Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்
                   கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம்
செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம் 
                   சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம் 
உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்
                   உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம்
சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன்  மீது
                   சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில்  மாறுதலைச்  சாட  வேண்டாம்
                  ஆளுநர்கள்,  முதல்வர்களைப்  பாட  வேண்டாம்
பரிசுதரும்  தலைவர்களைத்  தேட  வேண்டாம்
                   பட்டிமன்றம்  கவிராத்திரி  கூட  வேண்டாம்
வரிச்சுமைகள்,  பெண்ணுரிமை,  தமிழின்  இனிமை
                  வாரொன்று  மென்முலைகள்,  வளையல் சப்தம்
முரசறைந்த   பழந்தமிழர்  காதல்,  வீரம்
                   முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும்  துறந்துவிட்டால்  மிச்சம்  என்ன
                   எழுதுவதற்கு  என்றென்னைக்  கேட்பீர்  ஆயின்
நித்தநித்தம்  உயிர்வாழும்  யத்த  னத்தில்
                  நேர்மைக்கும்  கவிதைக்கும்  நேரம்  இன்றி
செத்தொழியக்  காத்திருக்கும்  மனுசர்  நெஞ்சின்
                  சிந்தனையைக்  கவிதைகளாய்ச்  செய்து  பார்ப்போம்
முத்தனைய *   சிலவரிகள்  கிடைக்கா  விட்டால்
                  மூன்றுலட்சம்  ' ராமஜெயம் '  எழுதிப்  பார்ப்போம் ..!

* ஒரே ஒரு உவமைக்கு மன்னிக்கவும் .
                                                                                                 - சுஜாதா
                                                                                                    14 - 4 -1991
                                                                                                   ஆனந்த விகடன் 

 நண்பர்களே இந்த செய்யுள் அல்லது கவிதை எழுதப்பட்ட வருடத்தைக் கவனிக்கவும் . 1991 !?

நன்றி - ஆனந்த விகடன் .

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 
.....................................................................................................................................................................

3 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுஜாதாவின் கவிதை விமர்சனங்களைப் படித்திருக்கிறேன். அவருடைய கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்.நல்ல செய்யுளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
http://tnmurali.blogspot.com/2012/01/blog-post.html

Suresh Subramanian said...

Thanks to share.. please read my tamil kavithaigal in www.rishvan.com and leave your comments.

தமிழ்த்தோட்டம் said...

அருமை பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms