Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும் !


திரைப்படங்களை  தங்கள்  வாழ்கையின்  ஒரு  பகுதியாக  கருதும்  சமூகத்தில்  தான்  நாம்  வாழ்ந்து   வருகிறோம் . திரைப்படங்களை  அவ்வளவு  எளிதில்  நம்மிடமிருந்து  பிரிக்க  முடியாது . கடந்த  இரண்டு  வருடங்களாக  நிறைய  நல்ல  தமிழ்ப்படங்களைப்  பார்க்கும்  வாய்ப்பைப்  பெற்று  வருகிறோம்  . அந்த  வகையில்  " எங்கேயும்  எப்போதும் " திரைப்படம்  நம்  திரையுலகை  ஒரு  புதிய  உயரத்தை  நோக்கி   நகர்த்துகிறது  .  

"எங்கேயும்  எப்போதும் " - மிகப்பெரிய  உழைப்பின்  வடிவம்  . படம்  தொடங்குவது  முதல்  படம்  முடியும்  வரை  ஒவ்வொரு நொடியிலும்  உழைப்பு  தெரிகிறது  . மிகச்சிறப்பான  திரைக்கதை  அமைப்பு  ,நல்ல  நடிப்பு , நல்ல  நல்ல  வசனங்கள்  , நல்ல  பாடல்கள்  ,நல்ல  ஒளிப்பதிவு  ,நல்ல படத்தொகுப்பு  என்று  படத்தில்  நிறைய  ' நல்ல  ' இருக்கிறது  . படத்தின்  சூழல் , சமூகத்தின்  சூழலோடு   மிகவும்  நெருங்கி  இருக்கிறது  . சென்னை நகரம்  அவ்வளவு  அழகாக  காட்டப்பட்டுள்ளது  . சென்னையைப்  பிடிக்காமல்  சென்னையில்  வாழ்ந்து  வருபவர்களுக்கு  , இனி  சென்னையைப்  பிடிக்கும் என நம்பலாம் .

அனன்யாவும்  , அஞ்சலியும்  (கொஞ்சம்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  ) அவ்வளவு  அழகு  (நடிப்பிலும் ) . நாடோடிகள்  படமும்  , இந்தப்படமும்  அனன்யாவின் சிறந்த  நடிப்புக்கு  உதாரணம்  . கற்றது  தமிழ்  , அங்காடித்தெரு  வரிசையில்  அஞ்சலியின்  மற்றுமொரு  சிறந்த  படம்  இந்த   " எங்கேயும்  எப்போதும்  " . தொடர்ந்து  இந்த  மாதிரியே  நடிக்கலாமே  அஞ்சலி ! இந்தப்படத்தில்  அஞ்சலி  பேசும்  வசனங்களை  இன்றைய  காதலர்கள்  கவனித்தால்  நல்லது  .

சர்வா ( " காதல்னா  சும்மா  இல்ல  " படத்துல  நடித்தவர்  தானே  ?) மற்றும்  ஜெய் 'யும்  சிறப்பாக  நடித்துள்ளனர் . ஜெய் , இந்த  மாதிரியான  படங்களை  தேர்ந்தெடுத்து  நடிக்கலாம் . சின்ன  சின்ன  கதாப்பாத்திரங்களில்  நடித்தவர்களும்  சிறப்பாக  நடித்துள்ளனர்  . படத்தின்  மிகப்பெரிய பலம்  ஒளிப்பதிவு  மற்றும்  படத்தொகுப்பு . சென்னையைக்  காட்டும்  பொது  நாமும்  சென்னையில்  இருப்பது  போலவும்  , திருச்சியைக்  காட்டும்  பொது  நாமும்  திருச்சியில்  இருப்பது  போலவும்  , பேருந்தைக்  காட்டும்  பொது  நாமும்  பேருந்தில்  இருப்பது  போலவும்  நம்மை  உணர  வைக்கிறது  ஒளிப்பதிவும்  , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான  சூழ்நிலைகளுக்கு   பின்னணி  ஒலி சேர்க்க  இசையமைப்பாளர்  மிகவும்  உழைத்திருக்கிறார்  .அற்புதமான படத்தொகுப்பு  , படத்திற்கு  வேகம்  கொடுக்கிறது .   

உதவி  இயக்குனர்களின்  உழைப்பும்  இந்தப்படத்தில்  தனியாக  தெரிகிறது  . இயக்குனரை  மீறி  அவர்கள்  தெரிவது  அதிசயம்  .கொஞ்சம்  தவறினாலும்  சோகமாக  மாறிவிடக்கூடிய  கதையை  அவ்வளவு   அழகாக , அதேசமயம்  அழுத்தமாக  படம்பிடித்துள்ளனர்  . நல்ல  கதைக்கரு  ,தொய்வே  இல்லாத  திரைக்கதை  , தற்போதைய  சூழலுக்குப்  பொருந்தும்  எளிமை  + இனிமை  வசனங்கள்  , சிறந்த  இயக்கம்  என்று  முதல்  படத்திலேயே  முத்திரை  பதித்து  விட்டார்  , இயக்குனர்  சரவணன்  , உங்களை  வருக  ! வருக  ! என  வரவேற்கிறோம்  .

எங்கேயும்  எப்போதும்  , எதையாவது  கற்றுக்கொள்ள  நமக்கு  வாய்ப்பு  இருக்கிறது  . இந்த   "எங்கேயும்  எப்போதும் " -விழும்   நாம்  (முக்கியமாக  ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள  நிறைய   இருக்கிறது  . வாகனத்தை  ஓட்டும்போது   அதிக  வேகமும்  , செல்போனும்  கண்டிப்பாக  தவிர்க்கப்பட  வேண்டும்  . செல்போனைக்  கூட   தவிர்த்து  விடலாம் ? ஆனால்  வேகத்தைத்  தவிர்க்க  முடியுமா  ? தெரியவில்லை  . இன்றைய  அவசர  வாழ்க்கையில்  வேகத்தை  கவனத்தில்  கொண்டுதான்  நாம்  பேருந்திலேயே  ஏறுகிறோம்  . வேகத்தை  மட்டுமே  தேர்ந்தெடுத்தால்  வேகமாக  போய்ச்  சேர  வேண்டியது  தான்  , பாலிசி  எடுக்க  மறந்து  விடாதீர்கள் ! ?   

இயல்  , இசை  , நாடகம்  மூன்றும்  சேர்ந்தது  தான்  நமது  தமிழ்  மொழி . நாடகத்தின்  மறுவடிவமான  சினிமாவிற்கு  கொடுக்கும்  முக்கியத்துவம்  இயல்  மற்றும்  இசைக்கு  கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின்  அட்டைப்படங்களை  சினிமாக்காரர்களும்  , அரசியல்வாதிகளும்  மட்டுமே  அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில்  ஒருவர்  எவ்வளவு  பெரிய  விருது  வாங்கினாலும்  , பெரிய  சாதனைகள்  செய்தாலும்  கவனிக்கப்படுவதேயில்லை  . இசை  என்றால்  திரையிசை  மட்டும்  தான்  என்ற  அளவில்  சுருங்கி  விட்டது  . எவ்வளவோ  திரைப்படங்கள்  எடுக்கப்படுவது  போல்  , எவ்வளவோ  புத்தகங்கள்  எழுதப்படுவது  போல்  இசையிலும்  எவ்வளவோ  செய்யலாம்  . இயல் , இசை  ,நாடகம்  மூன்றையும்   இதன்  வரிசைப்படியே  கொண்டாடலாம் . இந்த  மூன்றின்  வளர்ச்சியில்  தான்  அடங்கியுள்ளது  நம்  மொழியின்  வளர்ச்சி .

வாழ்க  வளமுடன் ! 

மேலும் படிக்க :


....................................................................... 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms