Wednesday, December 31, 2014

புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரிகளா ?

மதவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாவது புத்தகங்களும் திரைப்படங்களும் தான். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையை மதவாதிகள் பிரதிபளிக்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதைப் பற்றியோ , சாதாரண மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ  துளியும் கவலைப்படாதவர்கள் தான் மதத்திற்காக கொடிபிடிக்கிறார்கள். "மக்களுக்காக மதம் " என்பது போய் "மதத்திற்காக மக்கள்" என்றாகிவிட்டது தான் இன்றைய அவலம்.

புத்தகமாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு புத்தகத்தை எரிப்பதையும் திரையரங்கங்களை தாக்குவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எரிப்பதாலும் தாக்குவதாலும் புத்தகமும் திரைப்படமும் மறைமுக விளம்பரத்தையே பெருகின்றன.

மதம் பிடித்த யானையைப் போல மதம் பிடித்த மனிதனும் ஆபத்தானவன் தான்.மதத்திடமிருந்து மனிதனையும் , மனிதனிடமிருந்து மதத்தையும் காப்பாத்துங்க !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms