Friday, March 18, 2011

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?


" உலகத்தின் தூக்கம் கலையாதோ ...!

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ...!

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ...!

ஒருநாள் பொழுதும் புலராதோ ...!  "


"தரைமேல் பிறக்க வைத்தான்

எங்களைத்  தண்ணீரில் பிழைக்க வைத்தான் !

கரைமேல் இருக்க வைத்தான்

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் !

................................................................................................

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும்  துயரம் !

ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம் ! "



இந்தப்பாடல் படகோட்டி படத்துக்காக திரு . வாலி அவர்கள் எழுதியது . திரு .TMS அவர்களால் அற்புதகமாக பாடப்பட்டது . MGR உணர்வுபூர்வமாக நடித்து இருந்தார் .மீனவர்களின் துன்பங்களையும் , துயரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்து இருக்கும் . இந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன . ஆனால் , " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்   " என்ற வரி இன்றைக்கு பொருந்துமா ? மீன் பிடிக்கச் சென்றவர் எப்படியும் மறுநாள் வருவார் என்ற நம்பிக்கை அன்று இருந்தது , இன்று இல்லை !. சாதாரண மனிதனுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை . ஆனால் , நடப்பதோ மக்கள் ஆட்சி . உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் . இல்லையென்றால், உங்களை  யார் வேண்டுமென்றாலும் , என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் . கேட்க நாதி இல்லை . 


இன்று , பாதுகாப்புக்கென்று செய்யப்படும் அனைத்தும் ( ராணுவம் ,கப்பல் படை , வான் படை , காவல் நிலையங்கள் , பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்னும் பல)    " மனிதனிடமிருந்து மனிதனைக் காப்பதற்காக ". என்ன கொடுமை பாருங்கள் . எந்த நாடக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும் இறப்பவன் மனிதன் தானே . எத்தனை எத்தனை பிரிவினைகள் . நம் மனதை நன்றாக சலவை செய்து வைத்துள்ளனர் . பிரிவினைகளை ஒழிக்க யாருமே முயலவில்லை . பிரிவினைகளை வளர்க்கத்தான் செய்கின்றனர் . சிங்கள கப்பல் படை வீரர்கள் , தமிழக மீனவர்களை கொல்லத்தூண்டுவது எது ? எப்படி ஒரு சக மனிதனை சந்தோசமாக கொல்ல முடிகிறது ? உலகம் முழுவதும்  மனிதர்களால் மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் .

உலகம் எல்லோருக்கும் பொதுவானது ! .

எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள் அனைவரும் மனிதர்களே !

மேலும் படிக்க :

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !

காங்கிரஸை அழிப்போம் !
.......................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms