Saturday, May 14, 2011

ஜனநாயகத்தின் வெற்றி !

நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றுள்ளது . இணையப்பதிவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது . ஆட்சி மாற்றம் அவசியம் தேவை . ஒட்டு மொத்தத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி . எவ்வளவு அட்டூழியங்கள் நிகழ்ந்தாலும் 5 வருடத்தில் ஆட்சியை மாற்றும் அதிகாரம் நம்மிடம் உள்ளது . இது ஊழல்வாதிகளுக்கும் , அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கும் விழுந்த சவுக்கடி .

கடந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் எதுவும் செய்யவில்லை , ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட பணம் எங்கே ? அதனால் தான் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த அமைச்சர்களும் மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளனர் . அடுத்து வரும் அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம் . அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்தால் போதாது  , தங்கள் துறை சார்ந்த பயன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் . அமைச்சராக இருந்து உங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்திருந்தால் , நீங்கள் அந்த தொகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தாலும் தோற்க்கடிக்கப்படுவீர்கள் .

அ .தி.மு.க. அதிகம் வென்றதற்கு விஜயகாந்தும் , விஜயகாந்த் அதிகம் வென்றதற்கு அ .தி.மு.க. வும் காரணம் . இனி அ .தி.மு.க. செய்யவேண்டியது . இனி எந்த தேர்தலிலும் எந்தக்காரணம் கொண்டும் பா.ம.க. வையும் ,வி .சி .யையும், காங்கிரசையும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது . சட்டம் ஒழுங்கை சீர் செய்து , மின்சார தட்டுப்பாடை கட்டுப்படுத்தி , மழைநீரைச் சேமித்து , மரங்களை  வளர்த்து , விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து , கட்சிக்காரர்களின்  ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி , சமூகத்தின் அனைத்து நிலைகளிலும்  உள்ளவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நல்ல ஆட்சியைத் தர வேண்டும் ; இல்லையேல் 2011 பாடம் தான் உங்களுக்கும் .

இந்த முடிவின் மூலம்  மக்கள் சொல்வது என்ன?

மிழக மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற மோசமான முத்திரை நம் மீது விழுந்து இருந்தது . அதை  இந்த தேர்தல் முடிவு மாற்றி விட்டது . நாங்கள் பணத்துக்காக ஓட்டுப்போட மாட்டோம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் .

குடும்ப அரசியலுக்கும் , குடும்ப சர்வாதிகாரத்திற்க்கும் , குடும்ப அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும் மக்கள் சரியான பாடம் கற்ப்பித்துள்ளனர் . அடுத்து பதவிக்கு வருபவர்களும் இது போல் நடந்து கொண்டால் அவர்களுக்கும் இதே கதி தான் .

க்கள்பணி ஆற்றாமல் அதிகமாக ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு அதிக இன்னல்கள் விளைவித்தவர்களுக்கும் , ஆட்டமும் போடாமல் , மக்கள்பணியும் செய்யாமல் படுத்து தூங்கியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது . மக்கள்பணி செய்யாமல் இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது .

லங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்து , போராட்டத்தை  திசை திருப்பியவர்களுக்கு மக்கள் வேட்டு வைத்துள்ளனர் . அடுத்து வருபவர் இலங்கைத்  தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் . கட்சத்தீவை மீட்க வேண்டும் .

ழல்வாதிகளை ஓட ஓட விரட்டி உள்ளனர் . இன்னும் எவ்வளவு ஊழல்கள் வெளிவரப்போகிறதோ தெரியவில்லை . இனி ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது .
திகமான மக்கள் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான நடவடிக்கைகளே காரணம் . மக்களின் ஓட்டுப் போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது .

க்களின் சிந்திக்கும்  ஆற்றலை என்னவென்று  சொல்வது. சீரிய முறையில் சிந்தித்து மிகக்கவனமாக ஓட்டுப் போட்டுள்ளனர் . மக்களின் மனநிலையை யாராலும் ஊகிக்க முடியவில்லை . கருத்துக்கணிப்புகளில் கட்டுப்படவில்லை . இந்தியா டுடே கருத்துக்கணிப்பு  மட்டுமே ஓரளவு பொருந்தியுள்ளது .

இணையப்பதிவர்கள் அனைவரும் சிறந்த  முறையில் செயல்பட்டுள்ளனர் . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை அக்குவேர், ஆணிவேராக அலசி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர் . இந்த பதிவுகளைப் படித்து பத்துபேர் மாறினால் கூட அது நமக்கு வெற்றி தான் . இனி தான் நமக்கு மிகப்பெரும் பணி உள்ளது . இப்போது அமையப்போகும் ஆட்சியை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் . சின்ன தப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் . சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் . விவசாயமும்  ,சுற்றுச்சூழலும் முக்கியத்துவம் பெற வேண்டும் . 

இது ஜனநாயகத்தின் வெற்றி . தப்புச்  செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .   

மாற்றம் ஒன்றே மாறாதது !

மேலும் படிக்க :



...................................................... 

2 comments:

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு... இனியாவது மக்களுக்காக அரசியல் வாதிகள் உழைக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms