Tuesday, March 29, 2011

தேர்தல் ஆணையமும் , நம் ஜனநாயக அரசும் !

தேர்தல் ஆணையம் , இதற்கு முன்பு இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதில்லை . இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்பொழுது தான் செயலில் இறங்கியுள்ளது . எப்போதுமே ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுக்க முடியாமல் தவிக்கும் தேர்தல் ஆணையத்தைத் தான் இதற்கு முன்பு பார்த்துள்ளோம் . ஆனால் , இந்த முறை மிகத் திறமையாக ஆளும் கட்சியைச்  சமாளித்து வருகிறது . இந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை தொடர வேண்டும் . இவ்வளவு கடுமையான சூழலிலும் ஒரு சில இடங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது .

நம் நாட்டின்  நீதிமன்றங்களால் மட்டுமே கொஞ்சம் உயிருடன் இருந்த ஜனநாயகம் , தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைந்துள்ளது . தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இவ்வளவு விசயங்களைச் செய்யும்பொழுது நம் ஜனநாயக அரசால் மட்டும் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை . ஒரு சாதாரண சட்டத்தைக்கூட முறையாக நிறைவேற்ற முடியவில்லை . தனியார் நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளையும் , பகல் கொள்ளையையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது . ஊழல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்கிறது நம் அரசு .

சாதாரண மக்களுக்காக எத்தையும் செய்ய யாரும் தயாராக இல்லை . ஊடகங்களின் கவனமும் அரசியல்வாதிகளையும் , சினிமாக்காரர்களையும் சுற்றியே இருக்கிறது . மக்களின் வரிப்பணத்தில் தான் நம் வாழ்க்கை நடக்கிறது என்ற மனநிலை எந்த ஆட்சியாளருக்கும் இல்லை . 

பேசாமல் தேர்தல் ஆணையத்தையே நம் நாட்டை ஆளச் சொல்லி விடலாம் போல ! 

மேலும் படிக்க :




....................................

1 comments:

சக்தி கல்வி மையம் said...

சாட்டையடி பதிவு...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms