Saturday, June 25, 2011

செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !

பலவிதமான கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . ஒருவேளை 2012 ல் உலகம் அழிந்து விடுமோ ?  தெரியாது . அரசியல் கொ.கா. , ஆன்மீக கொ.கா.,இயற்கை கொ.கா., உலகமயமாக்கல் கொ.கா., பதுக்கல் கொ.கா. என்று பல கொ.கா. நம்மிடையே உலவுகிறார்கள் . இதில் செல்போன் சேவை நிறுவனங்களும் அடக்கம் . இவர்களுக்காகவே  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே  இந்தப் பாடலை ( "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்திருந்த மருந்து சொல்லடா ( http://jselvaraj.blogspot.com/2011/04/blog-post_27.html) " )  எழுதியுள்ளார் .

பெட்ரோலோ , டீசலோ , பஸ் டிக்கெட்டோ ஒரு ரூபாய் ஏறினால் கூட குதி குதி என்று குதிக்கும் நாம் , செல்போன் சேவை நிறுவனங்கள் ஓசையில்லாமல் கூட்டிய 4 முதல் 5 ரூபாயை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு விட்டோம் . முன்பு 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 43 அல்லது  42 ரூபாய் ஏறும் . ஆனால் தற்போது 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 39 அல்லது  38 ரூபாய் மட்டுமே ஏறுகிறது . நம் செல்போனில் இருக்கும் 1 ரூபாயின்  மதிப்பு 1.31. ஒரு காலுக்கு 60 பைசா என்று சொல்லப்பட்டாலும் நாம் உண்மையில் செலவழிப்பது 78 பைசா . இது பகல் கொள்ளை தானே .

 மதிப்பு கூட்டு சேவை ( Value Added Services) என்ற பெயரில் இவர்கள் செய்யும் கொடுமை ஏராளம் . உங்கள் செல்போனில் 20 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஏதோ சர்வீசை  Telecommunication call மூலமாகவோ  , SMS மூலமாகவோ,Flash SMS மூலமாகவோ  உங்கள் தலையில் கட்டி மாதம் மாதம் உங்கள் பணத்தைச் சுரண்டி  விடுவர் . Telecommunication Call மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம் . மிகவும் முக்கியமான வேலையில் இருக்கும் பொது இவர்களது call வரும் , முக்கியமான call ஆக இருக்குமோ என்று நினைத்து ஆன் செய்தால் " உங்களுக்கு எந்தப்பாடல் வேண்டும் என்று இயந்திரக் குரல் ஒலிக்கும் ". இதைவிடக் கொடுமை Flash SMS தான் , போனை ஆன் செய்யும்போதே நம் கணக்கில் இருந்து பணம் திருப்பட்டுவிடும் . இதுபோல் எனக்கு இரண்டுமுறை நிகழ்ந்துள்ளது . உண்மையில் Caller tone காக ஒரு மாதத்திற்கு எடுக்கப்படும் தொகை  ரூபாய் 30 , ஆனால் உண்மையில் நாம் செலவளிப்பது  40
 ரூபாய் . படித்தவர்களை விட செல்ல்போனைச்  சரியாக பயன்படுத்தத் தெரியாத பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் .

இதற்க்கெல்லாம் என்ன தான் தீர்வு ?

செல்போன், ஒரு எளிமையாக்கப்பட்ட ஒரு தொலைதொடர்பு கருவி அவ்வளவுதான் . பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால் என்ன செய்வோம்  , பணம் அதிகம் இருப்பவர் கவலைப்பட மாட்டார்கள் . ஆனால் , நடுத்தரவர்க்கம் கவலைப்படும் . அந்தப்பொருளின் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்யும் . அது போலத் தான் இதற்கும் . முடிந்தவரை செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் பொன்னான நேரமும் மிச்சம் , உங்கள் பணமும் மிச்சம் ஒரு சில சிட்டுக்குருவிகளும் உயிர் பிழைக்கும் .

Customer Care கு போன் செய்து தற்போது ஏதேனும் சர்வீஸ் இருந்தால் அதை நீக்குங்கள் .தற்போது  ஒரே முறையில் சர்வீசை நீக்க மாட்டார்கள் .மீண்டும் மீண்டும் முயற்சி செய்துதான் நீக்க வேண்டியுள்ளது . 

இரண்டாவதாக Do Not Disturb சர்வீசை உறுதி செய்யுங்கள் . இதைச் செய்தால் உங்களுக்கு செல்போன் நிறுவங்களிடமிருந்து எந்தவிதமான ( Telecommunication call , SMS, Flash SMS ) தொல்லையும் இருக்காது . இவை தான் தற்காலிக தீர்வு . நிரந்தர தீர்வு என்பது செல்போனே பயன்படுத்தாமல் இருப்பது .Do Not Disturbகு 1909 முதலில் START 0(zero) என்று  SMS செய்யுங்கள் . பிறகு Y என்று அதே 1909 கு SMS செய்யுங்கள் . பிறகு அவர்கள் தொல்லை இருக்காது .

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும்( Cell phone causes brain cancer ) !

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது . தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் போது மூளை கேன்சரை உருவாக்குகிறது . பெரியவர்களை விட வயது 1 முதல்  12  வரை உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . காரணம் , அவர்களின் மண்டை ஓடு அந்த வயதில் முழு வளர்ச்சி பெற்று இருக்காது . அதனால் மின்காந்த அலைகள் ( Electro Magnet Waves) அவர்களை அதிகமாக பாதிக்கிறது .முடிந்த வரை  குழந்தைகளை செல்போன் பேச அனுமதிக்காதீர்கள் . 
மொத்தத்தில் முடிந்த அளவிற்கு செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது தான் எல்லோருக்கும் நல்லது !

எல்லோருமே திருடர்கள் தான் !

மேலும் படிக்க :


.........................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms