Tuesday, October 19, 2010

நாமெல்லாம் யார் ?

நாமெல்லாம் யார் ? அகதிகள். ஆம் , நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வாழ வழி தேடி நாடோடிகளாக திரிந்து , கால மாற்றத்தால் பல்வேறு இன, மொழி, மத , ஜாதி பேதங்களுடன் நம் வரலாற்றை மறந்து நமக்குள்ளே பகைமையுடன் வாழ்பவர்கள் தானே நாம். இன்று நம்மால் இந்து , முஸ்லீம் , கிறித்துவன், பவுத்தன்.... என்று பிரித்து உணரப்படும் எல்லோருக்கும் ஒரே மூதாதையன் , ஆப்பிரிக்கன்.

            ஒரு வேளை நம் எல்லோருக்கும் போதுமான உணவும் , உறைவிடமும் , பாதுகாப்பும் இருந்திருந்தால் நாம் ஆப்பிரிக்காவைத் தாண்டி இருக்க மாட்டோம் . மனித இனமும் பூமியெங்கும் பரவி இருக்காது. இனப்பெருக்கத்தின் காரணமாக மனித இனம் ஒரே இடத்தில் வாழ முடியாத சூழல் உண்டானது . உணவுக்காகவும் , இடத்துக்காகவும் , பாதுகாப்புக்காகவும் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்த காரணத்தால் இன்று பல்வேறு பேதங்களுடன் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

              இன்று, நமக்குள்ளே (மனிதர்களுக்குள்ளே) எத்தனை போராட்டங்கள் ,
உரிமைக்கான போராட்டம் ,நாடுகளின்எல்லைகளுக்கான போராட்டம் , தண்ணீருக்கான போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்கள். என்று ஓயுமோ இத்தகைய போராட்டங்கள்...!?

               இன்றும், பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து நாடோடிகளாக பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் திரிந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் நாடோடிகள் தான். பேதங்களை மறப்போம் , மனிதனாக வாழ்வோம் . மத்தவர்களை வாழவிடுவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
.......................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms