Saturday, February 11, 2017

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பொன்னான வாய்ப்பு !

மத்தியிலும் சரி , மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மகத்தான வாய்ப்பை காலம் வழங்கியிருக்கிறது. அதற்கு முதலில் முதன்மையான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறுபாடுகளை பேசித்தீர்த்து ஒன்றிணைய வேண்டும். ஒரே கட்சியாக கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட தாங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்களுக்கான எல்லாப் போராட்டங்களிலும் கம்யூனிஸ இயக்கங்களே முன்னிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து தான் மக்கள், இந்துத்துவா கட்சி என்று தெரிந்தே தான் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.மோடியின் குஜராத் மாடல் விளமபரமும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அதிகாரத்தைக் கைபற்ற வாய்ப்பே பெறப்போவதில்லை என்ற மனநிலையில் தான் பாஜகவின் மோடி அரசின் செயல்பாடு இருக்கிறது. குஜராத் என்ற மாநிலம் குறித்து தற்போது ஒரு தகவலும் வெளியே வருவதில்லை. இந்நிலையில் காங்கிரஸ் , பாஜக இந்த இருகட்சிகளுக்கும் மாற்று எதுவும் தேசிய அளவில் புதிதாக உருவாகவில்லை ( ஆம்ஆத்மி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் ). இந்த இருகட்சிகளையும் தவிர்த்து தேசிய அளவில் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் உள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காகத்தான் உழைக்கிறார்கள்.ஆனால் இதுவரை மக்களை நெருங்கிச் செல்லவேயில்லை. இப்போதாவது நெருங்கிச் செல்ல வேண்டும். தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும்.

அடுத்த மாற்றாக இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளும் வலுவில்லாமல் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக்கட்சிகளில் உட்கட்சிபூசல் அதிகமாக உள்ளது. உதாரணம் , தமிழ்நாடு , உத்திரபிரதேசம் etc. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் நிரப்பினால் மக்கள் பயனடைவார்கள். இதை அம்பேத்கரின் வார்த்தைகள் மூலமாகவே நிறைவேற்ற முயலலாம். கற்பி , ஒன்றுசேர் , புரட்சி செய். மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்களை வாசிக்கப் பழக்க வேண்டும். பெரியாரையும் , அம்பேத்கரையும், மார்க்ஸையும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்திய மக்கள், மத்திய , மாநில அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகளால் தர முடியும். ஆனால் இது எளிதல்ல. மிகக்கடுமையாக உழைத்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழகத்தில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியம் தான். சமீபத்திய மெரினா போராட்டம் , மாணவர்களின் , மக்களின் கம்யூனிஸ ஆதரவு மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதற்கு முதலில் இந்த இரு இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.திரைப்படங்களில் கடைசியாக 'சிவப்பு மல்லி ' திரைப்படத்தில் கம்யூனிஸக் கொடியை பார்த்ததாக ஞாபகம்.

தமிழகத்தில் கம்யூனிஸ ஆட்சி என நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது. இது நடக்குமா ? என்று தெரியவில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் தோழர்களின் கையில் !
மீதி காலத்தின் கையில் !
மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !

..................................................................................................................................................................


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms