Monday, March 21, 2011

அனைத்து அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா ?

அரசு செயல்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் ஒட்டுமொத்த மக்கள் நலன் கவனிக்கப்பட வேண்டும் . கட்சி நலன் கவனிக்கப்படக் கூடாது . மக்களுக்காகத் தான் அரசு . கட்சிக்காக அரசு இல்லை . யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் ." டாஸ்மாக் " திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி , " மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை மறந்தது போல் நடக்கக் கூடாது . ஒட்டுமொத்த மக்கள் நலனும் , ஒட்டு மொத்த வளர்ச்சியும் எல்லா காலகட்டத்திலும் கவனிக்கப்பட வேண்டும் . யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு சில விசயங்கள் மாறுவதே இல்லை . எல்லா இடங்களிலும் தரமில்லாத சாலை வசதிகள் , பிரச்சனை குறித்து மனு கொடுக்கப்போகும் போது காட்டும் அலட்சியம் , அரசு வேலைக்கு லஞ்சம் ( மாத சம்பளம்  2000 ஆக இருந்தாலும் சரி , 20000 ஆக இருந்தாலும் சரி )  , அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்று நாம் சந்திக்கும் அவலங்கள் மாறுவதே இல்லை . ஆட்சியை மாற்றுவதை விட , முதலில் இந்த மாதிரியான விசயங்களை மாற்ற வேண்டும் .  

அதற்கு என்ன செய்யலாம் ? . எல்லா அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா பொருத்தி , அனைத்து அரசு அலுவலகங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணித்தால் என்ன ? 

என்ன நடந்தாலும் , எது வந்தாலும் லஞ்சம் வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்கள் அதிகமாக வாழும் தேசம் இது . இவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதற்கு பதில் இதை மட்டுமாவது செய்யலாம் . நாம் கண்காணிக்கப் படுகிறோம் என்று உணர்ந்தால் இவர்களின் வாங்கும் லஞ்சத்தின் அளவு கொஞ்சமேனும் குறையுமல்லவா ! 

நம் ஜனநாயக நாடு இதைச் செயல் படுத்துமா ?
..................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms