Monday, July 11, 2011

இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...!

ஜூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகியுள்ளது . 50 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . யாரும் யாரையும் அதிக காலம் அடக்கியாள முடியாது . எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராட்டம் வெடிக்கும் என்பது வரலாறு . இதற்கு தெற்கு சூடானும் விதிவிலக்கல்ல,  தமிழ் ஈழமும் விதிவிலக்கல்ல . சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தெற்கு சூடான் கொடுத்த விலை "20 இலட்சம் மனித உயிர்களும் 50 வருட நிம்மதியும் ". தங்கம் , வைரம் போன்ற கனிம வளங்களும் , விவசாயம் செய்வதற்கு மிகச்சிறந்த சூழ்நிலையும் தெற்கு சூடானுக்கு கிடைத்துள்ளது . புதிய ஆட்சியாளர்கள் கையில் உள்ளது தெற்கு சூடானின் எதிர்காலம். 

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் அனைவரும் துரோகிகள் தான் . இந்த துரோகிகள் பட்டியலில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் வரும் . இலங்கை ஒரு எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்திருந்தால் அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும் . நம் இனம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமெல்லாம் இனத்துரோகிகள் . நமக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது .

ஈழத்தின் இன்றைய நிலை மிகவும் கொடியது . போரை விட போருக்குப் பிறகான வாழ்க்கை தான் மிகக் கொடியது என்பது வரலாறு .ஈழப் போரில் இறந்த மாவீரர்களை விட அதிக துன்பங்களை இன்று எஞ்சியிருக்கும் நம் இனம் சந்திக்கிறது . மண்,உடைமை , உரிமை ,உறவுகள் , உறுப்புகள் , மானம் , சுதந்திரம்,என்று அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்க்கு எதுவுமில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது நம் இனம் . தினமும் துன்பங்களும் துயரங்களும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . சொந்த மண்ணில்  எந்தவித உரிமைகளும் இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை . இந்நிலை நிச்சயம் மாறும் .

இந்தச்சூழ்நிலையில் ஒரே ஆறுதல் தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் . ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவரவும் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சிறந்த ஒன்று . ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழ்ந்து வரும் நம் இனம் இதுவரை சிந்திய கண்ணீரும் துடைக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .தமிழகத்தில் உள்ள  ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இனி அனைத்து  உரிமைகளும் கிடைக்கும் . மேற்கத்திய நாடுகள் நம் நலனில் அக்கறை கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . அனைத்து நாடுகளின் கவனத்தையும்
நாம் பெற வேண்டும் .

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே  முடியாதா ? மனிதன் என்று அடுத்தவன் உடைமைக்காக சண்டை போட ஆரம்பித்தானோ அன்றே மனிதனால் மனிதன் இறப்பது நிகழ்ந்து இருக்க வேண்டும் . காடுகளில் வாழ்ந்த போது அடுத்த மனிதன் வேட்டையாடிய உணவைப் பறிக்கவும் , அடுத்தவனின் பெண் துணையைப் அடையவும் , பிறகு மன்னராட்சி காலங்களில் மற்ற நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் , நாட்டை விரிவு படுத்தவும் , தன் பலத்தை நிருப்பிக்கவும் என்று மனிதனால் மனிதன் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே வந்தது . இன்றைய இயந்திர வாழ்க்கையில் நம் மனமும் கல்லாகிப் போனது . சக மனிதன் கொல்லப்படுவது இன்று மிகவும் சாதாரணம் . நம்மை ஆளும் உலக அரசுகளும் , ஊடகங்களும் மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே இல்லை . மாறாக இன்றும் போர் என்ற பெயரில் நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள் . தீவிரவாதிகள் தங்களின் பலத்தைக் காட்ட பயன்படுத்துவது மனித உயிர்களைத்தான் . மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கொல்லப்படுவது நம் வாழும் பூமிக்கு நல்லதல்ல . நம் பூமி எல்லோருக்கும் சொந்தம் !

மனித இனம் என்பதிலிருந்து பிரிந்த இனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் . வாழும் சூழ்நிலை  , உணவு, கலாச்சாரம் , பண்பாடு ,மதம் , முக்கியமாக மொழி இவற்றை மையமாக வைத்து பல்வேறு மனித இனங்கள் இன்று எஞ்சியிருக்கின்றன . பல இனங்கள் அழிந்து விட்டன . நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில்  இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது . இன்று எஞ்சியிருக்கும்
இனங்களில் ஒன்று தமிழினம் ( முன்பு , திராவிட இனம் ). இந்த இனம் தமிழ் மொழி பேசும் ஆனால் தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் . அழிக்க முடியாத களங்கம்  இது . ஆனாலும்  "வலுத்தது நிலைக்கும்" என்பது போல இன்றும் நிலைத்து நிற்கிறது . இனியும் நிற்கும் . 

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்து எழுமாமே அது போல நம் தமிழ் ஈழமும் உயிர்த்து எழும் . எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் எழும் . காலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் . காரணம் ,
காலம்தான் நம் வாழ்க்கையின் ஆற்ற முடியாத அத்தனை துயரங்களையும் , ரணங்களையும் ஆற்றுகிறது .நமது துயரையும் நிச்சயம் ஆற்றும் . யாரும் யாரையும் நீண்ட காலம் அடக்கியாள முடியாது .

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் மலர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .இலங்கையில் ஈழம் அமைய  வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் . ஈழம் அமைவதில் மிகவும் கொஞ்சப் பேருக்கு விருப்பம் இல்லை . அவர்கள் பல்வேறு விதமான காரணம் சொல்கிறார்கள் . அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை . கூட்டுக்குடும்பம் நல்லது தான் அதனால் அனைவரும் நலமாக இருக்கும்வரை . நலன்கள் பாதிக்கப்படும் போது தனிக்குடும்பமே சிறந்தது . இது குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும் .

இலங்கையில் அழிக்கப்பட்டது தமிழினம் மட்டும் அல்ல , மனித இனமும் தான் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும் . இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின்
ஆதரவையும் பெற வேண்டும் . ஒட்டுமொத்த உலகமும் தமிழ் ஈழம் அமைய குரல் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் .வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . தமிழ் ஈழம் மலர வேண்டும் .

ஈழத்தில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாள் தொலைவில் இல்லை !


மேலும் படிக்க:

 முகப்பு 

 காங்கிரஸை அழிப்போம் !
...............................

1 comments:

Thenpulathaan said...

Singala athigaaram tamil inathuku senja kodumaigaluku kaalam ippothu bhathil sollugirathu.. Visit mine here

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms