Saturday, March 26, 2016

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் !


1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...)  ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான்  எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .  

அந்தப் பாடல் :



பாடல் வரிகள் :

 குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! - (உனக்கு

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!

அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு


 வல்லிய வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/

மேலும் படிக்க :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
...................................................................................................................................................................

Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms