Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !


வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில....

'னுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '

 - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி.

'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும் 

தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனுமாமே !'


- திருமூலர் , 'கடலுக்கு அப்பால் ' நாவலில் இடம் பெற்றுள்ளது.

லகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேதமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்...'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன்.

ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். '
- காகித மலர்கள் நாவலில் ஆதவன் .

'யற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது .'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன் 

' ன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?
இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் '

- காகிதமலர்கள் நாவலில் ஆதவன் .

'ந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் . மேன்மையடையச் செய்ய முடியும் . ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது .செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது . ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை ,கல்வித் திட்டம் இவை தனி மனித வேட்கைகளை , கனவுகளை ஒடுக்குகின்றன .'

- "காகித மலர்கள் " நாவலில் ஆதவன்.

 'ரீட்சை பாஸாகி, எவனிடமோ வேலைக்குப் போய் மாசச் சம்பளத்துக்கு மாரடித்துக்கொண்டு , காலாகாலத்தில் சுயமாகவோ நிர்ப்பந்திக்கப்பட்டோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , எனக்கு வேண்டிய பிரதிபிம்பங்களை அவர்களிடம் தேடி என்னையும் அவர்களையும் சலிக்கச் செய்துகொண்டு, அவர்களையே நான் தொடர்ந்து உயிர் வாழ ஒரு நோக்கமாக்கிக்கொண்டு , அவர்களும் என்னை அப்படியே ஆக்கிக்கொண்டு , ஒருவரோடொருவர் இறுகப் பிணைத்துக்கொண்டு , இந்தப் பிணைப்பை உன்னதமானதாகக் கற்பித்துக்கொண்டு , அந்தக் கற்பனையின் பளபளப்பு மங்காமலிருக்க எப்போதும் ஏதேதோ வகைப் பாலிஷ்களால் அதன் மேல் தேய்த்துக்கொண்டு... சே, அபத்தம் ,அபத்தம் . வாழ்க்கையே வெறும் அபத்தம். '

- " என் பெயர் ராமசேஷன் " எனும் நாவலில் ஆதவன் .

மேலும் படிக்க :



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms