Monday, March 14, 2011

பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?

இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம் . பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது . ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும் . அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம் . ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை , பதுக்கவில்லை .இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம் . இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை
 விளைவித்தாலோ , உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும் . பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும்  அதிகளவு , அதிகநாள்  சேர்த்து வைப்பது எதற்காக ?

பணம் எல்லோருக்கும்  தேவை தான் . தேவையில்லை என்று சொல்ல முடியாது . இன்று , நாம் எந்த காரணத்திற்காக  அதிகமான பணத்தைச்  செலவு செய்கிறோம் , ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு , இன்னொன்று  கல்விக்கான செலவு . சரியான உணவு பழக்கம்  மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும் . உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை .இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம் . நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன . விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ , கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம் . அடுத்தடுத்து  நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் .


நமது உண்மையான  , நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை . நம் மனதை இளகுவாக்குவதும் , வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான் . ஆனால் , நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம் ? . மிகவும் குறைந்த அளவு தான் . நம்மைப்  பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு . ஆனால் , பயணங்கள் அற்புதமானவை . பல்வேறு விதமான மனிதர்கள்  ,பழக்க வழக்கங்கள் , இயற்கையின் அற்புதங்கள் , நினைவுச் சின்னங்கள்  என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம் . ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும்  . அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும் , நிம்மதி பெருகும் .  அதே சமயம் , அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு   பார்த்துக் கொள்ள வேண்டும் . அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும் . அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச்   செலவழியுங்கள் .

ஒருவன் , எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் , எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன . அவன் , நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான் . " பணம் பந்தியிலே ....! குணம் குப்பையிலே ...!" . பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை . பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் . பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும் . வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம் .

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது .

எவ்வளவு வாழ்ந்தோம்  என்று தான் இருக்க வேண்டும் ..!

வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!

மேலும் படிக்க :




 ...............................................

1 comments:

தமிழ்ப் பையன் said...

ஒவ்வொரு நிமிடமும் நமக்காக வாழவேண்டும், பிறரைக் கெடுக்காமல் வாழ்வேண்டும்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms