Tuesday, February 25, 2020

டெல்லி எரிகிறது !


எதற்காக அஞ்சினோமோ அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2014 பாஜக ஆட்சியில் அமித்ஷா ஆட்சிக்கு வெளியில் இருந்தார். மக்களுக்கு தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தாலும் வன்முறையோ, மனிதத்தன்மையற்ற செயல்களோ தூண்டிவிடபடவில்லை. அங்கங்கே இஸ்லாமியர்களுக்கு எதிரான சிறுசிறு வன்முறைகள் மட்டுமே நடைபெற்றன. யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு மாநில அரசே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, ஈடுபடுகிறது. ஆதித்யநாத் எனும் மதவாதி பதவியில் இருக்கும் வரை இது தொடரவே செய்யும். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் தப்பித்தன.


இந்த 2019 பாஜக ஆட்சியில் அமித்ஷா எனும் மனிதத்தன்மையற்ற உயிரினம் நேரடியாக ஆட்சிக்குள் வந்தது. உள்துறை அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. நன்றாக கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். நரேந்திர மோடியால் பொய்களை உண்மையென்று நம்பி சத்தமாக பேச மட்டுமே தெரியும். செயல்கள் அனைத்துமே அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான். மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதும் இது தான் நிலைமை. இப்போது இந்திய பிரதமராக இருக்கும் போதும் இதுதான் நிலைமை.

இந்த 2019 பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே அமித்ஷா தனது மதவாத செயல்களைத் தொடங்கிவிட்டார். அஸ்ஸாமில் NRC அமல், கஷ்மீர் மாநிலத்திற்கான 370 சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA ) இயற்றியது என்று தொடர்கிறது.டெல்லி போலிஸ் தனது கட்டுப்பாட்டில் இருப்பதால் CAAவிற்கு எதிரான போராட்டங்களை கலைக்க போலிஸ்காரர்களுடன், RSS அமைப்பைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாகவே பங்கெடுத்து வருகிறார்கள். இந்த மனிதத்தன்மையற்ற செயல்களை ஊடகங்கள் மூடி மறைக்கப் பார்க்கின்றன. இந்திய அளவில் வெகு சில ஊடகங்களே கொஞ்சமாவது பாசிச பாஜகவின் மதவாத முகங்களை படம்பிடித்து காட்டுகின்றன. மற்றவை அனைத்தும் அப்பட்டமாக ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றன.

CAAவிற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் அமைதியான முறையிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன. பாஜக ஆளும் உத்திரபிரதேசத்திலும், கர்நாடகத்திலும், போலிஸ் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் மட்டுமே வன்முறைகள் ஏவப்பட்டு உயிர்பலிகள் நடந்துள்ளன. இதை வைத்து பார்க்கும் போது கலவர பயத்தை உண்டாக்கி CAAவிற்கு எதிரான போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வரவே பாஜக விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.

இஸ்லாமிய மதவெறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கிறது, பாஜக. இந்த நேரம் சிவசேனா மட்டும் பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் மகாராஷ்டிர மாநிலமும், இன்னொரு டெல்லியாக மாறியிருக்கும். சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மகாராஷ்டிர மக்கள் தப்பித்தார்கள். பிரிவினைவாதத்தை விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்த பாஜக அரசு களிப்புடையதாக இருக்கும்.

சொல்லி வைத்தது போல அனைத்து சங்கிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். மனிதத்தன்மை சிறிதும் இல்லாமலேயே பாஜகவிற்கு முட்டுக் கொடுக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் தயவால் தமிழகத்தில் சங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்லதற்கல்ல.

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை மக்களுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் தொடரவே செய்யும். ஒட்டு மொத்த விமர்சனங்களும் அமித்ஷா மீதே வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான எதுவும், யாரும் வென்றதாக வரலாறு இல்லை. CAAவிற்கு எதிரான போராட்டத்திலும் மக்களே வெல்வார்கள். மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த அரசால் மக்களுக்கு என்று எந்தவித நன்மையும் கிடைக்காது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms