Thursday, April 26, 2012

ஆக்காட்டி ஆக்காட்டி !

" தவமாய் தவமிருந்து " படத்திற்காக எடுக்கப்பட்டு படத்தில் இடம்பெறாத அற்புதமான பாடல் . பாடலின் நடன அமைப்பும் ,பாடல் வரிகளும் அருமை . பாடலின் தொடக்கத்தில் வரும் உறுமி இசை கலக்கலாக உள்ளது . அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர் .படத்தில்  இருக்கும் ஜெயமூர்த்தி என்பவர் தான் இந்தப்பாடலைப் பாடியவர். நல்ல குரல் , நல்ல பாடல் .


அந்த சிறப்பான பாடல் ,



நன்றி - எஸ் .ராமகிருஷ்ணன்.

மேலும் பார்க்க :

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!  

Saturday, April 21, 2012

எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

எந்த மொழியாக இருந்தாலும் பழமொழிகள் எப்போதும் மொழிக்கு ஆதாரமாக இருக்கின்றன . தங்களின் எளிய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் வகையில் நிறைய பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன .

ங்குனி பருக்கிறதுமில்லை , சித்திரை சிறுக்கிறதுமில்லை.

சும்மா கிடக்கிற கோடாலிய தூக்கி காலில் போடுவானே , கால் வலிக்குதுன்னு ஏன் கத்திக்கிட்டு கிடப்பானே.

ரிக்கு பண்ணாட்டு கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.

ரவெட்டி வீட்டுல படலைக் கட்டிச் சாத்தனானாம்.

சும்மா இருக்கிற கோழிக்கு சோத்தைப் போடுவானேன் ;அது கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன்.

ன்றிகளின் முன் முத்துக்களைப் போடாதீர்.

ருண்டோடும் கல் பாசி பாடியது.

ண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

சிலிக்கு மாவிடிச்சா குருது கம்புக்குத்தான் சேதாரம்.

டந்து போனது கரணம் போட்டாலும் வராது.

நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏற முடியுமா.

நாம நாயை ஏவினால் , நாய் வாலை ஏவுமாம்.

தெரிந்ததை விட்டவனும் கெட்டான் , தெரியாததைத் தொட்டவனும் கெட்டான்.

ழைக்கிற மாடு ஊருக்குப் போனா , அங்கேயும் உழவு ஓட்டுவார்களாம் .

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.

சொப்பனத்தில் கண்ட அரிசி ,சோற்றுக்கு உதவாது.

பூசணிக்காய் போறது தெரியாதாம் , கடுகு போறதைப் பற்றிக் கவலைப்படுவானாம்.

ழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது .

ரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு , நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத்தெருவுலதான் சோறு.

லமரத்தை பிடித்த பேய் அத்திமரத்தையும் பிடித்ததாம் .

குந்தித் தின்னா குன்றும் மாளும் .

ட்லியைத்   தட்டில் போட்டுவிட்டு இடியைத் தலையில் போடுவது போல் .

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பனா ?    

ரும்பு  அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை ?

முயலை எழுப்பி விட்டுவிட்டு நாய் படுத்துக்குமாம் .

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது .

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம் .

றக்குறது உழக்குப் பாலு ,எட்டி உதைக்கிறது பல்லுப்போக .

மேலும் படிக்க :

வாழ்க்கை 

காணொளி 
.............................................................................................. 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms