்பாக எதையாவது எழுதி பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பத்திரிக்கை நடத்துகின்றனர் . இடையில் மாட்டிக்கொள்வது இளிச்சவாயர்களான நாம்தான் .


உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கரையிருந்தால் அடுத்து நடைபெறும் தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட உதவவேண்டும் . எப்படி ? 234 தொகுதிகளிலும் களப்பணியாற்ற வேண்டும் . ஒவ்வொரு தொகுதியிலும் 5 வருடத்திற்கு முன்பு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அந்தப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா இல்லையா ? தீர்க்கப்படவில்லை எனில் அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட   நிதி எங்கே போனது ? தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் ? என்று கண்டுபிடித்து எழுதுங்கள் . இதைச் செய்யக்கூடிய தகுதி  நிறையப்
 பத்திரிக்கைகளுக்கு உள்ளது .இவர்களின் நிருபர்கள் எல்லாத்தொகுதியிலும்
உள்ளனர்  . ஆனால் ,  செய்ய மாட்டார்கள் .  வெட்டிக் கருத்துக்கணிப்பு
 மட்டும்   எல்லாப் பத்திரிக்கைகளும் வெளிவரும் .


சட்டமன்ற உறுப்பினர் எந்தக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தி தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் . இல்லையென்றால் அவரை தூக்கி எறியுங்கள் . கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள் . உங்கள் தொகுதியில் நிற்பவரில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு நல்லது செய்பவரை தேர்ந்தெடுங்கள் .

கட்சிக்காக நடத்தப்படும் ஆட்சியை தூக்கி எறியுங்கள் !


மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை கொண்டு வாருங்கள் !

தமிழக பத்திரிக்கை உலகம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

இந்த இணைய தொடர்பில் சென்று  படித்துப்பாருங்கள் .


ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது !
..............................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms