Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் !


முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....

ருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !

ம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#‎நவீனமயமாதலோ ! ?

ம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.‪#‎மானிடவாழ்க்கை

யோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!‪#‎அவ்வளவுதான்ஆம்பள

காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #‎மனிதன்ஒருகாரணப்பயல்

ரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தனக்காக சொத்து சேர்க்காதவர்களையும் சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்.பணம் கரைய கரைய பணத்தால் பெற்ற புகழும் கரைந்து தான் போகிறது.ஆனால் , மற்றவர்களுக்காகவும் , குறிப்பிட்ட சில விசயங்களுக்காகவும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நெடுங்காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கிறார்கள். #‎சாதனைவாழ்க்கை

வ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டவே அதிகம் மெனக்கெடுகிறான் ! ‪#‎கிறுக்குப்பய

காதில் விழுந்தது !
( வயது 60 கடந்த கணவன் மற்றும்  மனைவி இன்னொருவருடன் பேசியதிலிருந்து )
கணவன் : அந்தக் காலத்துல நான் அவ்வளவு அழகா இருப்பேன் .
மனைவி : ஆமா , அந்த அழக பார்த்து நாலு கழுத பின்னாடியே வந்துச்சு .

மக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது நமக்குப் பழக்கப்பட்ட பக்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை , பழக்கப்படாத பக்கங்களில் திறந்தே கிடக்கிறது

ந்த தேசத்தில் சாதாரண மனிதர்களுக்கு நீதியே இல்லையா ?
இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , அரசியல்வாதிகளையும் ,     அரசுக்கு நெருக்கமானவர்களையும், பணக்காரர்களையும் நீதி ஒன்றும் செய்யாது . சாதாரண மனிதர்களையும் ,சந்தேக கேசில் பிடிபட்டவனையும் குற்றவாளி ஆக்கி தண்டனை கொடுத்து அழகு பார்க்கும்.என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகளும் செய்யும். இது வரையில் அதிகாரத்தில் இருந்த குற்றவாளிகளையோ அல்லது பணக்காரக் குற்றவாளிகளையோ என்கவுன்டர் என்ற பெயரில் கொலைகள் செய்திருப்பார்களா ? இந்த தேசத்தில் எந்த நம்பிக்கையில் நாம் வாழ்வது ?

வேடிக்கை பார்ப்பவர்களால் கூட தாங்கிக் கொள்ள முடியாத வலிகளையும் வேதனைகளையும் எளிய புன்னகையால் கடந்து செல்பவர்கள் ‪#‎வாழத்தெரிந்தவர்கள்

திர்பாராத நேரத்தில் பெய்யும் மழையைப் போல சற்றும் சம்பந்தம் இல்லாத எளிய மனிதர்கள் நம் மீது காட்டும் அன்பு திளைக்க வைக்கிறது.

ரு குருவிடம் கற்றுக்கொள்வது போல வானம் பார்த்தல் வாயிலாக நாம் கற்றுக் கொள்வது அதிகம் . தொடந்து வானத்தைப் பார்ப்பது தியானம் செய்வதற்கு சமம் . நமது வாழிடங்களில் பெருகிவரும் உயர்ந்த கட்டிடங்களால் வானத்தைப் பார்ப்பது அரிதாகிறது . சூரிய உதய ,மறைவைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது . எப்படி இருந்தாலும் ,எங்கு இருந்தாலும் வானம் பாருங்கள் ! வானம் பாருங்கள் !  

பெற்றோர் படித்த பள்ளிக்கூடத்திலேயே படிக்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை , கிடைத்தாலும் வாய்ப்பு 
மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க :

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms