ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகே ரஹ்மானின் இசையைக் கேட்கிறேன் ( கேட்கிறேன் என்று சொல்ல முடியாது , ரசிக்கிறேன் என்று தான் சொல்ல முடியும் ). ரஹ்மானை ' ரோஜா ' விலிருந்து கேட்பது தான் வழக்கம்.தற்போதும் அப்படியே. இப்போது 'பாய்ஸ்' போய்க் கொண்டிருக்கிறது. இசையில் படிப்படியாக எவ்வளவு பரிமாணங்கள்.வியப்பாக இருக்கிறது. மாறி வந்த வாழ்க்கை முறையும் , இயக்குநர்களும் காரணம் தான் என்றாலும் அந்த பரிமாணங்களை இசையில் கொண்டு வந்ததில் ரஹ்மானின் பெரும் உழைப்பு இருக்கிறது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கத்தை மிக நெருக்கமாக இசையில் கொண்டு வந்திருக்கிறார். இருவருக்குமான அன்பை , காதலை , ஊடலை, கூடலை , பிரிவை, மகிழ்ச்சியை ,துயரத்தை , கொண்டாட்டத்தை என அனைத்தையுமே இசையால் கோர்த்திருக்கிறார். ஒரு தனியறையில் காதல் ததும்ப ததும்ப உருக ரஹ்மானின் இசையே ஏற்றது.
ரசனையான பாடல் வரிகள் , அதற்கேற்றவாறு வருடவோ , துள்ளவோ செய்யும் இசை, ஓரளவிற்கு பொருத்தமான கலவையான குரல் என நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். முன்னெப்போதும் ரஹ்மானின் இசை இந்த அளவிற்கு வசீகரிக்கவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. என்னவாக இருந்தால் என்ன இந்த மார்கழி மாத கூதலுக்கு இதமாக இருக்கிறது ரஹ்மானின் இசை.ஒவ்வொரு திரைப்படத்தின் பாடல்களும் தனி ஆல்பம் போலவே இருக்கின்றன.
ரசனைக்காரனின் ரசனையை ரசித்திருப்போமாக!
( 2017 )
மேலும் படிக்க :
எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


4:22:00 PM
மானிடன்



0 comments:
Post a Comment