Tuesday, July 22, 2014

மனிதம் எங்கே ?

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் .

உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற இடங்களில் நடத்தக்கூடாது . எண்ணை வளங்களை வசப்படுத்த , ஆயுதங்களை விற்க , அதிகாரத்தை நிலைநாட்ட , சிறுபாண்மை இனத்தை அழித்தொழிக்க உலகெங்கிலும் போர்கள் நடக்கின்றன . ஆறறிவு உள்ள ஒரே உயிரினம் என்ற பெருமையுடன் தன் இனத்தையே வெவ்வேறு காரணங்கள் சொல்லி அழித்தொழிக்கிறது .இதயமில்லா இயந்திரம் போல அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கப்படுகிறோம் . உக்ரைன் பகுதியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகவும் கொடூரமான செயல் . இந்த விசயத்திலும் கேடு கெட்ட அரசியல் தான் முன் வைக்கப்படுகிறது . உங்க சண்டையில நாங்க ஏண்டா சாகனும் .

நம்மைச் சுற்றி , நம்மை வைத்து நிறைய அரசியலும் பெரும் வணிகமும் நடக்கின்றன . அவை நம்மிடையே மிச்சமிருக்கும்  கொஞ்ச நஞ்ச மனிதத்தன்மையையும் அழித்துக்கொண்டிருக்கின்றன . இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு பொருளும் வணிகமாக்கப்படுகிறது .இன்றைய அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளின் தேவை சுயநலவாதிகள் தான் .எல்லாவற்றிலும்  கேள்வி கேட்கும் சமூகத்தை வெறுக்கிறார்கள் ; வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் . சமீபத்திய உதாரணங்கள் ஜூலியன் அஸாஞ்சே மற்றும் எட்வர்ட் ஸ்னோடோன் . எதேசதிகாரத்திற்கு எதிராக தைரியமாக கேள்வி கேட்ட இந்த இரண்டு பேரும் தூதரகங்களில் கைதிகள் போல் வாழ்கிறார்கள் .நமக்காக ( மனிதர்களுக்காக ) கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் ஆகப் பெரும் பரிசு இது தான் .

பெருமுதலாளிகளை, சட்டாம்பிள்ளைகளை எதிர்த்து இந்த இரண்டு பேரைக் கூட நம்மால் சுதந்திரமாக வாழ வைக்க முடியவில்லை . போரினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் ? நமக்கே இந்த நிலை வந்தாலும் நமக்காக யாரும் வரமாட்டார்கள் . போர் எப்படிப்பட்டது என்பதை போரால் பாதிக்கப்பட்ட நம் ஈழத்துச் சொந்தங்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் . போரை விடவும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மிகக் கொடியது . எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்க்கும் நம்மிடையே இருந்த மனிதத்தன்மை எங்கே ?

மனிதத்தின் அழிவு , மனித இனத்தின் அழிவு !
.............................................................

Saturday, July 19, 2014

தனியழகு !

மின்கம்பிகளுக்கு
தனியே
அழகென்று
ஏதுமில்லை
பறவை(கள்)
அமர்ந்த பிறகு
தனியழகு ! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms