Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !


வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில....

'னுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '

 - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி.

'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும் 

தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனுமாமே !'


- திருமூலர் , 'கடலுக்கு அப்பால் ' நாவலில் இடம் பெற்றுள்ளது.

லகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேதமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்...'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன்.

ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். '
- காகித மலர்கள் நாவலில் ஆதவன் .

'யற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது .'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன் 

' ன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?
இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் '

- காகிதமலர்கள் நாவலில் ஆதவன் .

'ந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் . மேன்மையடையச் செய்ய முடியும் . ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது .செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது . ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை ,கல்வித் திட்டம் இவை தனி மனித வேட்கைகளை , கனவுகளை ஒடுக்குகின்றன .'

- "காகித மலர்கள் " நாவலில் ஆதவன்.

 'ரீட்சை பாஸாகி, எவனிடமோ வேலைக்குப் போய் மாசச் சம்பளத்துக்கு மாரடித்துக்கொண்டு , காலாகாலத்தில் சுயமாகவோ நிர்ப்பந்திக்கப்பட்டோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , எனக்கு வேண்டிய பிரதிபிம்பங்களை அவர்களிடம் தேடி என்னையும் அவர்களையும் சலிக்கச் செய்துகொண்டு, அவர்களையே நான் தொடர்ந்து உயிர் வாழ ஒரு நோக்கமாக்கிக்கொண்டு , அவர்களும் என்னை அப்படியே ஆக்கிக்கொண்டு , ஒருவரோடொருவர் இறுகப் பிணைத்துக்கொண்டு , இந்தப் பிணைப்பை உன்னதமானதாகக் கற்பித்துக்கொண்டு , அந்தக் கற்பனையின் பளபளப்பு மங்காமலிருக்க எப்போதும் ஏதேதோ வகைப் பாலிஷ்களால் அதன் மேல் தேய்த்துக்கொண்டு... சே, அபத்தம் ,அபத்தம் . வாழ்க்கையே வெறும் அபத்தம். '

- " என் பெயர் ராமசேஷன் " எனும் நாவலில் ஆதவன் .

மேலும் படிக்க :



Sunday, January 31, 2016

செருப்பு தைக்கும் கலை !

செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.

இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.

நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !

மேலும் படிக்க :

மரணத்திற்கும் விலை உண்டு !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
...................................................................................................................................................................

Thursday, December 31, 2015

நானும் நானாக !

நதியும் நதியாக
கடலும் கடலாக
காடும் காடாக
ஊரும் ஊராக
அதுவும் அதுவாக
அவளும் அவளாக
இல்லாத  தேசத்தில்
நானும் நானாக இல்லை  ... !

மேலும் படிக்க :

பிரியாத பிரியங்கள் ...!

நிலவே நீ ஒரு ...!
...................................................................................................................................................................


Tuesday, November 10, 2015

குறி - சிற்றிதழ் !

தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.

சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே கொண்டு வரப்பட்ட இதழானது எந்த அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அடுத்த இதழைக் கொண்டு வருவது மிகவும் சிரமம். எந்தக் கலைப்படைப்பாக இருந்தாலும் விமர்சனமும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது.சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கும் , இடையில் நின்று போவதற்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கக்கூடும். வேறு காரணங்களும் இருக்கலாம்.

குறி சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதா ,வேண்டாமா என்ற குழப்பமான தயக்கத்திலேயே  இதழாசிரியர், மணிகண்டன் இருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடும் முதல் காரணம் , முன்பு கொண்டுவந்த இதழ் பற்றிய பின்னூட்டம் கிடைக்கப் பெறாததே." போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் குறி இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு முயற்சி செய்வேன் " என்று குறிப்பிட்டார் .
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட விசயங்களை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு கலவையாகவே இருக்கிறது .' எந்த ஒரு எழுத்தும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் ' என்று சொல்வார்கள் . குறி சிற்றிதழில் வெளிவந்த படைப்புகள் அவ்வாறாக இடத்தைத் தேடிக் கொண்டவை தான்.   இதன்படி குறி சிற்றிதழும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நமது ஆதரவு இருந்தால் .

குறி சிற்றிதழ் 11 வது இதழ் பற்றி ஒரு பார்வை :

இந்த இதழிலும் பெண்ணியம் ,LGBT , சாதிய எதிர்ப்பு , இயற்கை , நவீனம் ,கவிதைகள் என்று கலவையான விசயங்கள் இடம் பெற்றுள்ளன . மற்ற இதழ்களில் இல்லாத சுதந்திரம் சிற்றிதழ்களில் இருப்பதை மறுக்க முடியாது . அதனால் தான் மற்ற இதழ்களில் வெளியிட இன்னும் தயங்கும் LGBT வகைமையச் சேர்ந்த படைப்புகளை இரண்டாவது முறையாக குறி வெளியிட்டுள்ளது . இதழ் 10 ல் அபிலாஷ் எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்தது . இதழ் 11 ல் ஆர்த்தி வேந்தன் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது .' இந்தியாவின் பிரிடா காலோ ' என்ற தலைப்பில் அம்ரித்தா ஷெர் கில் பற்றி எழுதிய கட்டுரையிது . குறைந்த வயதில் இம்மண்ணை விட்டு மறைந்த ஒரு தனித்த படைப்பாளியின் வரலாறு அது .

செ.லிட்டில் பிளவர் என்பவர்  , 'ஆண்டாள் பிரியதர்ஷினியின் பெண்கள் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி வெளியிட்ட  'வேடிக்கை மனிதர்கள்'  என்ற தொகுப்பில் உள்ள மூன்று கதைகளில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் .

 புலியூர் முருகேசன், ' கருந்துளையின் இரண்டு வழிகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . புனைவின் வழியே சாதிய கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் .

ச.முகமது அலி , 'இயற்கை வழிபாடு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ' இயற்கை விவசாயம் ' என்ற வார்த்தையில் உள்ள முரண் பற்றி பதிவு செய்திருக்கிறார் . இயல்பாக தானாக நடப்பது தானே இயற்கை . விவசாயம் என்பதே இயற்கைக்கு எதிரானது தானே . அப்படி இருக்கும் போது இயற்கை விவசாயம் என்பது முரண் தானே . அதை கேள்வி கேட்டிருக்கிறார் . மாற்று கருத்துகள் இருந்தாலும் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .

அசோக் எழுதியிருக்கும் ' மீரா ' எனும் சிறுகதை நவீன வாழ்வின் ஒரு பகுதியைப் பதிவு செய்திருக்கிறது . சுவாரசியமான சிறுகதை .
     
இந்த இதழில் பல கவிதைகள் உள்ளன . கவிதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அவற்றை விட்டுவிட்டேன்.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
SBK  வளாகம் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:

குறி தனி இதழ் ரூபாய் .15 
பத்து இதழ் சந்தா ரூபாய்.150
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

வலுத்தது நிலைக்கும் ! 
...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms