Monday, March 28, 2011

கழிப்பிடங்கள் எங்கே ?

மிகச்சின்ன கிராமம் முதல் நம் தலைநகரமான சென்னை வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பது கழிப்பிடங்கள் . கிராமங்களில் மக்கள் பயன்படுத்தி வந்த வெட்டவெளிகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்பட்டு வருகின்றன . அரசு, வீடுதோறும் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கினாலும் வெட்டவெளியை பயன்படுத்தியே பழக்கப்பட்டதால் வீட்டில் கழிப்பிடம் கட்டத் தயங்குகின்றனர் .விளைவு , நீங்கள் எந்தக் கிராமத்தைக் கடந்தாலும் , எந்த வாகனத்தில் (இரு சக்கர வாகனம் ,பேருந்து , ரயில் என்று  ) சென்றாலும் உங்களை முதலில் வரவேற்ப்பது மனித கழிவுகள் தான் . கிராமத்தில் தான் இப்படி என்றால் நகரத்தில் நிலைமை இதைவிட மோசம் . மக்கள் அதிகமாக கூடும் எந்த இடத்திலும் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை . அது அரசு அலுவலகமனாலும் சரி விமான நிலையமாக இருந்தாலும் சரி . ஆண்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒரு கழிப்பறை தான் . ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட போதும் தங்கள் வேலையைக் காட்டிவிடுவர் .இதில் படித்தவர் , படிக்காதவர் , கிராமம் , நகரம் என்ற பேதமெல்லாம் இருப்பதில்லை . இந்த விசயத்தில் எல்லோரும் ஒன்று தான் . பெண்களின் நிலைமை தான் ரொம்ப கடினம் . கழிப்பறை இல்லாததால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .


இதையெல்லாம் விட என்னைத் துயரத்தில் ஆற்றுவது பள்ளி மாணவ , மாணவிகளின் நிலைமை தான் .இதிலும் , மாணவர்கள் எப்படியோ ஒரு விதத்தில் நிலைமையைச் சமாளித்து விடுகின்றனர் . மாணவிகளின் நிலைமை மிகவும் பரிதாபப்பட வைக்கிறது . மாணவிகளுக்கு படிக்கும்போது ஏற்ப்படும் பாதிப்பு அவர்கள் ஆயுள் வரை நீள்கிறது . பெரும்பான்மையான அரசுப்  பள்ளிகளில் போதுமான கழிப்பிட வசதி இல்லை . இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான , சுகாதாரமான கழிப்பிட வசதிகள் செய்யப்பட வேண்டும் .

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் , கழிப்பிடங்கள் சுத்தமானதாகவும் , பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் . சுகாதாரம் என்றால் என்ன ? என்று கேட்கும் நிலையில் தான் நம் நாட்டில் கழிப்பிடங்கள் உள்ளன . கவனிக்காமல் விட்டால் கழிப்பிடங்கள் பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்துவிடும் . வீடில்லாமல் கூட வாழ முடியும் , ஆனால் , கழிப்பிடங்கள் இல்லாமல் வாழ முடியுமா ?

India's sanitation crisis  

...................................

1 comments:

சேக்காளி said...

போதுமான அளவு கழிப்பிட வசதி செய்து தரப்படும் என்று எந்தக்கட்சியும் தேர்தல் வாக்குறுதி தரவில்லையே ஏன்?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms